tamilnadu

img

திருக்கடையூர் 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நாசம்

மயிலாடுதுறை, நவ.11 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடியில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் 3 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி போயின. இதனால் விவ சாயிகள் கவலை அடைந்துள்ளனர்.                                              திருக்கடையூர் பகுதிகளில் பல ஆயி ரம் ஏக்கரில் சம்பா சாகுபடி மற்றும் நேரடி நெல் விதைப்பு மூலம் விவசாயிகள் சாகு படி செய்திருந்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் 3 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பயிர்கள்  நீரில் மூழ்கி நாசமாகி வருகின்றன.  குறிப் பாக திருக்கடையூர், கிள்ளியூர், கண்ணங்குடி, காலாக்கட்டளை, வெள் ளைதிடல், பிள்ளைபெருமாநல்லூர், டி.மணல்மேடு, கிடங்கல், ஆக்கூர், மடப்புரம், மாமாகுடி, மருதம்பள்ளம் கால மநல்லூர், வேப்பஞ்சேரி உள்ளிட்ட பகுதி களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், 20 நாட்களுக்கு முன்பு பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன. மழை தொடர்ந்து நீடித்தால் நெற்பயிர்கள் முற்றி லும் அழுகி போகும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.