tamilnadu

img

ஊரக வேலையில் பழங்குடியினர் பிளஸ் திட்டம்

திருவனந்தபுரம், ஜன.30- கேரளாவில் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் உள்ள பழங்குடியின பிளஸ்  திட்டத்தில் பழங்குடியின தொழிலாளர் களுக்கு கூடுதல் வேலைவாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. ஒன்றிய அரசு வழங்கும் வேலை  நாட்களுடன் கூடுதலாக 15,287 குடும்பங் களுக்கு 3,58,000 வேலை நாட்கள் வழங்கப் பட்டுள்ளதாகவும் கேரள உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.வி.கோவிந்தன் தெரிவித்தார். இந்த ஆண்டு குடும்பங்களுக்கு அதிகபட்ச மாக 200 வேலை நாட்கள் வழங்கப்பட வேண் டும் என்றும் அமைச்சர் உத்தரவிட்டார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் 32ஆவது மாநில வேலை  உறுதித் திட்ட கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் மேலும் பேசியதாவது:  பழங்குடியினர் பிளஸ் திட்டத்தை, பட்டியல் பழங்குடியினரின் ஊதியத்தில் நிலுவை இல்லாமல் செயல்படுத்த, வேலை வாய்ப்பு உறுதி ஆணையமும், பழங்குடி யினர் துறையும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக  வேலை உறுதியளிப்பு பணிக்கு பழங்குடி யினர் பிளஸ் திட்டத்தின் முதல் தவணை யாக ரூ.10 கோடியை மாநில அரசு வழங்கி யுள்ளது. அடுத்த தவணையாக ரூ.9.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயநாடு, இடுக்கி, காசர்கோடு, பாலக்காடு மாவட்டங்களில், பழங்குடியின தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மேலும் பலருக்கு வேலை வாய்ப்பும் கூலியும் வழங்கப்பட்டது தொடரும். குடும்பஸ்ரீ உதவியுடன் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்றார் அமைச்சர். கொரோனா நெருக்க டியால் பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பில் பெரும் தாக்கம் ஏற்பட்டது. ஆனாலும், கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட 10 கோடியே 23 லட்சம் வேலை நாட்களை விட அதிகமான வேலை நாட்களை உருவாக்கும் திறன் அரசிடம் இருந்துள்ளது. ஒன்றிய அரசால் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ள 8 கோடியே 36 லட்சம் வேலை நாட்களில் 95 சதவிகிதத்தை கேரளம் பயன்படுத்தியுள்ளது. இந்த பின்னணியில் திருத்தப்பட்ட தொழிலாளர் பட்ஜெட்டை ஒன்றிய அரசிடம் கேரளம் சமர்ப்பிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.