2022 ஜூலை 22 அன்று நடைபெறவுள்ள குடியரசுத் தலை வர் தேர்தலில், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் என்னைக் குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாள ராக நிறுத்தியுள்ளதற்கு முதற்கண் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவையும், இந்திய அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாப்பதற்காக நான் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறேன். இது ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான தேர்தல் அல்ல. நான், திருமதி திரௌபதி முர்மு மீது தனிப்பட்ட முறையில் பெரிய அளவில் மதிப்பு வைத்திருக் கிறேன். எங்கிருந்து வந்தோம் என்பதோ நாம் எந்த மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என்பதோ இங்கே பிரச்சனை அல்ல. இந்தத் தேர்தலானது இரு சித்தாந்தங்களுக்கு இடையே யான ஒன்றாகும். இந்தியாவின் ஜனநாயகத்தை நான் பிறந்ததிலிருந்து இறக்கப்போகும்வரையிலும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என் பெற்றோர் தலைமுறை பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரத்திற் காகப் போராடியது. அவர்கள் இந்தியக் குடியரசையும் மாண்புமிக்க ஜனநாயகத்தையும் தோற்றுவித்தார்கள். என் தலைமுறை இந்த ஜனநாயகத்தைக் கட்டி எழுப்பி, அதற்கு உயிரூட்டியது.
நாம் அனைவரும் மகாத்மா காந்தியின் தொலைநோக்குப் பார்வைக்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ளோம். இந்தியா, உலகத்திற்கே ஒரு முன்மாதியான நாடாக மாறியது. ஒரு காலத்தில் மிகவும் ஏழை நாடாக இருந்த இந்தியா, ஓர் உயிரோட்டமான ஜனநாயக நாடாக மிளிர்ந்தது. ஆனால் இப்போது என் தலைமுறை இந்தியாவின் ஜனநாயகம் இறந்து கொண்டி ருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது நடந்திட நாம் விட்டுவிடக் கூடாது. அவர்களின் சித்தாந்தம் இந்தியர்களையும் நம் ஜனநாயகத்தையும் நசுக்கிட விரும்புகிறது. நம் சித்தாந்தம் நம்மை விடுவித்து நம் ஜனநாயகத்தை வலுப்படுத்த விரும்புகிறது. நம் அரசமைப்புச்சட்டமானது அரசாங்கத் திற்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்குத்தான் அதிகாரம் வழங்கியிருக்கிறது. ஆனால் இப்போதுள்ள ஆளும் கட்சியோ அதன் எல்லையை மீறி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அது ஜன நாயகத்தின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. அனைத்து அதிகாரங் களும் பிரதமரிடம் குவிக்கப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு நிறுவனமும் ஊழல்மயமாகிக் கொண்டிருக்கிறது. அவை அவருடைய கரத்தை வலுப்படுத்தும் விதத்தில் பலவீனப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. குடிமக்கள் என்ற முறையில், இதை ஏன் என்று நாம் கேட்கிறோம், கேட்க வேண்டும். இந்திய ஜனநாயகத்தை அவர்கள் ஏன் அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நாம் கேட்க வேண்டும். அவர்கள் இலட்சியம்தான் என்ன? ஒருசிலரின் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்த அவர்கள் விரும்புகிறார்களா? அமைச்சரவை என்பது வெறுமனே மேல் ஓடு போல மாறியிருக்கிறது. நாடாளுமன்றம் ஒரு ரப்பர் ஸ்டாம்ப்பாக மாற்றப்பட்டிருக்கிறது. சட்டங்கள் எவ்விதமான கூராய்வோ அல்லது விவாதமோ இன்றி அவசரகதியில் நிறைவேற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றன. உச்சநீதிமன்ற நீதிபதிகள் முதலில் சமரசத்திற்கு உள்ளாக்கப் பட்டு, பின்னர் வெகுமதி அளிக்கப்படுகிறார்கள். முக்கியமான வழக்குகள் விசாரணை செய்யப் படுவதில்லை. தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன. தேர்தல் ஆணையம், இந்திய ரிசர்வ் வங்கி, மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம், அமலாக்கத்துறை, மத்திய கணக்குத் தணிக்கைத்துறை தலைவர் அலுவலகம் என அனைத்தும் துஷ்பிரயோகம் செய்யப்படு கின்றன. பொய் வழக்குகள் பதிவு செய்யப்படு கின்றன, குடிமக்கள் சிறைக்குள் அடைக்கப் பட்டு பாடம் கற்பிக்கப்படுகிறார்கள். சிறுபான்மை யினரை அச்சுறுத்துவதற்காக புல்டோசர்கள் ஏவப்படுகின்றன. ஒன்றிய அரசாங்கம், அர சமைப்புச்சட்டத்தின் கூட்டாட்சி அமைப்பின்மீது பல்வேறு தாக்குதல்களைத் தொடுத்திருக்கிறது. மாநிலங்களின் அதிகாரங்களை சூறையாடிக் கொண்டிருக்கிறது.
