தருமபுரி, மார்ச் 17- தமிழக வேளாண் பட்ஜெட்டில் ஆக்கப்பூர்வமான அறிவிப்பை வெளியிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தருமபுரியில் கேட்டுக் கொண்டுள்ளார். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் காரல் மார்க்ஸ் திருமண மண்டபத்தில் (வியாழனன்று) வாலிபர் சங்க பயி லரங்கத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் துவக்கி வைத்தார். அதன்பின், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக அரசு முழு ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்ட மன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறது. அதில், சில முக்கியமான அறிவிப்பு களை வெளியிட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள் ளோம். அதை அவர் கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
மேகதாது அணை கூடாது
ஒன்றிய மோடி அரசு மாநில அர சுக்கு வழங்க வேண்டிய ரூ.27 ஆயிரம் கோடியை விடுவிக்காமல் கிடப்பில் போட்டுள்ளது. இதனால் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த முடிய வில்லை. இதனால் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய மோடி அரசு வழங்க வேண்டும். தரும புரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் சிப்காட் அமைப்ப தற்காக நல்ல விளைநிலங்கள் கையகப் படுத்தப்பட்டுள்ளன. இதனால், விவ சாயம் பாதிக்கப்படும். எனவே, தரிசு, மேய்ச்சல் நிலங்களை சிப்காட்டுக்கு பயன்படுத்த வேண்டும். மேகதாது அணை அமைக்கக் கூடாது என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை மாநில அரசுடன் சேர்ந்து வலியுறுத்தியுள்ளோம். இந்நிலையில், இத்திட்டத்திற்கு கர்நாடக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. வரும் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு மேகதாது அணை கட்டுவது, ஹிஜாப் அணிய தடைவிதிப்பது போன்ற செயல்களில் கர்நாடகா பாஜக அரசு ஈடுபட்டு வரு கிறது. எனவே, மேகதாது அணை கட்டு வதை தடுக்க, அனைத்துக்கட்சி கூட்டத் தை கூட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உரமானியத்தை உயர்த்த...
மேலும், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் வழங் கிய குறுகிய கால கடனை தள்ளுபடி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் சுற்றுச்சுழல் பாதிப்பின் காரணமாக விவசாயம் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் உரக்கொள்கை காரணமாக பலமடங்கு உரம் விலை உயர்ந்துள் ளது. எனவே ஒன்றிய அரசை வற்புறுத்தி உரவிலை மானியத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மானிய விலையில் உரம் கிடைப்பதன் மூலம் விவசாயம் பெருகும். இதற்கு தமிழக வேளாண் பட்ஜெட்டில் ஆக்கப் பூர்வமான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றார். இப்பேட்டியின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவ நாதன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாநில துணைச் செயலாளர் பால சந்திரபோஸ் ஆகியோர் உடனிருந்தனர்.