tamilnadu

img

மல்லர் கம்பம்- மலர்ச்சி பெறுமா?

எத்தனையோ வீர விளையாட்டுகளும் கலைகளும் தமிழகத்தில் உள்ளன. தற்காப்பு கலைகளுக்கெல்லாம் முன்னோடியாக உள்ளவை சிலம்பம், களரி, மல்யுத்தம் மற்றும் மல்லர் கம்பம். போர் வீரர்களுக்கு ஆயத்த பயிற்சிக்காக  மனிதன் போன்று நின்று கொண்டிருக்கும் நீண்ட உருளை வடிவிலான கம்பத்தில் பிடித்து தொடை , கைகள் மற்றும் உடல்  தசை நார்கள் போன்றவற்றை வலுப் படுத்திக் கொள்ள மல்லர் கம்பம் பயிற்சி யாக உருமாறியது.  மல்லர் கம்பக் கலை ஆதித்தமிழரின் கலையாக இருந்தது. அது இங்கிருந்து பரவி  மராட்டியம், மத்திய பிரதேசம் போன்ற மாநி லங்களில் இன்று சிறப்பாக விளையாடப் பட்டு வகுகிறது. 19 -ஆம் நூற்றாண்டில் இரண்டாம் பேஷ்வா மன்னரால் சமஸ்தா னத்தின் அவைக் குருவான  ‘பாலம் பட்ட தாதா தியோதர்’ (1780-1852) என்பவரால் மல்லர் கம்பம் கலை இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்பட்டதால், இவர்தான் மல்  லர் கம்பத்தின் தந்தை என்று இன்றுவரை போற்றப்படுகிறார்

மல்லன்- என்றால் ‘வீரன்”. கம்பம் என்  றால் உருளை வடிவ நீண்ட கம்பத்தினை குறிக்கும் “ மல்லர் கம்பம்’ என்னும் சொல்லும்  தமிழில் மட்டுமே பேசப்பட்ட சொல்லாக திகழ்  கிறது.  அக்காலங்களில் மன்னர்கள். செய்து  ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு மற்போர் பழ கியதாகவும், மற்போர் செய்வதற்கும் போருக்குச் செல்வதற்கும் முன்பு மல்லர்  கம்பத்தில் ஏறி வீரர்கள் அவர்களது உடம்பை யும் மனதையும் உறுதிப்படுத்துவதற்கு இந்த  கலை மிகவும் உறுதுணையாக இருந்ததாக வும் தெரிகிறது. மல்லன் என்ற சொல் சிலப்பதி காரம், திருக்குறள் ஆகிய தொன்மை வாய்ந்த நூல்களில் உள்ளது. நமது தமிழகத்தில் 7- ஆம் நூற்றாண்டில்  கட்டப்பட்ட காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் கல்வெட்டுகள் முதல், 11-ஆம்  நூற்றாண்டில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய  கோவில், கங்கை கொண்ட சோழபுரம் மற்றும்  தாராசுரம் கோவில் கல்வெட்டுகளில் இருந்து, மல்யுத்த கலை சிறப்பு பெற்றுத் திகழ்ந்தது தெரியவருகிறது. 

