“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் விளம்பரப் (?) பிரிவின் தலைவர் சுனில் அம்பேகர் (நல்ல வேளையாக, அம்பேத்கர் இல்லை) பேசியதைப் படித்தவுடன் இந்தக் குறள் தான் நினைவுக்கு வந்தது.
“இந்தத் தலிபான் சம்பவம் எதிர்வினை யல்ல. ஏதோ தூண்டுதலால் உருவான எதிர் வினையல்ல. இது மனநிலை சார்ந்தது. நம்பிக்கை சார்ந்த கட்டமைப்பு” என்கிறார். உதய்பூரில் இரண்டு மதவெறியர்கள் ஒரு தையல்காரரைப் படுகொலை செய்கிறார் கள். அவர் நூபுர் சர்மாவுக்கு ஆதரவளித்த தற்காகக் கொலை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. உச்சநீதிமன்ற மும் கூட தற்போது நாட்டில் நடைபெற்று வரும் நிகழ்வுகளுக்கு நூபுர் சர்மாவின் கருத்துதான் ஒற்றைக்காரணம் என்று கூறி யுள்ளது. இந்த நிலையில்தான் சுனில் அம்பேகர் தனது கருத்தைப் பதிவு செய்துள் ளார். நல்ல எடுத்துக்காட்டுதான் அவர் கூறி யிருக்கிறார். தலிபான் சம்பவம் என்கிறார். அதைத்தான் அடுத்தடுத்த வார்த்தைகளில் அவர் விளக்கிச் சொல்கிறார். “இது இந்தியா வில் அல்ல, உலகளாவிய அளவில் உள்ள ஒன்று என்றும் சொல்கிறார். அந்த உலக ளாவிய மனநிலை இந்தியாவுக்குள் நுழைந்து விட்டது. நாம் இதைக் கவன மாகக் கண்காணிக்க வேண்டும். இத்தகைய பழமைவாதக் கொள்கைகளை ஆதரிப்ப வர்கள் அரசியலுக்காகச் செய்கிறார்களா அல்லது சுய நலத்திற்காகச் செய்கிறார் களா என்பதைப் பார்க்க வேண்டும்” என்கிறார். படிக்கும்போது நியாயமாகத் தோன்றும். சரிதானே... உலக அளவில் மதத்தின் பெயரால் எவ்வளவு படுகொலைகள் நடக் கின்றன. இந்தியாவிற்குள் இது நுழைந்து விட்டதே என்ற வேதனைக்குரல் விம்முவ தில் என்ன தவறிருக்க முடியும்.. நிற்க.
மெய்ப்பொருள் என்ன?
மதவெறி சார்ந்த வன்முறைகள் இந்தி யாவுக்குப் புதிதல்ல. இது ஒன்றும் டிக்கெட் எடுத்து விமானத்தில் பறந்து வந்து இங்கு புகுந்ததல்ல. சமணர்கள் கழுவேற்றப்பட்ட சம்பவம் வரலாற்று ஏடுகளில் ஆழப் பதிந்து கிடக்கிறது. மதத்தின் பெயரால், அதன் ஆணிவேர்க் கூறான சாதியின் பெயரால் பலியானவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காததாகும். அந்தப் பழமைவாத வெறியின் பசி இன்னும் அடங்கவில்லை. நாகரீக உலகம் என்று நம்மால் சொல்லிக் கொள்ளப்படும் இந்த நூற்றாண்டிலும் ஆணவக் கொலைகள் பல தலைகளை உருட்டித் தள்ளுகின்றன. சுனில் அம்பேகர் ஒரு அம்சத்தை அநாயசமாக உருட்டி விடுகிறார். நம்பிக்கை சார்ந்து கட்டமைக்கப்பட்டவையே இவை என்கிறார். அவரது குறி, சிறுபான்மையின ரைக் குறித்ததாக இருந்தாலும், இந்திய நிலைமையில் பெரும்பான்மை சமூகத்தி னரை இந்தக் கட்டமைப்பிற்குள் கொண்டு வருவதற்கான வேலைகள் அண்மைக் காலங்களில் பெரும் அளவில் நடந்துள் ளன. இந்தக் கட்டமைப்புக்குள் மற்றொரு வேலையும் தெளிவாக நடக்கிறது. மாற்று மதத்தினர் எதிர்க்கருத்துகளைத் தெரி வித்தால் அவர்கள் பயங்கரவாதிகள். தங்கள் மதத்தினரே எதிர்க்கருத்துக்களைத் தெரி வித்தால் அவர்கள் தேச விரோதிகள். தேச விரோதிகள் என்ற பதத்தை இவர்கள் பயன் படுத்த விரும்புவதற்கு மற்றொரு காரணம் என்னவென்றால், தேசம் என்றால் இந்து மதம் என்று அர்த்தப்படுத்த விரும்புவதே யாகும்.
