tamilnadu

img

நாளை மீண்டும் பேச்சுவார்த்தை

சென்னை, ஜன. 5 - போக்குவரத்து தொழிற்சங்கங் களுடன் ஞாயிற்றுக்கிழமை ( ஜன.7) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். காலிப் பணியிடங்களை நிரப்ப  வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செலவுக்கும் வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்கி  வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழி யர்களுக்கு 100 மாதங்களாக வழங்கப் படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிப் படி புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் ஆகிய 6 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி டிச.19 அன்று போக்குவரத்து அனைத்து தொழிற் சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல சங்கங்களின் கூட்டமைப்பு, அண்ணா தொழிற்சங்க பேரவை (ஏடிபி) தலை மையிலான கூட்டமைப்பு ஆகியவை தனித்தனியாக வேலை நிறுத்த அறிவிப்பை வழங்கின. இதையடுத்து ஜன.3 அன்று தொழி லாளர் தனி இணை ஆணையர் முன்னி லையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட சமரசப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து சிஐ டியு மற்றும் ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு, ஏடிபி தலைமையிலான கூட்டமைப்பும் இணைந்து ஜன.9 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தன. பொங்கலுக்குப் பிறகு பேச்சுவார்த்தை என்ற அமைச்சரின் அறிவிப்பையும் நிராகரித்தனர். இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டி உள்ளிட்டோருடன் வெள்ளியன்று (ஜன.5) தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பல்லவன் இல்லத்தில் தொழிற்சங்கங்களுடன் அவசர பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அ. சவுந்தரராசன், கே. ஆறுமுக நயினார் (சிஐடியு), கி.நடராஜன் (தொமுச), கம லக்கண்ணன் (அண்ணா தொழிற் சங்க பேரவை) உள்ளிட்ட 20 தொழிற் சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தி யாளர்களிடம் அமைச்சர் கூறுகையில், “தொழிற்சங்கங்கள் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற கூடுத லாக நிதி தேவைப்படுகிறது. நிதித்துறை யுடன் பேசி முடிவை தெரிவிக்க ஒரு நாள் கால அவகாசம் கோரியுள்ளோம். எனவே ஞாயிறன்று (ஜன.7) மீண்டும் பேச்சுவார்த்தை நடை பெறும்” என்றார். தயாரிப்பு பணிகள் நடக்கும்: அ.சவுந்தரராசன் இந்நிலையில், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறியதாவது: பணியில் உள்ள தொழிலாளர் களுக்கு 4 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்கவில்லை. அதை உடனே வழங்க வேண்டும். ஓய்வூதி யர் அகவிலைப்படி நிலுவை எத்த னை தவணைகளில் வழங்குவது என்ப தெல்லாம் பிறகு பேசலாம். ஒவ்வொரு ஓய்வூதியருக்கும் மாதம் 4 ஆயிரம் முதல் 7 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்படு கிறது. அகவிலைப்படி பிரச்சனை தீர்வுக்கு கொண்டு வர ஓய்வூதியர் களுக்கு இந்த மாதத்தில் இருந்து அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அமைச்சர் கூறிய சமரசங்களை ஏற்கவில்லை. அதன் பிறகு அமைச்சர் ஒரு நாள் அவகாசம் கோரினார்.  ஜன.7 அன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவித்தார். இது  ஒரு புறம் இருக்க வேலைநிறுத்த தயாரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும். அமைச்சரின் பதிலை தொடர்ந்து ஆலோசித்து முடிவு எடுக்க ப்படும். இவ்வாறு அவர் கூறினார்.