tamilnadu

img

உக்ரைனில் தவிக்கும் திருநெல்வேலி மாணவி

திருநெல்வேலி, பிப்.26- உக்ரைனில் படிக்கும் இந்திய மாணவர்கள் உணவின்றி தவித்து வருவ தாக நெல்லையைச் சேர்ந்த மாணவி தெரி வித்துள்ளார். நெல்லை ஜோதிபுரத்தைச் சேர்ந்த மனோ  ஜெபதுரை என்ற மாணவர் கார்கீவ் நகரில் பதற்றத்துடன் இருப்பதாக இரண்டு நாட்க ளுக்கு முன்பு பெற்றோருக்கு தகவல் தெரிவித்து இருந்தார். இதன் அடிப்படை யில் அவரது பெற்றோர்கள் மாணவனை மீட்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  இந்த நிலையில், பாளை வண்ணார் பேட்டையைச் சேர்ந்த மாணவி ஒருவரும் உக்ரைனில் தவித்து வரும் தகவல் கிடைத் துள்ளது. வண்ணார் பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன்- உமாசங்கரி தம்பதியரின் மகள் தீபஸ்ரீ (19). இவர் உக்ரைனில் மருத்து வம் படித்து வருகிறார். இவரிடம் வெள்ளி யன்று அவரது பெற்றோர் தொடர்பு கொண்டு  பேசினர்.  அப்போது தீபஸ்ரீ எங்கள் பகுதியிலும் ரஷ்ய ராணுவம் குண்டு வீசுவதால் நாங்கள்  அனைவரும் பாதுகாப்பாக மற்றொரு கட்டி டத்தில் தங்கியுள்ளோம். அனைத்து மாணவ -மாணவிகளும் இங்கு தங்க வைக்கப்பட் டுள்ளனர். இதனால் பதற்றத்துடனே நாங்கள் இருக்கிறோம்.  எங்களுக்கு வழக்கமான உணவுக்கு பதில் பிஸ்கட் முதலிய சாதாரண உணவுகள்  மட்டுமே தரப்படுகிறது. வேறு உணவுகள் கிடைப்பதில்லை. இதனால் உணவுக்கு மிகவும் கஷ்டப்படுகிறோம். இன்னும் தொடர்ந்து எத்தனை நாள் இப்படி இங்கு இருக்க வேண்டிய சூழ்நிலை வருமோ என்று  தெரியவில்லை.  இதனால் இந்திய அரசின் உதவியுடன் எங்களை மீட்க உதவி செய்யுங்கள் என்று  கூறியுள்ளார். அவருடன் மேலும் பல இந்திய  மாணவர்களும் தங்கி உள்ளனர். எனவே அனைவரையும் ஒன்றிய-மாநில அரசுகள் மீட்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.