tamilnadu

2ஆம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவில்லாமல் பயணம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை, டிச. 30- 41 ரயில்களில் அமர்ந்து செல்லும் வகை யிலான இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் மீண்டும் முன்பதிவில்லாமல் பயணம் செய்ய லாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை யாக, ரயில்களில் மாற்றுத்திறனாளிக ளுக்கான வசதிகளுடன் கூடிய இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்க வேண்டும் என்று அறி விக்கப்பட்டது. இந்நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, இந்தப் பெட்டிகள் அனைத்தும் முன்பதிவில்லா பெட்டிகளாக மாற்றப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 1ஆம் தேதி முதல் 39 ரயில்களில் முன்பதிவு செய்யாமல் பயணம் செய்ய முடியும். மங்களூர் - நாகர்கோவில் இடையேயான ரயிலில் வரும் 4ஆம் தேதி முதலும், சென்னை - கோவை இடை யேயான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸில் 14ஆம்  தேதி முதலும் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.