tamilnadu

img

குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறல்

நாகர்கோவில், டிச.25- முக்கடலும் சங்கமிக்கும் கன்னியா குமரியில் திரிவேணி சங்கமம், சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் ஞாயிறன்று (டிச.25) அதிகாலை சூரியன் உதய காட்சி யை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பய ணிகள் ஒரே நேரத்தில் திரண்டதால் கடற்  கரைப் பகுதி போக்குவரத்து நெரிசலில் சிக்கித் திணறியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்  துள்ள விவேகானந்தர் நினைவு மண்ட பத்தைக் காண படகில் பயணம் செய்து  பார்வையிட்டனர். இதனால் படகுத்துறை யில் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரம் வரை மக்கள் காத்திருந்தனர். சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வரிசை நீண்டது. கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா  தலங்களான காந்தி நினைவு மண்டபம், காம ராஜர் மணிமண்டபம், மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சியகம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா போன்ற இடங்களிலும் சுற்றுலா பயணி கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.