tamilnadu

img

எங்களுக்காக போராடிய மார்க்சிஸ்ட் கட்சி

திருச்சிராப்பள்ளி, பிப்.4- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைவிடாத போராட்டத்தால் பட்டா கிடைக்கப்பெற்ற திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள், தங்களுக்காக போராடிய மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர்களுக்கு உணர்ச்சிப்பெருக்குடன் நன்றி தெரிவித்த நிகழ்வு திரு வெறும்பூரில் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள  திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளி கள் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு  தொடர்ந்து விண்ணப்பித்து வரு கிறார்கள். எனினும் அதிகாரிகளால் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு வந்தார்கள். இந்நிலையில் கடந்த சில மாதங் களுக்கு முன் திருவெறும்பூர் பகுதி யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடந்தது.  இதில் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது அவரைச் சந்தித்த திருநங்கை கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களின் நிலையை எடுத்துக்கூறி அனைவருக்கும் இலவச வீட்டுமனை மற்றும் பட்டா கிடைக்க  உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.  இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவெறும்பூர் ஒன்றியக் செயலாளர் மல்லிகா மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர் எம்.ஜெய சீலன் தலைமையில் இப்பகுதியில உள்ள  திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திற னாளிகள் அனைவருக்கும் இலவச வீட்டுமனை மற்றும் பட்டா வழங்கக்கோரி தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர்.  இதன் பயனாக திருவெறும்பூர் வருவாய் கிராமம் காந்தலூரில் இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு  இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர் கடந்த  மாதம் காந்தலூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி 30 திருநங்கைகளுக்கும், 25 மாற்றுத் திறனாளிகளுக்கு பட்டா வழங்கினார்.

மார்க்சிஸ்ட் கட்சிக்கு நன்றி

இதையடுத்து திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு பட்டா கிடைக்க அரும்பாடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு பாராட்டு நிகழ்ச்சியை சனிக்கிழமை அன்று சிபிஎம் திருவெறும்பூர் ஒன்றிய அலுவலகத்தில் நடத்தினர்.  நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட செயலாளர் சித்ரா தலைமை வகித்தார். திருநங்கைகள் மாநில கூட்டமைப்பு தலைவர் மேகனா நாயக்(84) வாழ்த்துரை வழங்கினார்.  விழாவில் கட்சியின் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் எம்.ஜெயசீலன் பேசு கையில்,  “திருவெறும்பூர் ஒன்றியத்தில் சிதறிக்கிடக்கின்ற திருநங்கைகள் அனை வரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கும், தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும் பட்டா பெற்றுத்தர மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும். கிராமப் புற பகுதிகளில் விளிம்பு நிலையில் உள்ள மக்கள், பெற்றோரால் ஒதுக்கப்பட்ட வர்கள், சமூகத்தில் புறம் தள்ளப்பட்ட வர்கள் மற்றும் மலைவாழ்மக்களின்  நலனுக்காக தொடர்ந்து அக்கறையுடன் போராடி வருவது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியே” என்றார். விழாவில் பட்டா பெற்ற  அனைத்து பயனாளிகளும் ஜெயசீலனிடம்  பட்டாக்களை காட்டி நன்றி தெரிவித்தனர். விழாவில் திருவெறும்பூர் ஒன்றியச் செயலாளர் மல்லிகா, மாவட்டச் செயற் குழு உறுப்பினர்  சிவராஜன், மாவட்டக்குழு  உறுப்பினர்கள் முருகேசன், தெய்வநீதி, கணேசன்,  மாதர் சங்க தலைவர்கள் யமுனா, மல்லிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.                       (ந.நி.)