tamilnadu

img

திருமண வீட்டில் சோகம் கிணற்றில் தவறி விழுந்து 13 பேர் பலி

குஷிநகர் (உத்தரப்பிரதேசம்), பிப்.17- உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமண வீட்டில் கிணற்றில் தவறி விழுந்த  13 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து குஷிநகர் மாவட்ட ஆட்சியர் ராஜலிங்கம் கூறியதாவது: குஷிநகர் மாவட்டம், நெபுவா நவுராங்கியா பகுதியில் புதன்கிழமை இரவு திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற சில பெண்கள் அங்குள்ள கிணற்றின் மீது போடப்பட்டிருந்த மூடியின் மீது அமர்ந்திருந்தனர். அதிகளவிலான பாரம் தாங்காமல் புதன் இரவு 8.30 மணியளவில் கிணற்றின் இரும்பு மூடி உடைந்து விழுந்ததில் நீரில் மூழ்கி 11 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பத்து வயது சிறுமியும் ஒரு வயது கைக்குழ ந்தையும் அடங்கும். மேலும், இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மூத்த காவல்துறை அதிகாரி அகில் குமார், இறப்பு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்கப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர்  இரங்கல் தெரிவித்துள்ளனர்.