- ஒரு மாத போரில் உக்ரைனுக்கு ஏற்பட்ட இழப்புகள்: உயிரிழந்த வீரர்கள்-14,000/காயம்-16,000/ மொத்தம் 30,000(22%)/டாங்கிகள்-1587(65%)/கவச வண்டிகள்-636(41%)/ சிறிய ஏவுகணை ஏவும் வாகனங்கள்-163(29%)/ விமானங்கள்-112(73%)/ ஹெலிகாப்டர்கள்-75(50%)/ ஆளில்லா தாக்குதல் விமானங்கள்-35(97%)-ராடார் மையங்கள்-117(39%)/வான் தாக்குதல் முறியடிப்பு மையங்கள்-180(42%).m ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையில் உக்ரைன் சில பகுதிகளை விட்டுக்கொடுப்பது என்பது அந்த நாட்டின் முடிவு எனவும் அதில் தான் கருத்து சொல்ல விரும்பவில்லை எனவும் ஜோ பைடன் கூறியுள்ளார். உக்ரைனின் கிழக்கு பகுதியான டோன்பாஸ் பகுதியில் உள்ள இரு குடியரசுகளை சுதந்திர நாடுகளாக உக்ரைன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது ரஷ்யாவின் ஒரு முக்கிய நிபந்தனை ஆகும். ஜோ பைடனின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததன் விளைவாக அமெரிக்காவின் ஃபுளோரிடா பல்கலைக்கழகம் தனது ஒரு அறைக்கு வைத்திருந்த காரல் மார்க்சின் பெயரை நீக்கிவிட்டது. அட முட்டாள்களா! ரஷ்யா மார்க்ஸை பின்பற்றும் தேசமும் இல்லை; மார்க்ஸ் ரஷ்யரும் இல்லை. அவர் ஜெர்மானியர். தன்னை “உலகத்தின் குடிமகன்” என அழைத்துக் கொண்டவர்.
- அமெரிக்காவில் கோவிட் காரணமாக இன்றும் தினசரி 1000 பேர் உயிரிழந்து வருகின்றனர். மருத்துவ பாதுகாப்புக்கு 13 பில்லியன் டாலர்கள் கொண்ட பட்ஜெட்டை நாடாளுமன்றம் நிராகரிக்கிறது. ஆனால் உக்ரைன் போருக்கு 15 பில்லியன் டாலர்கள் தரப்படுகின்றன. அமெரிக்க ஏழைகளின் உயிர்களைவிட போருக்கு முக்கியத்துவம் தரும் அவலநிலை என பிரேட்லி பிலாக்கன்ஷிப் எனும் பத்திரிகையாளர் சாடியுள்ளார்.
- ரஷ்யா மீது வர்த்தக தடைகளை விதிக்கப்போவது இல்லை என வியட்நாம்/ மலேசியா/ துருக்கி/ தென் ஆப்பிரிக்கா போன்ற பல தேசங்கள் அறிவித்துள்ளன. வர்த்தக தடை விதிப்போம் ஆனால் ரஷ்ய ஊடகங்களுக்கு தடை விதிக்க மாட்டோம் என சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது.
- ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்று உறுப்பினர்கள் ஜெர்மனி/ஆஸ்திரியா/ஹங்கேரி ஆகியவை ரஷ்யாவுக்கு எதிரான முழு வர்த்தக தடைகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளன என போலந்து பிரதமர் மடேவுஸ் மொரவெய்க்கி குற்றம்சாட்டியுள்ளார்.
- ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுத்தப்பட்டால் அதற்கு ஈடாக வேறு எந்த தேசமும் அவ்வளவு எரிசக்தியை தர இயலாது எனவும் அந்த திறன் ரஷ்யாவுக்கு மட்டுமே உள்ளது எனவும் கத்தார் தெரிவித்துள்ளது.
- ஒரு நாளைக்கு 1000 ஏவுகணைகள் தந்தால்தான் ரஷ்யாவின் தாக்குதலை சமாளிக்க முடியும் என உக்ரைன் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது.
- ரஷ்யாவுக்கு சிக்கல் தர அடுத்த கட்டமாக அந்த நாட்டின் தங்கத்தை முடக்கலாம் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆலோசனை கூறியுள்ளார். அதற்கு பதிலளித்த ரஷ்யா எங்களின் தங்கம் முழுவதும் பத்திரமாக மத்திய வங்கியில் உள்ளது என கூறியுள்ளது.
- பல ஆண்டுகளுக்கு பிறகு வெனிசூலாவில் அமெரிக்க எண்ணெய் நிறுவனமான செவ்ரோனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. ரஷ்யாவின் எண்ணெய் நிறுத்தப்படுவதால் வெனிசூலாவிடமிருந்து அதனை பெற அமெரிக்காவுக்கு நிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. வெனிசூலாவை இன்னும் அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ரஷ்ய படைகளின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த 127 பாலங்களை உக்ரைன் படை அழித்துள்ளது.