tamilnadu

பணப்பிரச்சனையால் விசைத்தறித் தொழிலாளி தற்கொலை தோழிக்கு கடன் வாங்க ஜாமீன் கையெழுத்திட்டதால் விபரீதம்

பணப்பிரச்சனையால் விசைத்தறித் தொழிலாளி தற்கொலை  தோழிக்கு கடன் வாங்க ஜாமீன் கையெழுத்திட்டதால் விபரீதம்

நாமக்கல், ஜூன் 5- தோழிக்கு ஜாமீன் போட்டு வாங்கி கொடுத்த பணத்தால் ஏற்பட்ட பிரச் சனை காரணமாக, மனைவியின் மன உளைச்சலை தாங்க முடியாத நிலை யில் கணவன், மனைவி இருவரும் தற் கொலைக்கு முயற்சித்தனர்.இதில் கண வன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளை யம் அடுத்த காந்திபுரம் 3 ஆவது வீதி யைச் சேர்ந்த விசைத்தறித் தொழிலாளி சீனிவாசன். இவரது மனைவி காஞ்சனா, இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். காஞ்சனா கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது தோழியான ஈரோட்டைச் சேர்ந்த திலகம் என்பவருக்கு, வீட்டின் அருகே உள்ள  திருமுருகன் என்பவரிடம் வட்டிக்கு 50 ஆயிரம் ரூபாய் வாங்கி கொடுத்துள் ளார். கடந்த சில மாதங்களாக திலகம் வட்டி செலுத்தாததால், திருமுருகன் காஞ்சனாவிடம் அசல் பணத்தை திருப் பித் தருமாறு கேட்டுள்ளார். இதையடுத்து காஞ்சனா, திலகத்தி டம் பணத்தை உடனே தருமாறு கேட் டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஜூன் 3 ஆம் தேதியன்று, திருமுருகன், அவரது மனைவி மற்றும் காஞ்சனா ஆகியோர் பணம் குறித்து பேச்சுவார்த்தை நடத்து வதற்காக ஈரோடு சென்றுள்ளனர். அங்கு ஏற்பட்ட வாய் தகராறில் திலகம் மற்றும் அவருடன் வந்திருந்த அடையா ளம் தெரியாத நபர்கள் காஞ்சனாவை தாக்கியுள்ளனர். இதனால் மனமுடைந்த காஞ்சனா,  வீட்டிற்கு வந்து தனது கணவர் சீனிவாச னிடம் நடந்ததை கூறியுள்ளார். “தனக்கு நன்கு தெரிந்த தோழி என்பதால், ஜாமீன் போட்டு பணம் வாங்கி கொடுத்தேன். அவர் திருப்பி கட்டாததால், அதைக் கேட்க போனா என் மீதே தாக்குதல் தொடுக்கிறார்கள். இதனால் நான் வாழ விரும்பவில்லை,” என காஞ்சனா கூறி யுள்ளார். இதைக் கேட்டு சீனிவாசன் மனமு டைந்து, இருவரும் தற்கொலை செய் யும் எண்ணத்தில் புதன்கிழமை காலை  வீட்டின் மேல் உள்ள கம்பியில் தனித் தனியே தூக்கிட்டுள்ளனர். அப்போது காஞ்சனா தூக்கிட்ட சேலை அறுந்து  கீழே விழுந்ததில் அவர் காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால், சீனிவாசன் தூக்கு கயிறு இறுகி பரிதாபமாக உயிரி ழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல றிந்த பள்ளிபாளையம் போலீசார், சீனி வாசனின் சடலத்தை மீட்டு பிரேத பரி சோதனைக்காக அனுப்பி வைத்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.