tamilnadu

img

தியாகி ஜெ.நாவலன் நினைவு தினம்: வீர வணக்கம் - பொதுக்கூட்டம்

நன்னிலம்,ஜன.20- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் பேரளம் திருமீயச்சூர் உள்ள தியாகிகள் நினைவிடத்தில் தியாகி ஜெ.நாவலன் 11ஆம் ஆண்டு நினைவு தின மலரஞ்சலி-வீர வணக்கம் பொதுக்கூட்டம் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கே.எம்.லிங்கம் தலைமை வகித் தார். கந்தர்வகோட்டை சிபிஎம் சட்ட மன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, தியாகி ஜெ.நாவலன் ஸ்துபியில் மலர் வளையம் வைத்து மலரஞ்சலி செலுத்தி கொடியேற்றி வைத்தார்.  அதனை தொடர்ந்து சிபிஎம் தலை வர்கள், வெகுஜன அரங்கத்தின் நிர்வாகிகள், தோழர்கள் அஞ்சலி செலுத்தினர். கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர், ஜி.சுந்தரமூர்த்தி, மாநி லக்குழு உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து,மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் உள்ளிட்டோர் தியாகி நாவலன் அவர்களின் புகழஞ்சலி நினைவு உரையாற்றினார்கள். சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை நிறை வுரையாற்றினார். முன்னதாக  பேரளம் கடைவீதி யில் இருந்து வாலிபர் சங்கத்தின் 50 இளைஞர்கள் பேரணியாக வந்து  அஞ்சலி செலுத்தினர்.விழா மேடை யில் இரத்ததானம் வழங்கிய 43 இளை ஞர்களுக்கு மாவட்ட மருத்துவக் கல்லூரியில் வழங்கிய சான்றிதழை தலைவர்கள் இளைஞர்களுக்கு வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.குமாரராஜா, எம்.சேகர், பி.கந்தசாமி, கே.ஜி.ரகு ராமன், டி.முருகையன், மாவட்ட கவுன்சிலர் ஜெ.முகமது உதுமான், மாணவர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் ஆறு.பிரகாஷ் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

;