tamilnadu

img

மகளிர் உரிமைத் தொகை நிராகரிப்பு ஏன்?

சென்னை, செப்.17- தமிழ்நாட்டில் கலைஞர் உரிமைத் தொகை ரூ.1000 திட்டத்தில் 1 கோடியே 63 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் அவர்கள் விண்ணப்பம் பெறப்பட்டதாக கைபேசி களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்க ப்பட்டது. அதன் பிறகு கள ஆய்வுகள் செய்யப்பட்டு அதில் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.  எஞ்சிய விண்ணப்பங்கள் நிராகரிக் கப்பட்டன. ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் அவர்களது வங்கி கணக்குகளுக்கு உரிமைத் தொகை அனுப்பப்பட்டது. இதுவரை வங்கி கணக்கு தொடங்கா தவர்களுக்கு மணியார்டர் மூலம் பணம் அனுப்பப்பட்டது.  அடுத்த தவணை பணம் செலுத்து வதற்கு அவர்களும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று அறிவுறுத் தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டுள்ளன. அவர்களில் பலர் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது ஏன்  அவர்களை விட வசதி படைத்தவர் களுக்கு உரிமைத் தொகை கிடைத்து இருப்பதாகவும் தங்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தற்கான காரணம் புரியவில்லை என்றும் சந்தேகம் அடைந்துள்ளார்கள். அவர்கள் சந்தேகத்தை போக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்தி லும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தற்கான காரணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. திங்கட்கிழமை ( செப். 18) முதல் நிராகரிக்கப்பட்ட விண்ணப்ப தாரர்களின் செல்போனுக்கு குறுஞ் செய்தி அனுப்பி வைக்கப்படும். இந்த குறுஞ்செய்தி கிடைத்த 30 நாட்களுக் குள் இணையதளம் வழியாக மேல்முறையீடு செய்யலாம்.