tamilnadu

img

அமைதிப் புறாவை வடித்தவர்! - காலத்தை வென்றவர்கள்

நவீன ஓவியங்களின் தந்தையாக கரு தப்படும் பாப்லோ ரூயிஸ் பிக்கா சோ 1881 அக்.25 அன்று ஸ்பெயின் நாட் டின் மலாகா என்ற இடத்தில் பிறந்தார். இவர் பேசத் தொடங்கும் முன்பே கையில் பென்சிலை வைத்துக் கொண்டு கிறுக்கிக் கொண்டிருந்தா ராம். இவருடைய தந்தை ஓர் ஓவிய ராகவும், உள்ளூர் அருங்காட்சி யகத்தின் ஓவியங்களுக்கு பொறுப்பா ளராகவும் இருந்ததால், மகனின் ஓவிய ஆர்வத்தை ஊக்கப்படுத்தினார். ஏழு வயதிலிருந்தே பிக்காசோ வுக்கு ஓவியப் பயிற்சிகளை அளிக்கத் துவங்கினார் தந்தை ரூயிஸ். தான் கற்ற கலைகளை மகன் 13 வய திலேயே கற்றுத் தேர்ந்ததை அறிந்த ரூயிஸ், பிக்காசோவை  கலைக் கல்லூரிகளில் சேர்த்து, முறையான பயிற்சிகளை தந்தார். பின்னர், தானாகவே, ஓவியங்களை வரைந்து அவற்றை மெருகேற்றும் பாதையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் பிக்காசோ. 1901 முதல் 1904 வரை தனது ஏழ்மை மற்றும் சமூகம் மீது தான் கொண்டுள்ள பார்வையை விளக்கும் வகையில், பல ஓவியங்களைச் சித்தரித்தார் பிக்காசோ. அன்றாடம் இவர் சந்திக்கும் சில கதாபாத்திரங்களின் மற்றுமொரு கடின பாதையையும் விவரிக்கும் ஓவியங்களை வரைந் தார். மேலும் இக்காலத்தில் பிக்காசோ நீல நிறங்களை மட்டுமே பயன்படுத்தியதால், இந்தக் காலக்கட்டத்தை ‘நீலக் காலம்’ (Blue Period) என்று அழைப்பதுண்டு. 1904-06 காலங்களில் ரோஜா மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் வரையப்பட்ட ஓவியங் கள் அதிகம் காணப்பட்டதால், இக்காலக் கட்டத்தை ‘ரோஸ் காலம்’ என்றும் அழைப்பதுண்டு. தனது ஓவியங்களுக்கு கிடைத்த சில பாராட்டுகள் மற்றும் அங்கீகாரம் மூலம் பிக்காசோவின் வறுமை சற்று குறைந்தது. இதனால் கவலைகளை மறந்து, தனது விருப்பத்தை மட்டும் பூர்த்தி செய்யத் தொடங்கிய இவரது ஓவியங்கள், அழகிய நிறங்கள் மற்றும் சிரிப்பூட்டும் நகைச்சுவை பாத்திரங் களை அதிகம் வெளிப் படுத்தின. கலைகளின் தலை நகரம் என்றழைக்கப்படும் பாரிசுக்கு 1904 இல் தனது 23-வது வயதில் வந்தார் பிக்காசோ. பாரிசுக்கு வந்த  மூன்று ஆண்டுகளில் இவர் வரைந்த, ‘Les Demoiselles d’Avignon’ என்ற ஓவியம் உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. நேர்க்கோடுகளும் முக்கோண வடிவங்களும் கொண்டு வரையப்பட்ட இந்த ஓவியம்தான் ‘கியூபிசம்’ (Cubism) என்ற ஓவிய முறையைத் துவக்கி வைத்தது. இந்த முறையின் அடுத்த கட்டமாக சிந்தடிக் கியூபிசம் (Synthetic Cubism) முறையையும் அறிமுகப்படுத்தினார். இன்று செய்யப்படும் கொலாஜ் (Collage) முறையின் முன்னோடி என்றும் இதை குறிப்பிடலாம். கம்யூனிச கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட பிக்காசோ, பிரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1950 இல் நடைபெற்ற அமைதியான உலகுக்காக அவர் ஒரு ஓவியத்தை வரைந்தார். அதில், அமைதியை ஓர் வெள்ளைப்புறாவாக உருவகப் படுத்தி இருந்தார். அற்புதமாக அமைந்திருந்த இந்த ஓவியத்தை, அமைதியின் சின்னமாக ஏற்றுக் கொண்டது உலகம். சிற்பங்கள் செய்வதிலும் வல்லவ ராக திகழ்ந்த பிக்காசோ, தனது 78 ஆண்டுகளில் உலகிற்கு வழங்கிய படைப்புகளின் எண்ணிக்கை சுமார் 13500 ஓவியங்கள், 34 ஆயிரம் விளக்கப்படங்கள், 400 சிற்பங்கள். ஓவியக் கலைக்கு ஒரு புது உற்சாகத்தை அளித்த இந்த ஓவியன், 1973 ஏப்.8 அன்று தனது 92-வது வயதில் காலமானார்.