சென்னை, மார்ச் 5 - எல்ஐசி , பங்கு விற்பனையை கைவிட வலியுறுத்தி சனிக்கிழமை யன்று (மார்ச் 5) நாடு முழுவதும் தர்ணா போராட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக எல்ஐசி ஊழியர் சங்கங்கள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தர்ணா நடைபெற்றது. இதில் பேசிய தலைவர்கள் பொதுத்துறைகளை விற்பவர்கள் தேச விரோதிகள் என்று சாடினர்.
திமுக துணை நிற்கும்
திமுக செய்தி தொடர்பு செயலா ளர் டி.கே.எஸ். இளங்கோவன் பேசுகை யில், “ஒன்றிய பாஜக அரசு கையாளா காத அரசாக உள்ளது. அரசு சொத்துக் களை 2 குஜராத் முதலாளிகளுக்கு விற்கும் புரோக்கர் வேலையை செய்து வருகிறது. பாஜக அரசை நடத்தாமல், அமேசான் நிறுவனத்தை போல் நடந்து கொள்கிறது. பொதுத்துறைகள் தனியார்மயமானால் இடஒதுக்கீடு பறிபோகும். ஊழியர்களின் ஒற்றுமையான போராட்டத்தால் பங்கு விற்பனை கால தாமதமாகிறது. அரசியல் கட்சிகள் பொதுத்துறை விற்பனையை எதிர்க்கா விட்டால், மக்கள் அவர்களை புறந் தள்ளுவார்கள். பங்கு விற்பனையை எதிர்த்து ஊழியர்கள் நடத்தும் அனைத்து போராட்டத்திற்கும் திமுக துணை நிற்கும்” என்றார்.
மூலதனத்தை முடக்குவோம்
சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் குறிப்பிடுகையில், “பொதுத்துறை எல்ஐசி தனியார்மய மானால் பாலிசிதாரர்கள் ஏமாற்றப்படு வார்கள். நிதி மூலதனத்தை திரட்டும் வங்கி, இன்சூரன்ஸ், சமூக நோக்கோடு செயல்படும் பேருந்து, ரயில், விமான போக்குவரத்து போன்றவை பொதுத் துறையாகத்தான் இருக்க வேண்டும். மக்கள் சேமிப்பு யாரிடம் இருக்க வேண்டும்? பொதுத்துறை சேமிப்பு மூலதனம் வாயிலாகத்தான் நாடு வளர்ந்துள்ளது. பொதுத்துறைகளை விற்பவர்கள் தேசவிரோதிகள். எனவே, பொதுத்துறை பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்ச் 28-29 தேதிகளில் நடை பெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் எல்ஐசி ஊழியர்களும் கலந்து கொள்ள வேண்டும். மூல தனத்தை முடக்கும் வகையில் நமது போராட்டத்தை வலுவாகநடத்துவோம்; அரசு அடிபணியும்” என்றார்.
ஆட்சியை அகற்றுவோம்
தொமுச பொருளாளர் கி.நட ராஜன் பேசுகையில், “நாட்டில் உள்ள 32 கோடி குடும்பங்களில் 40 கோடி எல்ஐசி பாலிசிகள் உள்ளன. சாலை அமைத்துவிட்டு சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிக்கிறார்கள். குத்தகை என்ற பெயரில் சாலை, எண்ணெய்க் குழாய்கள், மின்சார கிரிட் போன்ற வற்றை தனியாருக்கு கொடுக்கிறார் கள். நாடாளுமன்ற கட்டிடத்தை மட்டும் தான் குத்தகை விடாமல் உள்ளனர். அடுத்து ஆட்சிக்கு வந்தால் அதையும் குத்தகைக்கு விட்டுவிடுவார்கள். எனவே, நாட்டை பாதுகாக்க பாஜகவை வீழ்த்துவோம்” என்றார்.
சொத்து மதிப்பு குறைப்பு
இந்தப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சென்னை பகுதி-1ன் பொதுச் செய லாளர் எஸ்.ரமேஷ்குமார், “எல்ஐசி-யின் சொத்து மதிப்பு 5.40 லட்சம் கோடி என ஒன்றிய அரசு குறைத்துக் காட்டு கிறது. உதாரணத்திற்கு சென்னை அண்ணாசாலை எல்ஐசி ஒரு ஏக்கர் பரப்பில் உள்ளது. அதன் மதிப்பு 10 கோடி ரூபாய் என மதிப்பிட்டுள்ளது. ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு பிறகு எல்ஐசி பங்குகளை வாங்க 2.50 கோடி டிமேட் கணக்குகள் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. இது மக்கள் தொகையில் 1.5 விழுக்காடு மட்டுமே. மேலும், பாலிசிதாரர்கள் ஃபேன் எண்ணை பாலிசியோடு இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன்படி 60 லட்சம் பேர் மட்டுமே செய்துள்ளனர். இதுவும் 1.5 விழுக்காடு மட்டுமே. எனவே, மக்களும், ஊழியர்களும் விரும்பாத பங்கு விற்பனை முடிவை கைவிட வேண்டும்” என்றார். இந்தப்போராட்டத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம், பாதுகாப்புத்துறை ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி. ஸ்ரீகுமார், பிஎஸ்என்எல்இயு தமிழ்நாடு மாநிலத் தலைவர் எஸ்.செல்லப்பா, இந்திய வங்கி ஊழியர் சம்மேளன அகில இந்திய இணைச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன், லிகாய் பொருளாளர் கே. தாமோதரன், அகில இந்திய எல்ஐசி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பி.விஜயகுமார், எல்ஐஏஎப்ஐ தலைவர் என்.பி.சுப்பிரமணியன், தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணைச் செயலாளர் ஆர்.கே.கோபிநாதன், ஐசிஇயு சென்னை பகுதி-2ன் பொதுச் செயலாளர் எம்.தனசெல்வம், பகுதி-1ன் இணைச் செயலாளர் டி.ரமேஷ் உள்ளிட்டோர் பேசினர்.