மேற்குவங்க மாநிலம் வடக்கு 24 பரகானாஸ் மாவட்டத்தில் உள்ள ஜகநாத்பூர் அருகே துத்தாபுகூரில் சட்டவிரோதமாக செயல் பட்டு வந்த பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஞாயிறன்று காலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் நிகழ்விடத்துக்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடு பட்டனர். இதுவரை 8 உடல்கள் மீட்கப் பட்டுள்ளதாகவும், 5 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரி வித்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப் பட்டு பராசத்தில் உள்ள மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். வெடிவிபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.