இந்தியாவை மீட்பதற்கான அறப் போராட்டக் களத்தில் உங்களுடன் இணைந்து நானும் நிற்கிறேன். தமிழ்நாடு இழந்த உரிமைகளை மீட்கவும், இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் வளம் பெறவும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகிற கூட்டாட்சிக் கருத்தியலைக் காத்திடவும், பாசிச சக்திகளை வீழ்த்திடவும் நாடாளுமன்றத் தேர்தல் எனும் ஜனநாயகக் களத்தை எதிர்கொள்கிறோம். திமுக தலைமையிலான கொள்கைக் கூட்டணி தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் உள்ள 40 தொகுதிகளை தோழமைக் கட்சிகளோடு இணக்கமாகப் பங்கிட்டுக் கொண்டு களம் காண ஆயத்தமாகி விட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்திற்கான திமுக-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, கட்சி சார்பில் கள மிறங்கும் 21 வெற்றி வேட்பாளர்களையும் அறி வித்தேன். எந்தவொரு தேர்தல் களமாக இருந்தாலும் எதை அடிப்படை நோக்கமாகக் கொண்டு களம் காண்கிறோம் என்பதை தேர்தல் அறிக்கை வாயிலாகத் தெள்ளத் தெளிவாகத் தெரிவித்து மக்களைச் சந்திப்பதுதான் பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து திமுக கடைப்பிடித்து வரும் தேர்தல் நடைமுறை. அதன் வெளிப்பாடுதான், தற்போது வெளியிடப்பட்டுள்ள 64 பக்கத் தேர்தல் அறிக்கை
.உண்மையான புதிய இந்தியா இதுவே நமது லட்சியம்
தமிழ்நாடு மீண்டும் உரிமையுடன் திகழ்வ தற்காக மட்டுமின்றி, இந்தியாவில் உண்மையான ஜனநாயகமும் கூட்டாட்சிக் கருத்தியலும் நிலை பெறவும் கழகத்தின் சார்பில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. உண்மையான புதிய இந்தியாவைக் கட்டமைத்திடும் உன்னத லட்சி யத்துடன், தோழமைக் கட்சிகளுடன் இணைந்து திமுக களம் காண்கிறது. திமுக சார்பில் போட்டியிடும் 21 வேட்பாளர் களில் அனுபவமிக்கவர்களும் உண்டு, அறிமுக வேட்பாளர்களும் உண்டு. அனைவருமே உதய சூரியன் சின்னத்தின் வேட்பாளர்கள் என்பது மட்டுமே உங்கள் இதயச்சுவரில் பதிய வேண்டிய செய்தி. கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் போட்டி யிடும் தொகுதிகளும் நமது தொகுதிகள்தான். அவர்களின் வேட்பாளர்களும் நம்மவர்கள் தான். அவர்களின் சின்னங்களும் நம்முடை யதுதான். நாற்பது தொகுதிகளில் தனித்தனி வேட்பாளர்கள் நின்றாலும், அனைத்துத் தொகுதிகளிலும் உங்களில் ஒருவனான இந்த ஸ்டாலின்தான் வேட்பாளராக நிற்கிறேன் என்ற உணர்வுடனும் கொள்கை உறவுடனும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உத்வேகத்துடனும் களப்பணியாற்றிட வேண்டும் என ஒவ்வொரு திமுக தொண்டர்களையும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
தேர்தல் எதிரிகள் அல்ல; மனித குலத்திற்கே எதிரிகள்
உங்களின் களப்பணிகளை ஊக்கப்படுத்த வும், தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களின் ஆதரவைத் திரட்டவும், 40 தொகுதிகளிலும் நமது கூட்டணியின் வெற்றியை உறுதி செய்திடவும் ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேரில் வருகிறேன். இன்று (மார்ச் 22) தீரர் கோட்டமாம், திருப்புமுனைகள் பல தந்த திருச்சியிலிருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறேன். 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் நாம் சந்திக்கும் எதிரிகள் நமக்கான அரசியல் எதிரிகள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிரிகள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும், இந்தியா வின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும், பன்முகத்தன்மைக்கும் மதச்சார்பின்மைக் கொள்கைக்கும், கூட்டாட்சிக் கருத்தியலுக்கும் எதிரிகள். மொத்தமாகச் சொல்வதென்றால் மனித குலத்தின் எதிரிகள்.
பொய் சொல்வதையே கொள்கையாக கொண்டவர்கள்
பொய் சொல்ல அஞ்சாதது மட்டுமல்ல, பொய்களை மட்டுமே சொல்வது என்பதைக் குறிக்கோளாக கொண்டிருக்கிறார்கள் மத்திய பாஜக ஆட்சியாளர்கள். பிரதமர் என்ற மாண்புக் குரிய பொறுப்பை வகிப்பவர் தொடங்கி மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என அத்தனை பேருமே பொய்யை மட்டுமே பரப்புரையாக மேற்கொண்டு வருவதை கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் வாக்கா ளர்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்தோம் என்பதைச் சொல்வதற்கு எதுவுமில்லாமல் திமுகவை விமர்சிப்பதும், தி.மு.க. ஆட்சி மீது வீண்பழி போடுவதும், திமுக கூட்டணி பக்கம்தான் தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள் என்பது உறுதியாகத் தெரிவ தால், தமிழர்களையே தீவிரவாதிகள் எனச் சித்தரிப்பதும் பாஜகவின் பரப்புரை பார்முலாவாக இருக்கிறது.
தமிழகம் வஞ்சிக்கப்பட்டதை வீடு, வீடாகச் சொல்வோம்...
10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாடு எப்படி வஞ்சிக்கப்பட்டுள்ளது என்பதை வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு வாக்காளரிடமும் எடுத்துச் சொல்வோம். அதற்கு அதிமுக எப்படி துணைபோனது என்ற துரோகத்தையும் மறக்கா மல் எடுத்துரைப்போம். தனித்தனியாக நிற்கும் கள்ளக்கூட்டணியின் முகத்திரையைக் கிழித்திடு வோம். வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் பரப்பப்படும் பொய்களையும் வதந்தி களையும் முறியடிக்கும் வகையில் ஆன்லைன் பரப்புரையையும் முனைப்புடன் மேற்கொள் வோம். ஒவ்வொரு வாக்குச் சாவடிக்குட்பட்ட வாக் காளர்களிடமும் திமுக கூட்டணிக்கு ஆதரவைத் திரட்டுவோம். ஒவ்வொரு வாக்கும் நம் ‘இந்தியா’ வின் வெற்றியை உறுதி செய்யட்டும்.