அறிவிக்கப்படாத மின் வெட்டு
விசைத்தறித் தொழிலாளர்கள் தவிப்பு
திருநெல்வேலி, ஜூலை 7- சங்கரன்கோவிலில் சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட மின் தடையை விட கூடுதலாக நான்கரை மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் விசைத்தறித் தொழிலாளர்கள் தவித்தனர். சங்கரன்கோவில் மின்வாரியத்தின் சார்பில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டி ருந்தது. அதன்படி காலை 9 மணிக்கு மின்தடை ஏற்பட்டது. பிற்பகல் ஒரு மணிக்குப் மின் விநியோகம் சீராகும் என எதிர்பார்க்கப்பட்ட மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் சங்கரன்கோவில் விசைத்தறித் தொழிலாளர்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினர். சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இல்லாததால் விசைத்தறித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மின்சாரத்தை நம்பியுள்ள சிறு, குறு தொழில்களும் பாதிக் கப்பட்டன.
மின்தடை: 1912 எண்ணில் புகார் தெரிவிக்கலாம்’
திருநெல்வேலி, ஜூலை 7- திருநெல்வேலி மாவட்ட மின்நுகர்வோர் 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் மின்தடை புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திரு நெல்வேலி நகர்ப்புறம் செயற்பொறியாளர் சு.முத்துக் குட்டி வெளியிட்டுள்ள அறிக்கை: திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மின்நுகர்வோர் மின்தடை ஏற்பட்டால் 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரி விக்கலாம். இதுதவிர 0462-2562900 என்ற தொலைபேசி எண்ணிலும், 9445859032, 9445859033 என்ற செல்லி டப்பேசி எண்களிலும் புகார் தெரிவிக்கலாம். புகார் அளிக்கும்போது 10 இலக்க மின் இணைப்பு எண்ணை கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும். பதிவு செய்யப்பட்ட குறைகள் உடனடியாக அந்தந்தப் பகுதி கம்பியாளரிடம் (வயர்மேன்) தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப் பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
தூய மரியன்னை கல்லூரியில் மாணவர் பேரவை தொடக்கம்
தூத்துக்குடி, ஜூலை 7- தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 2019-20 ஆம் ஆண்டுக்கான மாணவர் பேரவை தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் லூசியா ரோஸ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி சாராள் தக்கர் கல்லூரி முதல்வர் உஷா காட்வின் கலந்துகொண்டு, புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மாணவர் பேரவை தலைவராக ஜோஸ்லின் அமலா, செய லராக பொன் ஷீபா, துணைத் தலைவராக ஸ்ரீநந்தினி, சுயநிதிப் பிரிவு தலைவராக அர்ஷா முபீனா, செயலராக ஆரோக்கிய ஹெலீனா, துணைத் தலைவராக மரிய தன்ஸிலாஸ் ஆகியோர் பொறுப்பேற்றனர். நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல்வர் ஷிபானா, சுயநிதிப் பிரிவு இயக்குநர் ஜாய்ஸ், தேர்வாணையர் ஆரோக்கிய மேரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தேள் கொட்டி இரண்டு வயது குழந்தை பலி
தூத்துக்குடி, ஜூலை 7- தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகே யுள்ள காட்டுநாயக்கன்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த வர் மொட்டைச் சாமி மகன் மணிகண்டன் (30). இவரது மனைவி ஆதிமகேஸ்வரி. இந்த தம்பதியருக்கு உதய குமார் என்ற இரண்டு வயது மகனும், பிறந்து 40 நாட்களே ஆன குழந்தையும் உள்ளது. சனிக்கிழமை இரவு குடும்பத் தில் உள்ள அனைவரும் ஒரே அறையில் தூங்கியுள்ளனர். ஞாயிறு அதிகாலை ஐந்து மணியளவில் உதயகுமார் கதறி அழுதுள்ளான். இதையடுத்து பெற்றோர் விழித்து பார்த்தபோது குழந்தையின் காலில் தேள் கொட்டியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் எப்போதும் வென்றான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொய்கை அணையில் மூழ்கி மாணவர் மரணம்: உறவினர்கள் முற்றுகை
நாகர்கோவில், ஜூலை 7- சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் அபிஷேக். இவர் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் சனியன்று ஆரல்வாய்மொழி அருகே பொய்கை அணைக்கு குளிக்க சென்றார். அப்போது மாண வர் அபிஷேக் தண்ணீரில் மூழ்கி பலியானார். இந்நிலையில் மாணவர்களின் உறவினர்கள் சிவ கங்கையிலிருந்து ஞாயிறன்று ஆரல்வாய்மொழி வந்தனர். அவர்களிடம் கல்லூரி நிர்வாகம் சார்பில் உரிய முறை யில் விளக்கம் அளிக்கவில்லை என்று தெரிகிறது. மேலும் மாணவர் இறந்த சம்பவம் குறித்து உடனடியாக அவரது பெற்றோர்களிடம் தகவல் தெரிவிக்கவில்லை. மாணவர் அபிஷேக் இறந்து இரண்டு நாட்கள் ஆகியும் அவரது உடலைப் பார்க்கவும் காவல் காவல் நிலையத்திற்கும் கல்லூரி நிர்வாகம் சார்பில் யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக்கின் உறவினர்கள் மாண வரின் உடலை வாங்க மறுத்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மின் கம்ப விளம்பரங்களால் விபத்து அபாயம்
குடவாசல், ஜூலை 7- திருவாரூர் மாவட்டம் குடவாசல் நகரப் பகுதி முழு வதும் மின் கம்பங்களில் பல்வேறு விளம்பர போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக படித்த இளைஞர்கள் மற்றும் இல்லத்தரசிகளை கவர்ந்து இழுக்கும் வகையில் பகுதி நேர வேலைக்கான விளம்பர பலகையும் உள்ளன. இந்த பலகைகள் அந்தரத்தில் தொங்கியபடி உள்ளன. மேலும் இதனால் வாகன ஓட்டிகள் கவனம் சிதறி விபத்து ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே உடனே சம்பந்தப்பட்ட நிர்வாகம் மின்கம்பத்தில் உள்ள அனைத்து விளம்பர போர்டுகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.