tamilnadu

img

தியாகி சுதாகரன் நினைவிடத்தில் வாலிபர் சங்கத்தினர் அஞ்சலி

அருமனை, மார்ச்.12- கன்னியாகுமரி மாவட்டத்தில் 1989 ஆம் ஆண்டு மார்ச் 12  அருமனை காவல் நிலையம் முன்பு ஆர்எஸ்எஸ் மத வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டார் அரகநாடு வாலிபர் சங்க நிர்வாகி  சுதாகரன். அவரது நினைவு தினமான மார்ச் 12 அன்று அரகநாட்டில் அமைந்துள்ள சுதாகரன் நினைவிடத்தில்  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் வாலிபர் சங்கத்தின் மாநில இணை செயலாளர் செல்வராஜ், குமரி மாவட்ட தலைவர் ரதீஷ், செயலாளர் எட்வின் பிரைட்,, மாவட்ட நிர்வாகிகள் மஞ்சாலுமூடு அனு, ரமேஷ், களியல் வட்டார தலை வர் சரத், செயலாளர் ஜித்து, வி. செறி யான், அருமனை வட்டார செயலாளர் ரெஜின், முன்னாள் மாவட்ட நிர்வாகி கள், தலைவர்கள் மற்றும் வட்டார நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மக்கள் ஒற்றுமை விழா அரகநாடு சுதாகரன் நினைவு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் மக்கள் ஒற்றுமை விழா, பேரணி பொதுக்கூட்டம் அருமனையில் நடை பெறும்.  இந்த ஆண்டும் மார்ச் 26ல்  அருமனையில் பேரணி பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது. இவ்விழாவில் வாலிபர் சங்க கேரள மாநிலச் செயலா ளர் வி. கே. சனோஜ், தமிழ் மாநில இணைச்செயலாளர் செல்வராஜ் உட்பட பலர் உரையாற்றுகின்றனர்.