tamilnadu

img

பன்முகத்தன்மை கொண்டவர் தோழர் அ.ரங்கராஜன்

சென்னை, ஜன. 20- இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர்  அ.ரங்கராஜன் (70)  சென்னையில் வியாழனன்று (ஜன. 19) காலமானார்.   விருகம்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது   உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தி யக் குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பி.சம்பத், பெ.சண்முகம், மாநிலக் குழு  உறுப்பினர்கள் ஐ.ஆறுமுக நயினார், வெ.ராஜசேகரன், பா.சுந்தர்ராஜன், கே.சுவா மிநாதன், ஜி.செல்வா, ஆர்.வேல்முருகன், சிபி எம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஏ.பாக்கி யம், ச.லெனின், இரா.முரளி,  முருகேஷ் ஆகியோர் மலர் அஞ்சலி செலுத்தினர். இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய செயலாளர் கே.கிரு ஷ்ணன், இணைச் செயலா ளர் சி.பி.கிருஷ்ணன், துணைத் தலைவர் ராஜகோ பால், செயலாளர் பிரேம லதா, இந்திய வங்கி ஊழி யர் அசோசியேஷன் செயல் தலைவர் பி.ஆர்.உண்ணி கிருஷ்ணன், மாநிலத் தலை வர் எஸ்.சுனில்குமார், பொதுச் செயலாளர் டி.ரவிக் குமார், முன்னாள் மாநிலத் தலைவர் மு.சிவராமன், அகில இந்திய வங்கி அதி காரிகள் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் ஈஸ்வரன்.  சர்வேசன், சிட்டிபாபு (பிஎஸ்என்எல்), செந்தில் குமார், ரமேஷ்குமார் (இன் சூரன்ஸ் ஊழியர் சங்கம்), ஆனந்தன் (பொதுகாப்பீடு), கூட்டுறவு சம்மேளன தலைவர் தமிழரசு, எழுத்தாளர் பாரதி கிருஷ்ண குமார், வி.பா.கணேசன், ராஜன் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டு மலர்  வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பிறகு, அவரது உடல்  நெசப்பாக்கம் மின் மயா னத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 20) தகனம் செய்யப் பட்டது. அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் பேசுகையில், “தோழர் ரங்கராஜன் மிகவும் எளிமையானவர். பன் முகத்தன்மை கொண்டவர். ஊழியர்களிடம் குடும்ப உறுப்பினர்களைப் போல் பழகுவார்” என்றனர். உலகமயம், தனியார்ம யம், தாராளமயம் கொள்கை  இந்தியாவில் அமல்படுத் திய காலக்கட்டத்தில் பொதுச் செயலாளராக இருந்து கடும் சவால்களை எதிர்கொண்டு சங்கத்தை பலப்படுத்தினார். அந்த  கொள்கைகளின் பாதிப்பு களை மிகவும் எளிமையாக ஊழியர்களிடம் விளக்கு வார் என்றும் தலைவர்கள்  தெரிவித்தனர். எப்போதும் இயக்கப் பணிகளில் தன்னை முன்னி லைப்படுத்த மாட்டார். அமைப்பைத்தான் முன்னிலைப்படுத்துவார். வங்கி ஊழியர்களை திரட்டுவது மட்டுமல்லா மல் சாதாரண உழைப்பாளி மக்களை திரட்டுவதிலும்  பெரும் பங்காற்றினார். குடும்ப உறுப்பினர்களிட மும் அரசியல், தொழிற்சங்க நடவடிக்கைகள், சமூக அவ லங்கள் குறித்து பேசுவார். தனது மகளுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து  வைத்தவர். தனது இறுதி மூச்சு வரை சங்கப் பணி களையும், கட்சிப் பணிகளை யும் மேற்கொண்டார். அவர்  விட்டுச் சென்ற பணிகளை  தொடர்ந்து முன்னெடுப் போம் என்றும் தெரிவித்த னர். தோழர் ரங்கராஜனுக்கு பரிமளா என்ற மனைவியும், அரவிந்த், ராம்ஜி என்ற மகன்களும், நித்யா என்ற மகளும் உள்ளனர்.