tamilnadu

img

இருபாலரும் சேர்ந்து படிப்பதில் தவறில்லை: அமைச்சர் பொன்முடி

சென்னை, மே 6- தமிழ்நாடு சட்டப்பேர வையில் வெள்ளிக்கி ழமை (மே 6) நடந்த கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்த னர். அதிமுக உறுப்பினர் செந்தில்குமார், “கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில், இளவய திலேயே பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே அந்தப் பகுதியில் மகளிர் கல்லூரி அமைத்துத் தரப்படுமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உயர்  கல்வித்துறை அமைச்சர்  பொன்முடி, “ஏற்கெனவே இதுகுறித்து சட்டமன்றத் தில் நான் பேசியிருந்தேன். ஷிஃப்ட் முறை கொண்டு வந்து மகளிருக்கு தனியாக இடம் கொடுக்கலாம் என்று கூறியிருந்தேன். அதற்கு ஒரு பத்திரிகையில் தலையங்கம் எழுதியுள்ளனர். பெண்கள் ஆண்களைப் பிரித்து ஷிப்ட்  முறையெல்லாம் கொடுக்கக் கூடாது. பெரியார் கொள்கை யின்படி இருபாலரும் சேர்ந்து தான் படிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் அதைத்தான் கூறினர். எனவே மகளிர் கல்லூரி என்று ஏற்படுத்துவதைவிட, இருபாலரும் சேர்ந்து படிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதைத்தான் வளர்க்க வேண்டும் என்று  நினைக்கிறோம். சில இடங்களில் மாணவிகளுக்கு தனியாக கல்லூரி அமைக்க வேண்டும் என்பதுபோன்ற கோரிக்கைகள் முக்கியமாக  வரும்போது, பரிசீலித்து முடிவெடுக்கப்படும்” என்றார். சுயநிதி கல்லூரிகள்  அரசுக்கு கட்டுப்பட வேண்டும்! தனியார் கல்லூரிகள் கட்டணங்கள் வசூலித்து நடத்துவதால் பல்வேறு சிரமங்கள் இருந்தாலும் அனைத்து சுயநிதிக் கல்லூ ரிகளும் அரசின் கட்டுப் பாட்டில்தான் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர்  தெரிவித்தார்.