tamilnadu

img

மார்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ.25 ஆயிரம் நிதி கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கிய திருநங்கைகள்

திருச்சிராப்பள்ளி,மே,24, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு பொதுக்கூட்டம் திருவெறும் பூர் தாலுகா குழு சார்பில் திங்களன்று திரு வெறும்பூர் கடைவீதியில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமது சிறப்புரையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு திருநங்கைகள் சார்பில் ரூ.25 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளதை பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் கருதுகிறேன். ஏனென்றால், இன்று சமூ கத்தில் ஓரங்கட்டப்பட்டுள்ள, புறக்கணிக் கப்பட்டுள்ள திருநங்கைகள் ஒரு அரசியல் கட்சியின் மேடையேறி எங்கள் சார்பில் இந்த கட்சிக்கு நிதியளிக்கின்றோம் என்று பெருமையுடன் சொன்னால், அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேடையா கத் தான் இருக்கும்.  அடுக்குமாடி குடியிருப்பு கட்டித் தருக! திருநங்கைகளுக்கு குறைந்தபட்ச வாழ்க்கை உத்தரவாதம், அதற்கான திட் டங்களை அரசு நிறைவேற்ற வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள திருநங்கைக ளை கணக்கெடுத்து அடுக்குமாடி குடி யிருப்புகள் கட்டி குடியமர்த்த அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோ ரிக்கைகளை தமிழக அரசிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி பெற்றுத் தரும்” என்றார்.  முன்னதாக திருநங்கைகள் சார்பில் சமூக நலவாரிய அலுவல்சாரா உறுப்பினர் மோகனா நாயக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதிக்கு ரூ.25 ஆயி ரத்தை மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணனிடம் வழங்கினார்.