காசா திட்டுப் பகுதியில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது என்று பாலஸ்தீன நிர்வாக அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் வேலையின்மை விகிதம் 50 விழுக்காட்டைத் தொட்டி ருக்கிறது. வேலை பார்க்கும் தகுதியுள்ளவர்களில் 2 லட் சத்து 50 ஆயிரம் பேர் வேலையில்லாமல் இருக்கிறார் கள். உலகிலேயே மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை யைக் கொண்டிருக்கும் பகுதிகளில் ஒன்றான காசாத் திட்டு, உலகிலேயே அதிகமான வேலையின்மையைக் கொண்ட பகுதியாகவும் இருக்கிறது.
பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளாமல் இருந் தால் வண்டியைத் தவற விட்டு விடுவீர்கள் என்று ஸ்விட்சர்லாந்துக்கு பிரான்ஸ் எச்சரிக்கை விடுத்துள் ளது. இது குறித்துக் கருத்து தெரிவித்த ஸ்விட்சர்லாந் துக்கான பிரான்ஸ் தூதர் பிரெடரிக் ஜர்னஸ், “ஐரோப் பிய யூனியனுடனான பேச்சுவார்த்தையில் ஸ்விட்சர் லாந்து கலந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே போட்ட உடன்பாட்டை ஸ்விஸ் அரசு நிராகரித்து விட்டது. மீண்டும் பேச்சுவார்த்தையை நடத்துவது நல்லது” என்று குறிப்பிட்டுள்ளார்.
வளைகுடா நாடுகளுடனான உறவு பற்றி அனைத்துக் கட்சிகளும் விவாதிக்க வேண்டும் என்று லெபனானின் பிரதமரான நஜிப் மிகாதி கோரி யுள்ளார். அரபு நாடுகளுடனான, குறிப்பாக வளைகுடா நாடுகளுடனான உறவை பலப்படுத்துவது குறித்த ஒரு புரிதலை உருவாக்க வேண்டும். இந்தப் பகுதியில் உள்ள பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விலகி நின்று அரபு நாடுகளுடனான உறவு வளர்க்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.