புதுச்சேரி, நவ. 27- தமிழைக் கருவறைக்குள் அனுமதிக்காதவர்கள் தான் காசி யில் தமிழுக்கு விழா நடத்து கிறார்கள் என்று எழுத்தாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மூத்த தலைவருமான ச.தமிழ்ச் செல்வன் கூறினார். புதுச்சேரியில் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சாகித்திய அகாடமி விருதுபெற்ற எழுத்தா ளர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய “தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்” என்ற நூல் அறிமுக விழா ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது. இவ்விழாவிற்கு முற் போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் புதுச்சேரி தலைவர் உமாஅமர்நாத் தலை மை தாங்கினார்.
முனைவர் க.பஞ் சாங்கம் நூல்குறித்து அறி முக உரையாற்றினார். தமுஎகச தமிழ்மாநில துணைப்பொதுச் ்செயலாளர் களப்பிரன், திரைக்கலைஞர் ரோகிணி, மாநிலசெயற்குழு உறுப்பினர்எஸ்.ராமச்சந்தி ரன், தமிழ்மாநிலக்குழு உறுப்பி னர் பாவலர் சண்முகசுந்தரம், கலை இலக்கிய பெருமன்ற புதுச்சேரி நிர்வாகி எல்லை சிவக் குமார், கவிஞர்கள் பாலசுப்பிர மணியன், உமாமோகன்,புதுவை இளவேனில்,முஎகச புதுச்சேரி செயலாளர் மணி.கலிய மூர்த்தி,நிர்வாகிகள் லெனின் பாரதி, பச்சையம்மாள், விநாயகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். இறுதியாக நூலின் ஆசிரிய ரும்,எழுத்தாளருமான ச.தமிழ்ச் செல்வன் ஏற்புரையாற்று கையில், இரண்டு அடி தூரம் உள்ள கோவில் கருவறைக்குள் தமிழை அனுமதிக்காதவர்கள் தான் பல மைல் தூரத்திற்கு அப்பால் காசியில் தமிழுக்கு விழா நடத்துகிறார்கள். இதன் மூலம் அவர்கள் யாரை ஏமாற்று கிறார்கள்.
எனவே தான் பரந்த மேடை அமைத்து அனைத்து பகுதியினரையும் ஒருங்கி ணைக்க வேண்டிய கட்டாயம் இன்றைக்கு முற்போக்கு சக்தி களுக்கு எழுந்துள்ளது. சிறுகதை என்பது ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடைத்து வைக்கமுடியாது. சக லத்தையும் வெளியில் கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே இந்த நூலை இயற்றியுள்ளேன். புத்தகம் வீட்டு அறையில் ஓய்வு எடுப்பதை நாம் அனுமதிக்க முடி யாது. எனவே புத்தகம் வாசிப் பைப் பரவலாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று அனை வரையும் அவர் கேட்டுக் கொண்டார். முன்னதாக மாண வர் கிளை சார்பில் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.