மல்லர் கம்பம் குறித்து தமிழ்நாடு அமெச்சூர் மல்லர் சங்க சிவகங்கை மாவட்ட  செயலாளர் கலைச் செல்வம் கூறுவதாவது: மனிதன் போன்ற உருவம் கொண்ட அந்த  கம்பம் உபகரணம் சுமார் 1 அடி முதல் 10 அடி வரை அமைந்திருக்கும். தொங்கும் மல்லர்  கம்பம் ஆண்கள் மட்டுமே பயிற்சி பெறுவ தற்காக உருவாக்கப்பட்டது. மல்லர் கயிறு என்பது முன்பு பெண்களால் மட்டும் விளை யாடப்பட்டு வந்தது காலப்போக்கில் போட்டி  முறையில் இதனை இணைத்ததால் இன்று  ஆண்களும் மல்லர் கயிறில் ஏறி பயிற்சி பெற்று வருகின்றனர். ஒரு அடி முதல் 10 அடி வரையிலான கம்பங்களில் மாணவர்களின் உடலின் உயரத்  திற்கு ஏற்றவாறு கம்பங்கள் உருவாக்கப் பட்டு அதில் முதலில் பயிற்சி பெற்ற பின்பே பெரிய கம்பங்களில் பயிற்றுவிக்கப்படுகிறது.அனைத்து விளையாட்டுக்கள் போலவும் மல்லர் கம்பம்  விளையாட்டிற்கும் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டு  இருக்கின்றன. மல்லர் கம்பம் தமிழ்நாடு அமெச்சூர் மல்லர் கம்பம்  சங்கம் சார்பாக வருடம் தோறும் போட்டிகள் நடத்தப்  பட்டு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறு பவர்கள் தேசியப் போட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்  படுகிறார்கள். தேசிய போட்டிகள் 1980 -களில் இருந்து நடை பெற்றுக் கொண்டு இருக்கின்றன. 12 வயதிற்கு உள்பட்ட பிரிவு, 14 வயதிற்கு உள்பட்டபிரிவு, 18 வயதிற்கு உள்பட்ட பிரிவு, 18 வயதிற்கு மேல் என ஆண்களுக்கும், பெண்  களுக்கும் போட்டிகள் நடைபெறுகின்றன. ஆண்டு தோறும் தமிழகத்தில் இருந்து தேசிய போட்டியில் வெற்றி  பெறுபவரின் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது.  தேசியப் போட்டிகளில் அதிக பரிசுகளை பெறுவது மகா ராஷ்டிர வீரர்கள்தான். இளைஞர் நலன் மற்றும் தேசிய விளையாட்டு பிரிவின் கீழ் மல்லர் கம்பம் விளையாட்டு அங்கீக ரிக்கப்பட்டு, பாரம்பரிய உள்நாட்டு விளையாட்டுப் பட்டி யலில் சேர்க்கப்பட்டுள்ளது 

மகாராஷ்டிரம், உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்கள் மல்லர் கம்பத்திற்கு அங்கீ காரம் அளித்து சான்றிதழ்களை அரசு வேலைக்கு எடுத்துக்கொள்கின்றனர். மத்திய அரசும் மாநிலங்க ளவையில் தீர்மானங்கள் நிறைவேற்றி அரசு வேலைக்கு மல்லர் கம்பம் விளையாட்டினை அங்கீக ரித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் மல்லர் கம்பத்துக்கு  இன்னும் அங்கீகாரம் அளிக்காதது ஏமாற்றமளிக்கிறது என்றார் அவர். 2021 -ஆம் ஆண்டு முதல் சிவகங்கை மாவட்டத்தில்  மல்லர் கம்ப பயிற்சிகளை அளித்து வருகிறோம். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களை உருவாக்கி யுள்ளோம். அவர்கள் கடந்த ஆண்டு தமிழ்நாடு அமைச்சூர் மல்லர் கம்பம் சார்பாக நடைபெற்ற மாநில  அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார்கள். இந்தக் கலையை தமிழ்நாடு அரசு மாவட்டம் தோறும் உள்ள விளையாட்டு மையங்களில் பயிற்சி யாளர்களை நியமித்து பயிற்சிக்கான உபகரணங்களை யும் அளித்து ஊக்கப்படுத்தினால் இந்த கலை மென்மேலும் வளரும். தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சிலம்பம் களரி முத்துவரிசை மற்றும் வர்மக்கலைக்கு பயிற்சி மையமும் ஆராய்ச்சி மையமும் நிறுவுவதற்கு முதல மைச்சர் அறிவித்துள்ளார். அதுபோல மல்லர் கம்பக் கலைக்கு மற்ற மாநிலங்களைப் போல அங்கீகாரம் அளித்தால் தமிழகத்தின் பாரம்பரிய மல்லர் கம்பக்கலையை பரவலாக்க முடியும் என்றார்.  தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மல்லர் கம்ப வீரர்களை பாராட்டி நேரில் வாழ்த்து தெரிவித்து ஊக்கம் அளித்தார். தமிழக  அரசின் அங்கீகாரத்தை பெறுவதற்கும் உதவியாக இருப்பேன் என்றும் துணை முதல்வரிடம் தெரி விப்பேன் என்றும் அவர்களிடம் உறுதி கூறினார்.