சென்னை, டிச. 31- கொரோனா காலத்தில் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்ததால் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை தேர்வு செய்து கொள்ள தேசிய சுகாதார குழுமம் அனுமதி அளித்தது. அதன் பேரில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் செவிலியர்களை தேர்வு செய்தது. மொத்தம் 2,400 செவிலி யர்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் அரசு மருத்து வமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் பணிக்காலம் சனிக் கிழமையுடன் (டிச. 31) நிறைவடைகி றது. இனி பதவி நீட்டிப்பு இல்லை என்று கூறப்பட்டது. இது செவிலி யர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகை யில், கொரோனா கால நெருக்கடியை சமாளிக்க தேசிய சுகாதார குழு மத்தின் வழி காட்டுதல்படி ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசு விதிமுறைகளை அதிமுக அரசு முறையாக கடை பிடிக்காமல் செவிலியர்கள் நிய மனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. இதுவே சிக்கலுக்கு காரணம். இனிமேல் பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்று நிதித்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2,400 செவிலியர்கள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம், குடும்ப சூழல் பாதிக்கப்படக்கூடாது என்ப தற்காக இந்த விவகாரத்தை முதல மைச்சர் கவனத்துக்கு எடுத்து சென்றோம். அவரது ஆலோசனையின் பேரில் இந்த செவிலியர்களை நீக்காமல், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவைக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். ஊதியத்தை பொறுத்தவரை என்.எச்.எம். விதி முறைப்படி வழங்கப்படும் என்று அவர் கூறினார்.