tamilnadu

img

பறவைகளைப் பலி கொள்ளும் பாசாண உரம்!

 புலம்பெயர் பறவையான நார்த்தன் பிண்டெய்ல்கள் (ஊசிவால் வாத்து) பழவேற்காடு ஏரியில் மயங்கிய நிலையில் காணப்படுகிறது. இவற்றில் பல பறவைகள்  இறந்துவிட்டதாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.

சென்னைக்கு அருகில் பறவைகளை நோக்குவதற்கான பல்வேறு தளங்  கள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக் கது பழவேற்காடு ஏரி. கடற்கரைக்கு அருகி லுள்ள மிகப் பெரிய உப்புநீர் ஏரி இது. பண் டைக்காலத்தில் திருப்பாலைவனம் என்ற பெய ரில் துறைமுகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. டச்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் இதை துறைமுகமாகப் பயன்படுத்தியுள்ளனர். ஆங்கிலேயர் காலத்தில் பக்கிங்ஹாம் கால் வாயின் தொடர்ச்சியாக நீர்வழிப் பாதையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள் வாயில் பழவேற்காடு என்ற பெயர் நுழையாத தால், பழவேற்காடு புலிகாட் ஆகிவிட்டது. இந்தியாவில் உள்ள இரண்டாவது மிகப் பெரிய கழிமுக உப்புநீர் ஏரி (Lagoon) இது.  (முதல் மிகப்பெரிய ஏரி ஒரிசாவில் உள்ள சிலிகா  ஏரி) தமிழகம் –ஆந்திரம் என இரு மாநிலங்க ளில் அமைந்துள்ளது. பரப்பளவில் பார்த்தால் இதுவே தமிழகத்தின் பிரம்மாண்ட பறவை சர ணாலயம். 46,102 ஹெக்டேர். 35 கி.மீ. அக லம் கொண்டது. 1980-களிலேயே இந்த ஏரி பற வைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுவிட் டது. கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள இந்த  ஏரிக்கு 150 வகை பறவைகள் வந்து சென்றதாக  பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பழ வேற்காடு ஏரியில் விஷ உரத்தை உண்ட நார் தர்ன் பிண்டெய்ல் (ஊசிவால் வாத்து),  சாண்ட் ப்ளோவர்ஸ் (மணல் உப்புக்கொத்தி) என்ற புலம்பெயர் பறவைகள்  உயிரிழந்துவிட்டன. இவை பல்லுயிர் பெருக்கத்திற்காக நீண்ட தூரத்திலிருந்து பழவேற்காடு ஏரிக்கு வருபவை யாகும். சில நார்த்தன் பிண்டெய்ல்கள் (ஊசிவால் வாத்து) பழவேற்காடு ஏரியில் மந்த (மயக்க) நிலையிலேயே இருந்துள்ளன. இவற்றில் பல  பறவைகள் பின்னர் இறந்துவிட்டதாக உள்ளூர்  மக்கள் கூறுகின்றனர்.

ஊசிவால் வாத்துகள் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா கண்டங்களில் இனப்பெருக்  கம் செய்து பல்வேறு இடங்களுக்கும் செல்லும்.  இவற்றில் சில  குளிர் காலத்தில் தென்னிந்தியா வுக்கும் வருகின்றன.  இவை வீட்டு வாத்தைவிடச்  சிறியவை. சுமார் 65 செ.மீ நீளமிருக்கும். ஆணும்  பெண்ணும் இணையாகவோ அல்லது சிறு கூட்ட மாகவோ நாணல் புதர் நிறைந்த ஏரிகளில் திரி யக்கூடியன. பிற வாத்துகளோடு கலந்தும் காணப்படும். இவை தானியங்களையும், தாவ ரப் பொருட்களையும் முதன்மை உணவாகக் கொள்கின்றன. உயிரிழப்பிற்கு உரம் அல்லது பூச்சிக் கொல்லி மருந்துகள் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர் வனத்துறையினர். 2024 பிப்ரவரி 14-ஆம் தேதி அண்ணாமலைச்  சேரிக்கு சென்றபோது பல பறவைகள் இறந்து  கிடந்ததை கண்டதாக இந்து இணையதள தக வல் தெரிவிக்கிறது.   பல பறவைகள் சுறுசுறுப்பின்றி மந்தமான நிலையிலும், பல பறவைகள் வேகமாகப் பறக்க  முடியாமல் தவித்ததாகவும் உள்ளூர் மக்கள் கூறி னர். உள்ளூர் மீனவர் ஒருவர் கூறுகையில், கிள வாய், வாத்துகள் மந்தமாக இருந்து பார்த்த தில்லை என்கிறார்.  தகவலறிந்து  சென்ற வனத்துறை அதிகாரி கள் உள்ளூர் வனத்துறை அதிகாரிகள் சம்பவ  இடத்திற்கு வந்து பறவைகளை வேட்டையாடக்  கூடாது என அப்பகுதி மக்களை அறிவுறுத்தி யுள்ளனர். நாங்கள்  பறவைகளைப் பிடிக்க எந்த  முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.  வேறு  சிலர் பறவைகளை தூக்கிச் செல்ல ஏதாவது  செய்திருக்கலாம் என்கின்றனர் அண்ணா மலைச்சேரி மீனவர்கள்.  இதற்கிடையில் வனத்துறையினர் இறந்த  இரண்டு பறவைகளின் மாதிரிகள் மற்றும் தண்  ணீரை சோதனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.  இது குறித்துப் பேசிய சென்னை வனவிலங்கு  காப்பாளர் இ.பிரசாந்த், முதற்கட்ட சோத னைகள் மற்றும் உடற்கூராய்வு பரிசோதனை யின் படி பறவைகள் உயிரிழப்பிற்கு அடர்  உரம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது  என்றார்.  மேலும் அவர் கூறுகையில், “கூடுதல் ஆய்  வுக்காக பறவைகளின் மாதிரிகள் சென்னை  வேப்பேரியில் உள்ள தமிழ்நாடு கால்நடை மற்  றும் கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத் திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் சில  நாட்களில் பறவைகள் இறப்பிற்கான காரணம்  தெளிவாகத் தெரியவரும் என்றார். அடர் உரம்  சம்பந்தப்பட்டிருப்பதால்  இது ஒழுங்கமைக்கப் பட்ட வேட்டையாடலாகவும் இருக்கலாம் என்ற  சந்தேகமும் எழுந்துள்ளது.