185 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பிலிருந்து அய்யா வைகுண்டரை திருவிதாங்கூர் மன்னரின் ஆட்கள் கைது செய்து திருவனந்தபுரத்திற்கு இழுத்துச் சென்றதை நினைவுகூரும் வகையில் பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில் நடைபெற்ற மகாயாத்திரை நடைபெற்றது. யாத்திரைக்கு பார்வதிபுரம் சந்திப்பில் அய்யா வைகுண்டர் பாரம்பரியம் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது. நிகழ்வில் என்.முருகேசன், எஸ்.எஸ்.சந்திரன், என்.எஸ்.கண்ணன், டி.நாகராஜன், மணி, மலைவிளை பாசி, கே. மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.