தூத்துக்குடி, ஜூன் 20- தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர் லைட் ஆலையை விற்பனை செய்ய வுள்ளதாகவும், வாங்க விருப்பம் உள்ள வர்கள் வரும் ஜூலை 4ஆம் தேதிக்கு முன்ன தாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றும் வேதாந்தா நிறுவனம் நாளிதழ்களில் விளம்பரம் ஒன்றை வெளி யிட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர் லைட் தொழிற்சாலையில் தாமிர உருக்கு வளாகம், கந்தக அமில தொழிற்சாலை, தாமிர சுத்திகரிப்பு ஆலை, தொடர் தாமிர கம்பி ஆலை, பாஸ்பாரிக் அமில தொழிற்சாலை, ஆக்சிஜன் உற்பத்தி ஆலை, ஊழியர்கள் குடியிருப்பு வளா கம் என10 பிரிவுகள் விற்பனைக்கு வருவ தாக விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டுள் ளது. ‘ஆக்சிஸ் கேபிடல்’ என்ற நிறுவ னத்தின் மூலம் இந்த விற்பனைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள் ளன. ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொடர் போராட்டங்களில் பொது மக் கள் ஈடுபட்டனர். 2018 மே மாதம் 22 அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக வந்தபோது, காவல்துறையினர் துப்பாக்கிசூடு நடத்தினர். அதில் 13 பேர் பலியாகினர். அதன் எதிரொலியாக, தமிழக அரசு அந்த ஆலையை மூட உத்தரவிட்டது. மூடப்பட்ட ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா குழுமம் வழக்குகளை நடத்திவரும் நிலையில், அந்த ஆலை யை விற்பனை செய்ய ஞாயிறன்று திடீ ரென விளம்பரம் வெளியாகியுள்ளது.
பொதுமக்கள் சந்தேகம்
இதுதொடர்பாக, ‘’ஸ்டெர்லைட் ஆலையை விற்கப்போவதாக விளம்ப ரம் கொடுத்திருக்கிறார்கள். அந்த விளம்பரத்தில், அந்த ஆலை இயங்கும் நிலையில் தயாராக இருப்பதாக சொல்கி றார்கள். அதோடு, ஆலையின் எல்லா பகுதிகளும் முழுத்திறன் கொண்டதாக இருப்பதாக கூறுகிறார்கள். இந்த ஆலை இயக்கத்தால் ஏற்பட்ட சுற்றுச் சூழல் பாதிப்புகளை கணக்கில் கொண்டுதான் மக்கள் போராடினார்கள், ஆலை மூடப்பட்டது. தற்போது அந்த நிறுவனம் வழக்குகளில் இருந்து தப் பித்துக்கொண்டு மீண்டும் ஆலையை செயல்படவைப்பதற்காக, ஆலையை விற்பதுபோல தோற்றத்தை ஏற்படுத்து கிறார்கள் என்றே தோன்றுகிறது” என போராட்டக் குழுவைச் சார்ந்த தலை வர்கள் கூறுகின்றனர்.
இயங்காத நிறுவனம் எப்படி நிதி தருகிறது?
இதுதொடர்பாக, ஸ்டெர்லைட்டை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்குகளில் மிகத் திறமை யுடன் வாதங்களை எடுத்துவைத்து நீதியை நிலைநாட்டிய வழக்கறிஞர் இ. சுப்பு முத்துராமலிங்கம் கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலை வெளியிட்டுள்ள விளம்பரம் மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே என்று தெரிகிறது. ஏனென்றால், தற்சமயம் ஆலை இயங்கவில்லை என்றே கூறப்பட்டு வருகிறது; ஆனால், சமீப நாட்களில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது படுகாயம டைந்தவர்களில் 14 பேருக்கு தலா ரூ.2.5 லட்சம் வரையில் நிவாரண நிதி என்ற பெயரில் ஸ்டெர்லைட் நிர்வாகம் நிதி வழங்கியிருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த நிதி, பெரும் நிறு வனங்கள் பொது மக்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்காக செல வழிக்கும் பொருட்டு கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ஸ்டெர்லைட் நிர்வாகம் இந்த தொகையை வழங்கி யிருப்பதாகவும் தெரிகிறது. இயங்காத ஒரு நிறுவனம் எப்படி சமூக பொறுப்பு நிதியில் ஒதுக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது. எனவே, ஸ்டெர்லைட் நிர்வா கம், தொடர்ந்து லாபம் சம்பாதிக்க வேறு ஏதோ சூழ்ச்சியில் இறங்கியிருப்ப தாகவே கருத இடமுள்ளது” என்று குறிப்பிட்டார்.