tamilnadu

img

தீக்கதிர் நாளிதழுக்கு ரூ.1 லட்சம் நன்கொடை மொழிபெயர்ப்பாளர் கே.சதாசிவன் வழங்கினார்

சென்னை, ஜூன் 1 - ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் 25 ஆண்டுகள் பணியாற்றி, அதிலிருந்து விலகிய சுதீஷ் மின்னி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.  மலை யாள மொழியில் அவர் எழுதிய நூலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்லாவரம் தொகுதிக்குழு உறுப்பினர் கே.சதாசிவன், ‘நரக மாளிகை’ என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்தார். இந்த நூலின் மூன்றாவது பதிப்பில் கிடைத்த ஒரு லட்சம் ரூபாயை தீக்கதிர் நாளிதழுக்கு வளர்ச்சி நிதியாக வழங்கும் நிகழ்வு செவ்வாயன்று (மே 31) கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. நிதியை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம் வழங்க, தீக்கதிர்  மதுரை பதிப்பு பொதுமேலாளர் ஜோ.ராஜ்மோகன், சென்னை பதிப்பின் பொறுப்பு பொதுமேலாளர் உஷாராணி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் ஏ.பாக்கியம் பேசுகை யில், “வகுப்புவாதத்தை எதிர்த்து நடத்தும்  யுத்தத்தின் ஒரு பேராயுதமாக ‘நரக  மாளிகை’ நூல் உள்ளது. சதாசிவத்தின் கடுமையான முயற்சியால் இந்த புத்த கம் வெளிவந்துள்ளது. ஆர்எஸ்எஸ் மிருகத்தனமாக வளர்ந்து வருகிறது. சென்னை நகரில் நடுத்தர மக்களிடம் ஊடுருவி வருகிறது. தற்போது குடிசைப் பகுதி, உழைக்கும் மக்கள் அதிகம் உள்ள  பகுதிகளில் ரகசியமாக செயல்பட முனை கிறது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சாகாக் களை நடத்துகிறது. சென்னை மாநக ரத்தை 18 மண்டலங்களாக பிரித்து பணி யாற்றுகிறது. ஆர்எஸ்எஸ்-சை அமைப்பு ரீதியாகவும், தத்துவார்த்த ரீதியாகவும், மாற்று நடவடிக்கைகள் மூலமாகவும் எதிர்த்திட வேண்டும். அதற்கு இந்த புத்தகம் உந்து சக்தியாக உள்ளது” என்றார். இந்நிகழ்விற்கு மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அசோகன் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.நரசிம்மன், பல்லாவரம் பகுதிச் செய லாளர் எம்.சி.பிரபாகரன், கொளத்தூர் பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி, சமூக செயற்பாட்டாளர் சி.உதயகுமார், பரிசல் பதிப்பகம் சிவ.செந்தில்நாதன் உள் ளிட்டோர் பேசினர். மொழிபெயர்ப்பாளர் கே.சதாசிவன் ஏற்புரையாற்றினார்.