சென்னை, ஏப். 13 - ‘கோ பேக் மோடி அல்ல, தேர்தலோடு கெட் அவுட் மோடி’ என்று விரட்டி அடிப் போம் என திமுக இளை ஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
மத்திய சென்னை மக்கள வைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமாற னுக்கு வாக்கு கேட்டு சனிக் கிழமையன்று (ஏப்.13) திருவல்லிக்கேணி தொகுதி யில் திறந்த வேனில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார். சிந்தாதரிப்பேட்டை, ராயப்பேட்டை ஆகிய இடங் களில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில் அவர் பேசினார்.
திமுக அரசு பொறுப் பேற்று செயல்படுத்தி திட்டங்களை பட்டியலிட்டு பேசிய அவர், தமிழ் நாட்டிற்கு உரிய நிதி ஒதுக்க ஒன்றிய அரசு மறுப்பதை சுட்டிக்காட்டிய அவர், “தமிழ்நாட்டிற்கு மோடி வரும்போதெல்லாம் ‘கோ பேக் மோடி’ என்போம். இந்த தேர்தலோடு ‘கெட் அவுட் மோடி’ என்று விரட்டி அடிப்போம். மாநில உரிமை களை மீட்க இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும். மத்திய சென்னையில் வேட்பாளர் தயாநிதி மாறனை எதிர்த்து போட்டியிடுகிற அனை வரையும் டெபாசிட் இழக்க செய்வோம்” என்றார்.
இந்த பிரச்சாரத்தில் திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, தொகுதி பொறுப்பாளர் சி.எச்.சேகர், எழிலன் நாகநாதன் எம்எல்ஏ, சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலா ளர் ஜி.செல்வா, சேப்பாக் கம்-திருவல்லிக்கேணி பகுதிச்செயலாளர் ஆர்.கபாலி, துறைமுகம் பகுதிச் செயலாளர் ஜலாலுதீன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.