சென்னை, பிப். 5- மறைந்த பிரபல பின்னணி பாடகியான வாணி ஜெயராம் உடலுக்கு தமிழ்நாடு முதல மைச்சர் முக.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 19 மொழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் வாணிஜெயராம். இவர் சிறந்த பின்னணி பாடகிக்காக 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார். சமீபத்தில் கூட ஒன்றிய அரசு அவருக்கு பத்மபூஷன் விருது அறிவித்திருந்தது. பிரபல பின்னணி பாடாகியாக வலம் வந்த வாணி ஜெயராம் சனிக்கிழமை (பிப். 4) உயிரிழந்தார். நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு திரை யுலகினர், பாடல் ஆசிரியர்கள், இசையமை ப்பாளர்கள், கவிஞர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் வாணி ஜெயராம் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், வாணிஜெயராம் மறைவு தமிழ் திரை உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பிறந்து 19 மொழிகளில் பல்வேறு பாடல்களை பாடி புகழ்பெற்ற அவர், 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாடல்கள் பாடி சரித்திர சாதனை படைத்துள்ளார். அண்மையில் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வந்து ள்ளது. ஆனால் பத்மபூஷன் விருதை வாங்குவதற்கு முன்னதாக எதிர்பாராத நிலை யில் அவர் மறைந்துள்ளார். அவரது மறை விற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் முதலமைச்சர் தெரி வித்தார்.
தகனம்
பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பெசன்ட் நகர் மயானத்தில் அரசு மரியாதைகளுடன் காவல்துறையின் 30 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.