சென்னை, நவ.7– உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி அக விலைப்படி உயர்வு வழங்க கோரி திங்களன்று (நவ.7) தமிழகம் முழு வதும் போக்குவரத்து ஓய்வூதியர் கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் சுமார் 86 ஆயிரம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதி யர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கவில்லை. எனவே, முடக்கி வைக்கப்பட்டுள்ள அக விலைப்படி உயர்வை வழங்க கோரி உயர்நீதிமன்றத்தில் தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு வழக்கு தொடர்ந்தது. அதனை விசா ரித்த நீதிமன்றம் அகவிலைப்படி யை வழங்க உத்தரவிட்டது. அதனை அரசு வழங்கவில்லை. இதனை கண்டித்து 8 போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகங்கள் மற்றும் காரைக்குடி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதன் ஒருபகுதியாக சென்னை யில் மாநகர போக்குவரத்துக் கழக தலைமையகமான பல்லவன் இல் லம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.