புதுக்கோட்டை, ஜன. 4- புதுக்கோட்டை அருகே துப்பா க்கி சுடும் பயிற்சியின்போது குண்டடி பட்டு பலியான சிறுவன் புகழேந்தி உட லுக்கு அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சி யர் கவிதா ராமு, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.சின்னத்துரை, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலைப் பட்டியில் தமிழக காவல் துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் உள் ளது. இங்கு கடந்த மாதம் 30-ம் தேதி மத்திய தொழிலகப் பாதுகாப்பு படை யினரும், தமிழக போலீசாரும் தனித் தனியே துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இங்கிருந்து துப்பாக்கியால் சுடப்பட்டதில், சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்தில் தனது பாட்டி வீட்டில் இருந்த கூலித் தொழிலாளி கலைச் செல்வனின் மகன் கே.புகழேந்தி யின்(11) தலையில் குண்டு பாய்ந்தது. ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, தலையில் இருந்த குண்டு அகற்றப் பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி புகழேந்தி திங்களன்று மாலை பரி தாபமாக உயிரிழந்தார்.இந்த சம்ப வம் குறித்து மத்திய தொழிலக பாது காப்புப் படையினர் மற்றும் போலீ சார் மீது கீரனூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கொதிப்பு
துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து கொத்தமங்கலப்பட்டி மற்றும் நார்த்தாமலை ஆகிய 2 இடங்களில் புகழேந்தியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் திங்களன்று இரவில் சாலை மறிய லில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத் தினால் திருச்சி - புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், எஸ்.பி. நிஷா பார்த்திபன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரண்டரை மணி நேரம் நீடித்த மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
எம். சின்னத்துரை எம்.எல்.ஏ கோரிக்கை
சிறுவன் புகழேந்தி குண்டடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் எம்.சின்ன துரை உடனிருந்து கண்காணித்து வந்தார். தொடர்ந்து தமிழக முதல் வருக்கு கோரிக்கை மனு அளித்த தோடு உயர்தர சிகிச்சை அளிக்க அனைத்து வகையான முயற்சிகளை யும் மேற்கொண்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை மாலையில் புகழேந்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொட ர்ந்து, உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் குடும்பத்திற்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்; மேலும் இலவச வீடும் கட்டி தர வேண்டுமென அரசுக்கு எம். சின்னத்துரை எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் ரூ.10லட்சம் இழப்பீடு
இதனைத் தொடர்ந்து, புகழேந்தி யின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்நிலையில், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன் புதுக்கோட்டையில் செய்தியா ளர்களிடம் கூறியது: உயிரிழந்த சிறுவன் புகழேந்தி க்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு, ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். துப்பாக்கி சூடு சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கல்வித் தகுதிக்கு ஏற்ப சிறுவனின் குடும்பத்தில் ஒருவருக்கு தமிழக முதல்வரின் ஆலோசனையுடன் அரசு வேலை வழங்கப்படும் .தமிழக முதல்வரின் ஆலோசனையுடன் பசு மலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
இதனைத் தொடர்ந்து, சிறுவன் புகழேந்தியின் உடல் செவ்வாய்க் கிழமை மதியம் இரண்டரை மணி யளவில் சொந்த ஊரான கொத்தமங்க லபட்டிக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்ச்சியில் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன், மாநிலங்களவை உறுப்பினர் எம். எம். அப்துல்லா, மாவட்ட ஆட்சி யர் கவிதா ராமு கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை, விராலிமலை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சி.விஜயபாஸ்கர், திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லப்பாண்டியன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர் மன், சிபிஐ மாவட்டச் செயலாளர் மு. மாதவன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பா.ஆறுமுகம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
(ந.நி)