மதுரை:
மத்திய அரசு கொரோனா பேரிடர்கால நிவாரண தொகை ரூ.7,500 அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கவேண்டும், அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியார் கார்ப்ரேட் முதலாளிகளுக்கு விற்பனை செய்யும் முயற்சியினை மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும். விவசாயம் மற்றும்விவசாய தொழிலாளர்களை பாதிக்கும் வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும். தொழிலாளர் நல திருத்த சட்ட மசோதாவை அமலாக்கும் முயற்சியினை கைவிட வேண்டும். புதிய பென்சன் திட்டத்தைகைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறும் நவ. 26 அகில இந்திய வேலைநிறுத்த விளக்க மற்றும் 14வது ஊதிய ஒப்பந்தபேச்சுவார்த்தை நிலை குறித்து விளக்ககருத்தரங்கம், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பழங்காநத்தம் ஜேஆர்டி மகாலில் திங்களன்று எல்பிஎப் மதுரை மாவட்ட பொதுச் செயலாளர் வி.அல்போன்ஸ் தலைமையில் நடைபெற்றது.இதில் சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க மாநிலபொதுச் செயலாளர் கே. ஆறுமுகநயினார், எல்பிஎப் மாநில நிர்வாகி நடராஜன், எம்எல்எப் மாநில தலைவர் ஆவடி அஞ்சரிதாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர், அரசு போக்குவரத்துதொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஏ. கனகசுந்தர் நன்றி கூறினார். இதில் ஏஐடியுசி பொதுச் செயலாளர் எம். நந்தாசிங், டிடிஎஸ்எப் பொதுச் செயலாளர் சம்பத், ஏஐஎல்எல்எப் சங்க நிர்வாகி முத்தையா, எச்எம்எஸ் சங்க நிர்வாகி ஷாஜகான், எம்எல்எப்மாநில துணை பொதுச் செயலாளர் மகபூப்ஜான் மற்றும் டியூசிசி, திராவிடர் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டு மதுரை, திண்டுக்கல், விருதுநகர், காரைக்குடி ஆகிய கோட்ட தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.