tamilnadu

img

“தொல்குடிகளை மேய்ந்தழித்த கம்பளி ஆடுகள்” - கி.ஜெயபாலன், புதுக்கோட்டை

“உங்கள் செம்மறி ஆடுகள்.. இப்போது மனிதர்களையே தின்று விழுங்கும் அளவுக்குப் பெரும்  காட்டுமிராண்டிகளாகிவிட்டன”- இங்கிலாந்தின் நிலப்பிரபுத்துவ காலத்திய குத்தகை விவசாயிகளின் அவல வாழ்வையே, இங்கிலாந்தின் தத்துவவாதி யும் ‘உட்டோபியா’ நூலாசிரியருமான தாமஸ்மோர் இவ்வாறு குறிப்பிடுகிறார். வெகுமக்களின் தேவைக்கேற்ற உற்பத்தி என்பது இல்லாமல் லாபத்துக் கேற்ற உற்பத்தி என்பதே முதலாளித்துவம். 1901இல் தென் அமெரிக்க நாடான சிலியின் தொல்குடிகளை ஆயிரக் கணக்கில் இனப்படுகொலை செய்து, அவர்களின் நிலங்கள் ஆட்டு மந்தை வெளி களாகவும், லாபம் தரும் ஆட்டின் கம்பளித் தொழிலுக்காகவும் முதலாளிகளால் அப கரிக்கப்பட்டன. இந்த ரத்தக்கறை படிந்த, கொடிய காலனியாக்க வரலாற்றைப் பேசுகிறது, 2023இல் வெளிவந்த  “The Setllers”(குடியேறிகள்)திரைப்படம். சிலியைச் சேர்ந்த டான் ஜோஸ் மெனண்டஸ் என்பவன் ஆட்டுப் பண்ணை முதலாளி. இவனது ஆடுகளை தொல்குடிகள் திருடுவதை தடுக்கவும், ஆடுகளின் கிடப்பிற்கு வேலியமைக்கும் பணிகளை கண்காணிக்கவும், பூர்வ குடிகளை கொன்றொழித்து புதிய மேய்ச்சல் நிலங்களை கண்டறிந்து நில விஸ்தரிப்பு செய்வதற்கும் மூவரை நியமிக்கிறான். முன்னாள் பிரிட்டிஷ் படையின் லெப்டி னன்ட் அலெக்ஸாண்டர் மேக்லினன், பில் என்ற அமெரிக்க கூலிப்படையினன் மற்றும் இவர்களுக்குக் குற்றேவல் செய்ய செவ்விந்திய கலப்பினத்தவனான செகுண்டோ ஆகியோரே இம்மூவர்.   இவர்கள் துப்பாக்கி சுடுவதில் தேர்ந்த வர்கள். பில் கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூர்வ குடிகளின் வாடையை துல்லிய மாக அறிபவன்.செகுண்டோ குதிரைகளை பாசத்தோடு பராமரிப்பவன். குதிரை யொன்றை சொந்தமாக்க வேண்டு மென்பது இவனது வாழ்நாள் ஆசை. முதலாளியின் கட்டளைப்படி, சிலியின் படகோனியா பகுதியில் தொடங்கி அர்ஜெண்டினாவின் ஆன்டிஸ் மலைத் தொடருக்குள்ளும் இம்மூவரும் குதிரைப் பயணம் செய்து நிலங்களைப் பிடிக்கிறார்கள்.

எல்லை விரிவாக்கத்தின் போது தொல்குடிகளை அழிக்கஇம்மூவர் எண்ணி லடங்கா அட்டூழியங்களைச் செய்கின்றனர் ஏழு ஆண்டுகளுக்குப் பின் இவர்களால் அபகரிக்கப்பட்ட ஒட்டு மொத்த பகுதி களையும் உள்ளடக்கிய சிலியின் தென்  கோடியிலுள்ள புன்டா அரினாஸ் என்ற  நகரத்தை தலைமையாகக் கொண்டு, முத லாளி டான் ஜோஸ் மெனண்டஸ் தனியர சாக ஆள்கிறான். இதனை சிலி தேசத்தோடு இணைக்க அரசுப் பிரதிநிதியாக வரு கிறான் விகுனா. இருதரப்பு பேச்சு வார்த்தை துவங்குகிறது.இதுவரைக்கான தொகுப்பே இப்படக்கதை.இதனை நான்கு பாகங்களில், இரத்த வாடை நாசியைத் துளைக்கும் வகையில் சிறப்பாக படமாக்கியுள்ளனர்.  முதலாளி ஜோஸ் மெனண்டஸ், இப்பகுதியில் அமைதியை உரு வாக்க, தொல்குடிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய கட்டளை யிடுகிறான். செகுண்டோ, ரோஸா என்ற ஆதிவாசி பெண்ணின் துணையோடு, தொல்குடிகளுடன் உறவாடி, அவர்களின் நம்பிக்கையைப் பெறுகின்றனர். இந்நிலை யில், அலெக்சாண்டர், கடற்கரையில் தொல்குடிகளுக்கு பெரும் விருந்துக்கு ஏற்பாடு செய்கிறான். 300க்கும் மேற்பட் டோர் கலந்து கொள்கின்றனர். ஆட்டி றைச்சியோடு மது அருந்தி மயங்கு கின்றனர். இப்போது பேச்சுவார்த்தைக்கு நடுவராக செயல்பட்ட அலெக்சாண்டர் துப்பாக்கியால் சரமரியாக தொல்குடி களை நோக்கி சுடுகின்றான்.தப்பிக்க வழி யின்றி கடலுக்குள் ஓடுகின்றனர்.கடல்  சிவப்பாக மாறுகிறதென, இந்தக்  கொடிய நிகழ்வைத் தன் வாக்குமூல மாக செகுண்டோ,அரசுப் பிரதிநிதி விகுனா விடம் சொல்கிறான். அறச்சீற்றத்தோடு கூடிய அவனது சாட்சியம் இதயத்தை உலுக்கக்கூடியது.

