தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் எதிரில் புதிதாக துவங்கப்பட்ட சிஐடியு முடி திருத்தும் தொழிலாளர்கள் சங்க துவக்க விழாவில் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் கலந்து கொண்டார். அவரிடம் சங்க உறுப்பினர்களிடையே சேகரிக்கப்பட்ட 21 ஆறு மாத தீக்கதிர் சந்தாவிற்கான தொகையை சங்க நிர்வாகிகள் வழங்கினர். நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் உ.முத்துப்பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.உச்சிமாகாளி, தாலுகா செயலாளர் அசோக் ராஜ் ,சிஐடியு மாவட்ட செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.