படிப்பில் வெற்றி, தோல்வி என்றெல் லாம் இல்லை. வெற்றி பெற்றவர், வெற்றி பெறாதவர் என்ற இரண்டு வகையினர்தான் உள்ளனர். மீண்டும் முயன்றால் வெற்றியை அடைந்துவிட முடியும். தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொண்டவுடனேயே, மறு தேர்வுக்குத் தயாராவது நல்லது. தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்க கம் இது குறித்து ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுகளுக்கு வருகை புரியாத மாண வர்கள், அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று 16.05.2024(வியாழன்) முதல் 01.06.2024 வரையிலான நாட்க ளில் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்ச்சி பெறாத ஒவ்வொரு பாடத்திற் கும் ரூ.50 வீதம் தேர்வுக்கட்டணமும், அத னுடன் இதரக் கட்டணமாக ரூ. 35ம் செலுத்த வேண்டும். ஆன்லைன் பதி வுக்குத் தனிக் கட்டணமாக ரூ.70 செலுத்த வேண்டும். இதைப் பணமாகச் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட நாட்களுக்குள் விண்ணப் பிக்க இயலாத மாணவர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தின்கீழ் 03.06.2024 (திங்கள்) மற்றும் 04.05.2024 (செவ்வாய்) ஆகிய நாட்களில் ஆன்லைனில் விண் ணப்பிக்க வேண்டும். இதற்காக சிறப்பு அனுமதிக்கட்டணம் ரூ.1,000. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெறாத / வருகை புரி யாத மாணவர்களுக்கு இந்தக் கட்ட ணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படு கிறது. மறு தேர்வு 24.06.2024 அன்று தொடங்கி 01.07.2024 அன்று நிறைவு பெறுகிறது. தேர்வுகள் குறித்த விரிவான தகவல்கள் மற்றும் பாடங்களுக்கான தேர்வு நாட்க ளைத் தெரிந்து கொள்ள www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தைப் பார்வையிடலாம். மறுதேர்வில் தேர்ச்சி பெற்றுவிட் டால், நடப்பாண்டிலேயே மேற்படிப்பில் சேர்ந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளன. ஓராண்டு வீணாகாது. ஏற்கனவே படித்த வைதான். எதில் நாம் பலவீனமாக இருக்கிறோம் என்பதைப் பார்த்து அதில் தேர்ச்சி பெறுவதற்கான வேலையைச் செய்ய வேண்டும். நிச்சயம் நம்மால் முடி யும்.