பண்ணைக்கு வேலி போடும்போது இயந்திரத்திற்குள் சிக்கிக் கையை இழந்த வனை பாதுகாப்பதற்கு பதில்,”இங்கு கை யில்லை என்றால் ஒரு மனிதன் இல்லை  என்பதே கணக்கு”எனக்கூறி அவனைச் சுட்டுக் கொல்லுவது, கொல்லப்பட்ட தொல்குடிகளின் எண்ணிக்கையை எஜமானனுக்கு கணக்கு காட்ட, பிணங் களின் காதுகளை அறுப்பது,தொல்குடிப் பெண்ணோடு வெள்ளையர்கள் வன்புணர்வு செய்வதோடு, செகுண்டோ வையும் கட்டாயப் படுத்துவது,தன்குலப் பெண்ணை அவ்வாறு செய்ய விரும்பாத  அவன், ஆணையை ஏற்பது போல் நடித்து அவளது கழுத்தை நெரித்து சப்தமின்றி உயிரைப் பறிப்பது உள்ளிட்ட ஈவிரக்கமற்ற கொடுமைகளை காணும் போது நெஞ்சம் பதறுகிறது. அலெக்ஸாண்டர் செய்த கொலைக் குற்றங்கள் குறித்து பத்திரிகையில் வந்த கட்டுரையின் அடிப்படையில் விசாரிக்க வரும் அரசுப் பிரதிநிதி விகுனாவிடம் ஜோஸ் மெனண்டஸின் மகள், அலெக்ஸா ண்டர் உயிரோடு இல்லையென்றும், இப்பகுதியை உருவாக்கத் தன் தந்தை  பெரும்பாடு பட்டதாகக் கூறுகிறாள்.  ஆயிரக்கணக்கான தொல்குடி  குழந்தை களின் பசியை போக்கியதாகவும், ஆதர வற்றகளுக்கு வீடளித்ததாகவும், இங்கு நிலவிய காட்டுமிராண்டித்தனத்தை அழித்ததாகவும், ஆட்சியாளர்கள் சண்டியாகுவில் அரசியல் செய்கையில் இங்கு நிலங்களை மேம்படுத்திய தனது தந்தையின் செயல்பாடு குறித்து பேசுவது, மன்னிக்க முடியாத குற்றங் களை நியாயப்படுத்தும் வாதமாகும்.   அடர்பனிமூட்ட விடியலில் நிராயுத பாணிகளான தொல்குடிகளை சுட்டுக் கொல்லும் காட்சி; பனி படர்ந்த மலைப்  பள்ளத்தாக்குகள், மேய்ச்சல் நிலங் களின் நீண்ட தூரக்காட்சிகள். இவை இணையற்ற ஒளிப்பதிவுக்குச் சான்று.

அலெக்ஸாண்டர், பில் மற்றும் செகுண்டோ ஆகிய மூவரும் இயல்பாக நடித்துள்ளனர்.குறிப்பாக செகுண்டாவாக நடித்த ஹேமிலோ அரன்ஜிபியா இயலாமையை, கோபத்தை வெறித்த கண்களால் காண்பித்து அசத்தியுள்ளார்.   சிறப்புமிகு இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.ஃபிப்ரெஸ்கி (FIPRESCI)பரிசை வென்றுள் ளது. அந்த விருதை வென்ற முதல் சிலி தயாரிப்பு என்பதையும்,2024க்கான ஆஸ்காருக்கு சிறந்த சர்வதேச திரைப் படத்திற்கான சிலி நாட்டின் நுழைவுப் படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது. ஐரோப்பிய குடியேறிகளால் தொல்குடிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி பல படங்கள் வந்திருந்தாலும்,இதன் படமாக்கல் வித்தியாசமானது இதற்கான பின்னணி இசை நேர்த்தியானது. ஃபெலிப் ஹேல்வாஷ் ஹேபர்லே என்ற 42 வயதுடைய சிலி நாட்டவரே இயக்கி யுள்ளார். இது இவரது முதல் படம் என உணரமுடியா வகையில் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளார். இப்படம் MUBI-ல் உள்ளது.இது சிலி, அர்ஜெண்டினா கூட்டுத் தயாரிப்பாகும். முதலாளி டான் ஜோஸ் மெனண்டஸ் மகள், குழந்தை தாலாட்டுப் பாட்டை தனது தந்தை முன் பாடுவாள். 

“கண்ணுறங்கு செல்லமே
அழாமல் நீ உறங்கு 
என் குட்டிச்செல்லமே நீ
கண்விழிக்கும் போது
புள்ளியிட்ட சாம்பல்நிற 
குட்டிக்குதிரைகளை
உனக்குத் தருகின்றோம்
கண்ணுறங்கு செல்லமே
அழாமல் கண்ணுறங்கு!”

சொந்தமாக ஒரு குதிரை வாங்குவது  செகுண்டோவின் கனவு; கடைசி வரை அது கைகூடவில்லை.இது அவனுக்கு மட்டுமின்றி கார்ப்பரேட் சுரண்டலுக்கு உள்ளாகும் இன்றைய வெகு மக்களுக்கும் பொருந்தும்.