13 ஆண்டுகளுக்குப் பின்பு போடி - மதுரை, போடி - சென்னை ரயில் சேவை மீண்டும் ஜுன் 15 அன்று துவங்கியது. போடி - மதுரை அகல ரயில்பாதைக்காக 10 ஆண்டுகாலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான ஏ.லாசர் தலைமையில் இடைவிடாத போராட்டம் நடந்தது. அதேபோல, இந்த ரயில்சேவையை போராடி உறுதிப்படுத்துவதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் முன்னின்றார். இந்நிலையில் போடி வர்த்தகர் சங்கம் ஒருங்கிணைப்பில் ரயிலை வரவேற்றும் ஏ.லாசர் உள்ளிட்டோரை பாராட்டியும் விழா நடைபெற்றது.