பெகாசஸ் கதை, இந்த அரசாங்கத்தின் உண் மையான சொரூபத்தைக் காட்டியிருக்கிறது. இந்திய அரசாங்கம் இஸ்ரேலிய நிறுவனம் ஒன்றிடமிருந்து எப்படி ராணுவ உளவு மென்பொருளை வாங்கியிருக்கிறது என்பதை உலக ஊடகங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தன. இந்த மென்பொருளுக்கான பணம் அரசாங்கத்தின் கஜானாவிலிருந்து கொடுக்கப் பட்டுள்ளது. நான் உட்பட ஆயிரக்கணக்கான பிரஜைகளை குறிவைத்து பெகாசஸ் பயன்படுத்தப்பட்டது. இதேபோன்று அமைச்சரவையில் உள்ள தனது சொந்த அமைச்சர்கள் பலர் மற்றும் அதிகாரிகளையும் குறிவைத்துப் பயன்படுத்தி னார்கள். பிரதமரும் அவருடைய எடுபிடிகளும் நாட்டின் சட்டத்தை உடைத்துக்கொண்டிருக் கிறோம் என்பதையும் ஜனநாயக மாண்புகளை நொறுக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் நன்கு அறிவார்கள். எனினும் அவர்கள் இத்த கைய கிரிமினல் உளவு மென்பொருளை, தங்கள் அரசியல் எதிரிகளுக்கு எதிராக உளவு பார்த்திடப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எந்தவொரு பக்குவப்பட்ட ஜனநாயகத்திலும் இதுபோன்ற அம்சங்கள் வெளிச்சத்திற்கு வரும்போது அங்கேயுள்ள அரசாங்கம் வீழும். மாறாக, இங்கே ஊடகங்களில் உள்ள ஒரு பிரிவினரின் உதவியுடன் இந்த அரசாங்கம் இவற்றை மறைக்க வெட்கமற்ற முறையில் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. நான் வாஜ்பாய் அவர்களின் அரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்தவன். அது 1999இல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்ந்தது. ஆட்சி அதி காரம்தான் எங்கள் இலட்சியம் என்றிருந்திருந் தால், நிச்சயமாக அன்றைக்கு அதனை நாங்கள் வாங்கியிருப்போம், அல்லது அந்த வாக்கைப் பெறுவதற்காக அரசாங்கத்தின் ஏஜன்சிகளைப் பயன்படுத்தி இருப்போம். நாங்கள் அதைச் செய்யவில்லை. நம் நாடு, நம் ஜனநாயகம், நம் எதிர்காலம் அதிகாரத்திலிருப்பதைவிட மிகவும் முக்கியம் என நாங்கள் கருதினோம்.
ஆனால், மறுபக்கத்தில் இப்போதுள்ள அர சாங்கம், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவ தற்காக, முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களையே உடைக்கும் வேலைகளில் இறங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இதற்கு சமீபத்திய உதாரணம், மகாராஷ்டிரா வில் சிவசேனா-தேசியவாதக் காங்கிரஸ்- காங்கிரஸ் அரசாங்கத்தைக் கவிழ்த்திட மேற் கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகளாகும். இது அரசியல் ஒழுக்கக்கேடு எந்த அளவிற்கு மோசமாக மாறியிருக்கிறது என்பதையே காட்டுகிறது. அவர்கள் சித்தாந்தம் சர்வாதிகாரத்தை விரும்புகிறது, நம் சித்தாந்தமோ சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல இருந்திட விரும்புகிறது. முழுமையான அதிகாரத்தைப் பெற வேண்டும் என்பதற்காக ஆட்சியாளர்கள் அர சமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கையாக விளங்கும் மதச்சார்பின்னையையே மீறிக் கொண்டிருக்கிறார்கள். நம் அரசமைப்புச் சட்டம் நம் அனைவருக்கும் அவர்களின் மதத்தைப் பின்பற்ற சுதந்திரம் அளிக்கிறது. மதத்தின் அடிப்படையில் எவரொருவருக்கும் பாகுபாடு காட்டக் கூடாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். எனினும், நம் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பல்வேறு பாதுகாப்பு ஷரத்துக்கள் அளிக்கப் பட்டிருக்கக்கூடிய நிலையிலும், சிறுபான்மை இனத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் இரண்டாம்தர பிரஜைகளாக தங்களை உணரும்படி மாற்றப்பட்டுக் கொண்டி ருக்கிறார்கள். அவர்கள் தேசத்திற்குத் தங்கள் விசு வாசத்தைக் காட்டவேண்டும் என்று மிரட்டப்படு கிறார்கள். அவர்கள் பல்வேறு வடிவங்களில் தனிமைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சட்டத்தைத் தாங்களே கைகளில் எடுத்துக் கொள்ளும் நபர்களால் அவர்கள் தண்டிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள், அவர்களின் இருப்பிடங்கள் புல்டோசர்களால் தரைமட்டமாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு தேர்தலின்போதும் இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்கள் அவர்களுக்கு எதிராக அவதூறுகளை அள்ளிவீசிக் கொண்டிருக்கிறார் கள். இந்த ஆட்சியாளர்களுக்கு கலகங்கள் தேவை. அதன்மூலம் சிறுபான்மையினரை மேலும் இழிவுபடுத்த பேய்த்தனமாக முயற்சிக் கிறார்கள். நம் நாடு எப்போதும் எல்லோருக்குமானதாக இருந்து வந்திருக்கிறது. நாம் நம் வேற்றுமை களை மதித்திருக்கிறோம். அனைத்து சகோதர, சகோதரிகளும் இங்கே வரவேற்கப்பட்டிருக்கிறார் கள். ஒவ்வொருவரும் மதிப்புடன் கருதப்பட்டிருக் கிறார்கள். அவர்களுக்கு சட்டத்தின் கீழ் முழு பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. இதுதான்
அவர்களின் சித்தாந்தம் பிளவுபடுத்துவது, நம் சித்தாந்தம் ஒன்றுபடுத்துவது.
