tamilnadu

img

நாடு முழுவதும் சமூகநீதியை நிலைநாட்ட கூட்டாக குரல் கொடுப்போம்!

சென்னை, ஏப். 4 - இந்தியா முழுமைக்கும் சமூகநீதியை நிலைநாட்ட அனைவரும் கூட்டாக குரல் கொடுப்போம் என்று அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். சமூகநீதிக்கான இந்தக் குரல், வெறும் குரலாக- தனித்தனிக் குரலாக மட்டும் இருந்தால்  பயனில்லை; கூட்டுக் குரலாக, கூட்டணிக் குரலாக அமைய வேண்டும் எனவும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார். அகில இந்திய சமூகநீதி கூட்டமைப்பின் முதல் தேசிய இணைய மாநாடு, புதுதில்லியில் திங்களன்று மாலை நடைபெற்றது. இந்த  மாநாட்டிற்குத் தலைமை வகித்து, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மேலும் பேசியிருப்ப தாவது: ஒட்டுமொத்த இந்தியாவையும் இணை யத்தால் இணைத்துள்ளோம். சமூகநீதி, நம்மை எல்லாம் இணைத்துள்ளது. மாநில முதல்வர்கள், அகில இந்திய அரசியல் கட்சித்  தலைவர்கள், மாநில கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நீதியரசர்கள், மூத்த வழக்கறிஞர்கள் இணைந்துள்ளோம். சமூகநீதியைக் காக்கும் கடமை, நமக்குத்தான் இருக்கிறது என்பதாலேயே இணைந்துள்ளோம்.

சமூகநீதியை அடையவேண்டும் என்பது ஒரு மாநிலத்தின் பிரச்சனை அல்ல. ஒருசில மாநிலங்களின் பிரச்சனையும் அல்ல. இது, இந்திய சமூக அமைப்புமுறைச் சார்ந்த அனைத்து மாநிலங்களின் பிரச்சனை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் சாதி ௲ வகுப்பு அளவீடுகள் வேறுபடலாம். ஆனால் பிரச்சனை  ஒன்றுதான். அதுதான், புறக்கணிப்பு. எங்கெல்லாம் புறக்கணிப்பு, ஒதுக்குதல், தீண்டா மை, அடிமைத்தனம், அநீதி இருக்கிறதோ அங்கெல்லாம் அதனை முறிக்கும் மருந்தாக இருப்பதுதான் சமூகநீதி. பாம்பின் விஷத்தை நீக்க விஷமுறிவாக அந்த விஷமே பயன்படுவதைப் போல, சாதியால் புறக்கணிக்கப் பட்டவர்களை உயர்த்த அந்தச் சாதியே பயன்படுகிறது. அதுதான் இடஒதுக்கீடு எனப்படும் சமூகநீதிக் கருத்தியல். “சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டவராக இருக்கும் எந்தச் சமூகத்தவர்க்கும் செய்யும் சலுகைகளை அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவும் தடுக்காது” என்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 15(4) என்ற முதலாவது திருத்தம். இந்த திருத்தத்துக்கு காரணம்,  “சென்னைதான்” என்று நாடாளுமன்றத்தி லேயே சொன்னார், அன்றைய பிரதமர் நேரு. அதனால்தான் சமூகநீதியை நிலைநாட்டுவதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.

100 ஆண்டுகளுக்கு முன்னால், 200 ஆண்டுகளுக்கு முன்னால், உயர்சாதியினர் மட்டுமே படிக்கலாம் என்ற காலம் இருந்தது அல்லவா, அதனை தற்போதும் உருவாக்க நினைக்கிறார்கள். இதனை தடுக்க வேண்டும். சமூகநீதி என்ற பெயரால் சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் செய்யப்பட்ட செயல்களை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இஸ்லா மியர்களுக்கான தனி இடஒதுக்கீடு முழுமை யாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்களை உயர்சாதி ஏழைகள் என்ற பிரிவில் சேர்த்துள் ளார்கள். கர்நாடகாவில். பட்டியலின மக்களின் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் ௲ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும். சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு முறையாக வழங்கப்பட வேண்டும். நீதித்துறையில் இடஒதுக்கீடு செயல்பாட்டி ற்கு வர வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட சமு தாயத்தினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பினை ஒன்றிய அரசு நடத்தி- அதன் தரவுகளை வெளியிட வேண்டும். இவற்றை அகில இந்திய ரீதியில் கண்காணிக்க வேண்டும். மாநில அளவிலும் கண்காணிக்க வேண்டும். சமூகரீதியாகவும் கண்காணிக்க வேண்டும்.  இந்த இணைய மாநாட்டில் பங்கேற்றுள்ள அனைவரும், அவரவர் மாநிலங்களில் பெரியார், அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா பூலே  போன்ற சமூக சீர்திருத்தவாதிகளின் பெயர் களில் ஆய்வு வட்டங்கள் துவங்கி, நாடு முழு வதும் உள்ள இளைஞர்களுக்கு சமூகநீதிப் பற்றிய புரிதலையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். இந்தியா முழுமைக்கும் கூட்டாட்சியை, மாநில சுயாட்சியை, மதச்சார்பின்மையை, சமத்துவத்தை, சகோ தரத்துவத்தை, சமதர்மத்தை, சமூகநீதியை நிலைநாட்ட நாம் குரல் கொடுத்தாக வேண்டும். அது வெறும் குரலாக மட்டும் இருக்க முடி யாது. தனித்தனி குரலாக மட்டும் இருந்தால் பயனில்லை. கூட்டுக் குரலாக, கூட்டணிக் குரலாக அமைய வேண்டும்.