இந்து மதம் என்ற நம்பிக்கையின் அடிப்ப டையில் இவர்கள் ஒரு கட்டமைப்பை அமைக் கிறார்கள். அதை தேசத்தின் அடிப்படை என்று சொல்லிக் கொள்கிறார்கள். அத்த கைய கட்டமைப்பில் வெறுப்பு என்பது அடிப் படைக்கூறாகும். “நூபுர் சர்மாவைச் சொல்கி றீர்களே.. லிங்கத்தை இழிவாகப் பேசிய தற்கு அவர் கொடுத்த பதில்தானே அது” என்று சாதாரண மதப்பற்றாளர்களைப் பேச வைக்கிறார்கள். இத்தனைக்கும் மசூதியில் கிடைத்தது லிங்கமல்ல என்பதுதான் எதிர்த் தரப்பில் வந்த கருத்தாகும். அதையே இழிவு என்று சொல்லுமளவுக்கு “நம்பிக்கை சார்ந்து கட்டமைக்கிறார்கள்”.
வெறும் எதிர்வினைகளல்ல
தமிழகம் சந்தித்த பெரும் மதவெறி சம்ப வங்களில் கோவை குண்டுவெடிப்பு மறக்க முடியாதது. அதன் ரணங்கள் இன்னும் ஆறா மல்தான் இருக்கின்றன. இது எதிர்வினை என்றுதான் சொல்லப்பட்டது. செல்வராஜ் என்ற காவலர் ஒரு இரு சக்கர வாகனத்தை தடுக்கிறார். அதில் இருந்தவர்கள் இஸ்லா மிய அமைப்பைச் சேர்ந்தவர்களாவர். அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையின் விளைவாகக் காவலர் கொல்லப்பட்டார். அதற்கு “எதிர்வினையாக” 19 இஸ்லாமி யர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதற்கு “எதிர்வினையாக” குண்டு வெடிப்பு கள் நிகழ்ந்தன. “எதிர்வினைகளுக்கு”க் கார ணமான முதல் சம்பவத்தில் கொல்லப்பட்ட காவலர் செல்வராஜ் கிறித்துவர் என்பது பல ஆண்டுகளுக்கு மறைக்கப்பட்டதாகவே இருந்தது. சம்பவம் நடந்தபோது இது தெரிந்திருந்தும் பல ஊடகவியலாளர்கள் பயந்தோ அல்லது வேண்டுமென்றோ வெளியில் சொல்லவில்லை. மதவெறித் தாக்குதல்களுக்கு மாற்று மதத்தினரையே பயன்படுத்தும் உத்தி கூடுதல் ஆபத்தை உருவாக்கியுள்ளது. ஜூலை 3 ஆம் தேதியன்று, காஷ்மீரில் ஒரு பயங்கரவாதியை மக்களே பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கி றார்கள். விசாரித்ததில், அவர் பாஜகவின் நிர்வாகிகளில் ஒருவர் என்று தெரிய வந்துள் ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல்காரர் கன்னையாலால் கொலை யில் கைதாகியுள்ளவருக்கும் பாஜகவின ருக்கும் தொடர்பிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது மட்டுமல்ல, தங்கள் அலுவலகங்கள் மீது தாங்களே குண்டு வீசிவிட்டு, மதக் கலவரத்தைத் தூண்டும் முயற்சிகளும் நடந்தன; நடக்கின்றன. அய்யோ.. நமது தேசத்தைக் குறிவைக்கிறார்கள் என்று அல றிக்கொண்டே, அப்பழுக்கற்ற காவல்துறை அதிகாரிகளில் ஒருவரான ஹேமந்த் கர்கா ரேயைப் போட்டுத் தள்ளினர். அனைத்து வகையான மதவெறிகளுக்கும் எதிரான வராக அவர் இருந்ததே அவரது கொலை க்குக் காரணமாக அமைந்தது. அவரது கவ சத்தைத் துப்பாக்கிக் குண்டுகள் எப்படி துளைத்தன என்பது “ரபேல்” ரகசியமாகும். 2013 ஆம் ஆண்டில் தபோல்கர், 2015ல் பன்சாரே மற்றும் கல்புர்கி, 2017ல் கவுரி லங்கேஷ் ஆகியோரின் கொலைகள் சிந் தாந்த ரீதியாக எதிர்நிலை எடுப்பவர்களுக் கான தண்டனைகளாக மாறியுள்ளன. ஜனநாயக, முற்போக்கு, மக்கள் நல, சாதி எதிர்ப்பு மற்றும் மாற்று மதச் சிந்தனைக ளை அனுமதிக்க முடியாது என்பதுதான் மத வெறியாளர்களின் செய்தியாக இருக்கிறது. அதன் “(எதிர்) வினைகளுக்கு” முட்டுக் கொடுத்து நிற்கவே “நம்பிக்கை சார்ந்த கட்டமைப்புகளை” உருவாக்குகிறார்கள். இது ஆப்கானிஸ்தானில் தலிபான் என்றால், இந்தியாவில் இந்துத்துவவாதிகள்தான். நமக்கு முன்னால் இருக்கும் ஆபத்து என்னவென்றால், அத்தகைய நம்பிக்கை சார்ந்த கட்டமைப்பை உருவாக்குவதில் இந்துத்துவவாதிகள் வெற்றி பெற்றுள்ளனர் என்பதேயாகும். அவர்களால் எளிதாக யார் மீது வேண்டுமானாலும் வெறுப்பைத் தூண்டிவிட முடிகிறது. இந்த நம்பிக்கை சார்ந்த கட்டமைப்பை அரசியல் ரீதியாக ஆர்.எஸ்.எஸ்-பாஜக பயன்படுத்துகிறது. வலுவான பிரச்சார வலையைப் பின்னியி ருக்கிறார்கள். ஆட்சியில் இருப்பதால் பண மழை கொட்டுகிறது.
இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு ஆட்சிகளைக் கவிழ்க்கிறார்கள். ஆட்களை விலைக்கு வாங்குகிறார்கள். ஒருமுறை திரிபுராவில் சட்டம் ஒழுங்கு சீரழிந்திருப்பது தொடர்பாக ஒரு குழு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்தது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஜர்னா தாஸ் பைத்யாவும் இருந்தார். மாநிலப் பிரச்ச னையைப் பற்றி பேசாமல், எங்கள் கட்சியில் நீங்கள் இணைந்துவிடலாமே என்று ஷா கேட்க, நான் உள்துறை அமைச்சரைப் பார்க்க வந்திருக்கிறேன், பாஜக தலைவரை அல்ல என்று முகத்திலடித்தாற்போன்று பதிலடி கொடுத்தார் ஜர்னாதாஸ். மதவெறிக் கருத்துகளை முன்னுக்கு வைத்து, மறுபுறத்தில் பொருளாதார ரீதி யாக அனைத்து மக்களையும் பிழிந்து எடுக்கி றார்கள். பெட்ரோல், டீசல் விலைகள் உயர்வு, ஒட்டுமொத்த விலைவாசியை எகிறச் செய்திருக்கிறது. வயிறு குளிர மோர் குடிக்கலாம் என்றால், குடித்து முடித்தவு டன் அதற்கும் ஜி.எஸ்.டி. என்று சொன்ன வுடன் மீண்டும் வயிற்றில் நெருப்பு பற்றிக் கொள்கிறது. வேலையில்லா இளைஞர்கள், வேலைக்காக விண்ணப்பித்தால் அதற்கான விண்ணப்பக்கட்டணத் திற்கு ஜி.எஸ்டி.போட்டு வதைக்கின்றனர்.
என்ன தைரியம்?
இப்படி மக்களை வதைக்கும் கொள் கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு எங்கி ருந்து தைரியம் வருகிறது? நாட்டின் அரசி யலையும், “நம்பிக்கை சார்ந்த கட்டமைப்பு களை”யும் இணைத்து விட்டால் போதும் என்று மதவெறியாளர்கள் நம்புவதே காரண மாகும். பல மாநிலங்களில் வெற்றியும் கிடைத்துள்ளது. தமிழகத்தில் கூட, இரண்டு மாவட்டங்களில் பாஜகவின் செல்வாக்கு இருக்கிறது. கன்னியாகுமரி மற்றும் கோவை ஆகிய அந்த இரண்டு மாவட்டங்களும் மதக்கலவரங்களால் கடுமையான பாதிப்பு க்கு உள்ளானவையாகும். கலவரம் ஏற் பட்டால் தங்களுக்கு ஆதாயம் என்பதால் தான் பல இடங்களில் கலவரத்திற்கான விதைகளைத் தூவி வருகிறார்கள். சுனில் அம்பேகரின் கருத்து, ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிரானதாக இருந்தாலும், அது எந்த மதவெறியாக இருந்தாலும், அதன் நம்பிக்கை சார்ந்த கட்ட மைப்பு மூலமாக நடத்தப்படும் அரசிய லையே குறிக்கிறது. தங்கள் வளர்ச்சிக்காக யார் கழுத்திலும் சுருக்கு மாட்ட இந்த அரசியல் தயங்காது. அடுத்த கழுத்து உங்களுடையதாகவும் இருக்கலாம்.
நம்பிக்கை நட்சத்திரங்களாய்
இந்த “நம்பிக்கை சார்ந்த கட்டமைப்பு கள்” மூலம் உலகம் முழுவதும் நடந்து வரும் இனவெறி, மதவெறி, சாதிவெறி உள்ளிட்ட அனைத்து வெறிகளுக்கும் எதிரான தடுப்ப ரணாக கம்யூனிஸ்டுகள் - இடதுசாரிகள் - ஜனநாயக சக்திகள் நிற்கின்றனர். மதவெறி அரசியலைத் தாண்டி ஒன்றுபட்டு நின்று வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி வாகை சூடிய விவசாயிகள் நம்பிக்கை அளிக்கி றார்கள். வறுமை, பட்டினி, வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் ஆகியவற்றிற்கு வெறுப்பு அரசியல் தீர்வு தராது என்பதை நாட்டின் மக்கள் திரளில் கணிசமான பகுதியினர் உணர்ந்தே உள்ளனர். போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்த ஜனநாயக அரசியல் தொடர்கிறது. தொடர வேண்டும். தொடரும்.