நம் அரசமைப்புச்சட்டம் வாய்மையே வெல்லும் என்பதை அடிப்படையாகக்கொண்டது. அவர்களின் சித்தாந்தம் பொய்களை அடிப்படை யாகக் கொண்டது. நாம் 5 டிரில்லியன் டாலர் பொரு ளாதாரத்தைப் பெறுவோம் என்றும், கறுப்புப் பணம் திரும்பவும் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய் கொடுப் போம் என்றும், விவசாயிகளின் வருமானம் இரட்டிப் பாக்கப்படும் என்றும் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை அளிப்போம் என்றும் 100 ஸ்மார்ட் சிட்டிகள் கட்டுவோம் என்றும், விரை வில் புல்லட் ரயில்களில் பயணிப்போம் என்றும், சீனா நம் நிலத்தை அபகரிக்க முடியாது என்றும் நமக்கு சொல்லப்பட்டது. அனைத்தும் பொய்கள். நம் பிரதமர் மக்களைப்பற்றி நினைக்கவோ சிந்திக்கவோ இல்லை. அவர் முழுமையான அதி காரத்தை விரும்புவதால் பெரிய அளவிற்கு பயங் கரமான தவறுகளைச் செய்துகொண்டிருக்கிறார். நம் நாடு, பணமதிப்புநீக்கம் சமயத்தில் கடுமை யாகப் பாதிக்கப்பட்டது. கோவிட் பெருந்தொற்றின் போது எண்ணற்ற குளறுபடிகள்.
அவர்களின் சித்தாந்தம் பெரும் பொய்களை அடிப்படையாகக் கொண்டது, நம் சித்தாந்தம் உண்மையை அடிப்படையாகக் கொண்டது.
ஆளும் கட்சி, குடியரசுத் தலைவர் அலு வலகத்தை மற்றுமொரு ரப்பர் ஸ்டாம்பாக மாற்ற விரும்புகிறது. குடியரசுத் தலைவர் என்பவர் அரசமைப்புச்சட்டத்தின் காவலர். ஆனால் நம் ஆட்சியாளர்கள், அவர்கள் செய்வது நம் அர சமைப்புச்சட்டத்தின் விழுமியங்களுக்கு எதி ரானவை என்று எவரும் விமர்சிப்பதை விரும்ப வில்லை. எவ்விதமான விமர்சனமுமின்றி செயல்பட அவர்கள் விரும்புகிறார்கள். அவர்கள் ஜனநாயகத்தைப்பற்றிப் பேசுவார்கள். ஆனால் எதார்த்தத்தில் எதேச்சதிகார ஆட்சி முறை யைப் பின்பற்றுகிறார்கள். இதனை உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது. நாம் ஒரு ஜனநாயக அமைப்பு என்று எவரும் சொல்லவில்லை. மாறாக நாம் ஒரு “தேர்ந்தெடுக்கப்பட்ட” சர்வாதி காரத்தைப் பெற்றிருக்கிறோம் என்கிறார்கள். நான் மீண்டும் கூறுகிறேன்: குடியரசுத் தலை வர் தேர்தல் இரு நபர்களுக்கு இடையேயானது அல்ல. இந்தப்போராட்டம் இரு சித்தாந்தங்களுக்கு இடையேயானது.அவர்கள் சித்தாந்தம் ஜனநா யகத்தை அழிக்கும் சர்வாதிகாரம். நம் சித்தாந்தம் ஒவ்வொரு குடிமகனுக்குமான சுதந்திரம். நாம் நம் ஜனநாயகத்தை வலுப்படுத்த விரும்புகிறோம். அனைத்து நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களுக்கும் கட்சிவேறுபாடு களுக்கு அப்பாற்பட்டு எனக்கு வாக்களிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கிறேன். நாட்டு மக்களிடம் நம் சித்தாந்தத்தை ஆதரிக்கக் கேட்டுக்கொள்கிறேன். இதனை அவர்களுடைய நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கக் கேட்டுக்கொள்கிறேன். ஜெய் ஹிந்த்.
- தமிழில்: ச.வீரமணி