எத்தகைய உன்னதமான கருத்தியலாக இருந்தாலும் அது வெற்றி பெறுவதற்கு அந்த கருத்தியலை ஏற்றுக்கொண்ட சக்திகளின் ஒற்றுமை என்பது மிகமிக அவசியம். அத்த கைய ஒற்றுமை ஓரிரு மாநிலத்தில் மட்டும்  உருவானால் போதாது. அனைத்து மாநிலங்களி லும் உருவாக வேண்டும். அது அகில இந்தியா  முழுமைக்குமானதாக ஒன்றாதல் வேண்டும். அதற்கு இதுபோன்ற கூட்டமைப்புகள் அடித்த ளம் அமைக்கும். சமூகநீதி இந்தியாவை உரு வாக்க - சமதர்ம இந்தியாவை உருவாக்க - சகோதரத்துவ இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து போராடுவோம்.  இவ்வாறு மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்தரங்கில் காங்கிரஸ் சார்பில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, “சமூகநீதிக்கான இயக்கத்தில் காங்கிரஸ், ஏனைய அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து நிற்கும்” என்று குறிப்பிட்டார். ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரும் இந்த முயற்சிகளில் இணைய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ஆம் ஆத்மி கட்சி சார்பில் பேசிய நாடாளு மன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், ‘வர்ண அமைப்பு’ தொடர வேண்டும் என்று பாஜக-வின் சித்தாந்த ஆலோசகர் ஆர்எஸ்எஸ் விரும்புவதால் பாஜக அதை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சீத்தாராம் யெச்சூரி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி யும் இம்மாநாட்டில் பங்கேற்று உரையாற்றி னார். அப்போது, சமூகநீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பு மாநாட்டை காணொலி வாயிலாக நடத்திக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். சமூக நீதி, சுய மரியாதை, பகுத்தறிவு   முத லானவற்றிற்கான போராட்டம் தமிழகத்தில் தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி அவர்களால் தொடரப்பட்டு, இப்போது மு.க. ஸ்டாலின் முன்னெடுத்துச் சென்று கொண்டி ருக்கிறார். நாகர்கோவிலில் பெண்கள் மார்பை மூடுவதற்காக நடத்திய தோள் சீலை போராட் டம் மற்றும் வைக்கம் சத்தியாகிரகத்தின் 200ஆம் ஆண்டு விழா ஆகியவை சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. இந்தப் போராட்டங்கள் இந்திய அரசமைப்புச்சட்டத்தின் அடித்தளங்களாக விளங்கும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்து வம் ஆகியவற்றின் முத்திரை பதித்திடும் நிகழ்வுகளாகும். 

அரசமைப்புச்சட்டம், அனைத்து மக்களுக் கும் சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி ஆகியவற்றை உத்தரவாதப்படுத்துகிறது. ஆயி னும் தற்போதுள்ள பாசிஸ்ட் ஆர்எஸ்எஸ் -பாஜக ஆட்சியானது இதனை அப்புறப்படுத்திவிட்டு, மனுஸ்மிருதி அடிப்படையில் ஆட்சியை நடத்திட முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இவற்றை தடுத்து நிறுத்தி, முறியடித்திட வேண்டும். இந்தத் திசைவழியில் போராட்டத்தை முன் னெடுத்துச் செல்வதற்கு, இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா,  உ.பி. மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து. ராஜா உள்ளிட்டோரும் இந்த மாநாட்டில் உரையாற்றினர்.