மகாராஷ்டிராவின் மகத்தான கம்யூ னிஸ்ட் தலைவர்களில் ஒருவர் பிர பாகர் கான்ஸ்கிரி, 1921 செப்டம்பர் 25 அன்று பிறந்தார். 1941 இல் தனது 20 ஆவது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த இவர், 68 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் கட்சிப் பணியாற்றினார். மகாராஷ்டிராவில் கட்சி மற்றும் சிஐடியுவின் முன்னணித் தலைவராக இருந்தவர். படைப்பாற்றல் மிக்க மார்க்சிய சிந்தனையாளராக திகழ்ந்தார். இவர் எழுதிய அனுச்யா அன்டரங்காத், மானாவச்சி கஹானி, டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மற்றும் மார்க்சிய மதிப்பீடு ஆகிய நூல்கள் மகா ராஷ்டிராவில் மட்டுமின்றி, நாடு முழு வதும் மிகப்பெரும் வரவேற்பைப்பெற்றன. இந்த புத்தகங்கள் ஒவ்வொன்றிலும், மார்க்சிய நிலைப்பாட்டிலிருந்து விவா திக்கப்படும் விசயங்களை ஆக்கப்பூர்வ மான முறையில் ஆய்வு செய்திருக்கிறார். இந்நூல்கள் மூலம், அவர் சமகால இடது சாரி ஆர்வலர்களை கருத்தியல் ரீதியாக வளர்த்தது மட்டுமின்றி, வரும் தலை முறையினருக்கு ஒரு பொக்கிஷத்தையும் அளித்திருக்கிறார்.
இடது கையால் டீல் செய்யத் தக்கவை
இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் 1 லட்சத்து 80 ஆயிரம் இடங்கள் இருப்பதாக சொல்லியிருக்கிறார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. ஆனால் கடந்தாண்டு கணக்குப்படி எம்பிபிஎஸ் சீட்டுகள் - 1,07,948 பி.ஜி. (PG); பிற அனைத்து வகை சீட்டுக்களும் சேர்த்து 67,842. இரண்டையும் கூட்டினால் கூட 1 லட்சத்து 80 ஆயிரம் வரவில்லை. ஆனால் பி.ஜி.யில் மட்டும் 1 லட்சத்து 80 ஆயிரம் என்று அண்ணாமலை ஆய்வு (ரிசர்ச்) செய்து கண்டுபிடித்ததாகவும், அவருக்கு இதெல்லாம் தெரிருந்திருப்பதனால் தான் பத்திரிகையாளர்களை இடது கையால் டீல் செய்வதாகவும் சொல்லியிருக்கிறார். உண் மையில் அண்ணாமலையின் பேச்சுக்கள்தான் இடது கையால் டீல் செய்யத் தக்கவை.
சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ்