கரூர், ஜன.19 - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில், “பல்கலைக் கழக மானியக் குழு வகுத்துள்ள புதிய வரைமுறைகளும் அதன் தாக்கமும்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலு வலகத்தில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் வி.எஸ்.பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலா ளர் ஐ.ஜான்பாட்ஷா வரவேற்றார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் துவக்கி வைத்துப் பேசினார். சாகித்ய அகாடமி விருதாளர் ஆயிஷா இரா.நடராசன் சிறப்புரையாற்றுகையில், “பல்கலைக்கழக மானியக் குழு வகுத்துள்ள புதிய வரை விதிகள் கல்வியை முற்றி லும் ஒழித்து ஏழை, எளிய மக்களின் கல்விபெறும் உரிமையை பறித்து குலக் கல்வியை கொண்டு வரும். அதேபோல் குலத் தொழிலை தொடங்க வங்கி மூல மாக கடன் வழங்கி, கல்வி கற்பதை நிறுத்து வதற்கு ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்கலைக்கழக மானியக் குழு வகுத்துள்ள புதிய வரை விதிகள் அனைவரும் கல்வி கற்கும் உரிமைகளை பறிக்கும் வகையில் உள்ளது. இதனை அனைவரும் புறக் கணித்து, தடுத்து நிறுத்த வேண்டும்” என்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பொன் ஜெயராம், ஜெ.ஜெயராஜ், எம்.சுப்பிர மணியன், கே.சக்திவேல், சிவராம கிருஷ்ணன், திலகவதி உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் ஆ.தமிழரசி நன்றி கூறினார்.