தூத்துக்குடி, டிச.22- பெருமழையால் நிறுத்தப்பட்ட சென்னை – தூத்துக்குடி இடையிலான ரயில் போக்குவரத்து 4 நாட்களுக்கு பிறகு வெள்ளியன்று தொடங்கியது. வியாழனன்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட முத்துநகர் விரைவு ரயில் வெள்ளி யன்று காலை 6.15 மணியளவில் தூத்துக்குடி வந்தடைந்தது. சென்னை எழும்பூர்-தூத்துக்குடி செல்லக்கூடிய முத்துநகர் எக்ஸ்பிரஸ் வழக்கம் போல இயக்கப்பட்டது. திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் ரயில் சேவை யில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் – எழும்பூர் விரைவு ரயில் திருநெல்வேலியில் இருந்து இரவு 9.35 மணிக்கு புறப்படும். திருச்செந்தூர் – பாலக்காடு செல்லும் ரயில் மதியம் 1.30 மணிக்கு நெல்லையில் இருந்து புறப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எழும்பூர் – திருச்செந்தூர் செல்லும் ரயில் திருநெல்வேலி யுடன் நிறுத்தப்பட்டு பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. பாலக்காடு-திருச்செந்தூர் செல்லும் விரைவு ரயில் திருநெல்வேலியில் பகுதியளவு ரத்து செய்யப்படும். ஸ்ரீ வைகுண்டம் செய்துங்க நல்லூர் ரயில்நிலைய தண்டவாள பனியால் 2 நாட்களுக்கு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வெள்ளி, சனி (டிச.22,23) நெல்லை-திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லை-தூத்துக்குடி, திருச்செந்தூர்-நெல்லை முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வாஞ்சிமணியாச்சி-திருச்செந்தூர் முப்பதி வில்லா ரயில் நெல்லை-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.