tamilnadu

img

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மதுரை:
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சிபிஐ தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை சிபிஐ  செப்டம்பர் 15-ஆம் தேதி தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ இயக்குநர் சார்பாக சிறப்புக்குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பா ளர் ரவி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கைசிபிஐக்கு மாற்றியும், நான்கு மாதங் களில் விசாரணையை முடிக்கவும் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.  
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப் பட்ட 222 வழக்குகளையும் ஒரே வழக்காகப் பதிவு செய்து சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. 
அதனடிப்படையில் அக்டோபர் 8-ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.தற்போது வரை 160 தொழில்நுட்பம் தொடர்பான ஆவணங்கள் ஆய்விற்காக அனுப்பப்பட்டு, அதில், 100
ஆவணங்களுக்கு பதில் கிடைக்கப் பெற்றுள்ளது. 300 நபர்களிடம் விசாரணை செய்யப்பட்டு 316 ஆவ ணங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.  துப்பாக்கிச்சூடு நாளன்று நடை பெற்ற நிகழ்வுகள், அதற்கான காரணம்,அனுமதி பெறாமல் கூடியது, அவர்களிடம் ஏதேனும் ஆயுதங்கள் இருந்ததா? 

மையப்பொருள் என்ன? என்பது குறித்துவிசாரிக்கப்பட வேண்டும். எனவே இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்ய,  வழங்கப்பட்ட காலத்தை ஜூன்- 30 ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும்” எனக் கூறியிருந்தார்.இந்த வழக்கு வியாழனன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின் படி சிபிஐ விசாரணை நடத்தி செய்து வருகிறது. இதுவரை இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்னும் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் விசாரணை செய்ய வேண்டி உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கண்ணன், சி.பி.ஐ விசாரணைக்கு நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் முடிந்து ஆறு மாதங்களுக்குமேலாகிவிட்டது. எனவே மீண்டும் கால அவகாசம்  தேவையில்லை என்று வாதிட்டார். இதனைத்தொடர்ந்து நீதிபதிகள், சிபிஐ விசாரணைக்கு குறிப்பிட்ட கால அவகாசம் நிர்ணயம் செய்ய முடியாது என பல்வேறு உச்சநீதிமன்றத் தீர்ப்புகள்உள்ளன. ஆகையால், இந்த வழக்கி லும் விசாரணையை முடிப்பதற்கு கால அவகாசம் நிர்ணயம் செய்யமுடியாது. சிபிஐ தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை செப்டம்பர் 15-ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

;