சென்னை, ஜன. 1- மாணவர்களை சூரிய நமஸ்காரம் செய்ய வலியுறுத்தி பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை அனுப்பி யதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: யுஜிசி என்னும் யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் சுற்றறிக்கை ஒன்றினை இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பி யுள்ளது. நாட்டின் சுதந்திர விழாவின் 75ஆம் ஆண்டை யொட்டி ஜனவரி 1 முதல் பிப்ரவரி 7 ஆம் தேதி வரை மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டுமாம். கல்வித்துறை உயரதிகார அமைப்பு அறிவியலுக்கு விரோத மாக, புராண மூடத்தனத்தை சுமந்து, அதனை மாணவர்கள் தலையில் கட்டுவது அடி முட்டாள்தனமும், அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமுமாகும். இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ(எச்) என்ற பிரிவு, விஞ்ஞான மனப்பான்மையை யும், சீர்திருத்த உணர்வையும் வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று வலியுறுத்துகிறது. எனவே அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமான இந்த அறிவிப்பை விலக்கிக் கொள்ளவேண்டும். அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக நடந்துகொண்டுள்ள பல்கலைக் கழக மானியக் குழுவின்மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.