tamilnadu

img

கண்டனக் குரல் எழும்பட்டும்! காந்தி கீதம் இடம் பெறும் வரை - சு.வெங்கடேசன் எம்.பி.

குடியரசு தின விழாவில் மகாத்மா காந்தியின் விருப்ப கீதம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு ”கண்டனக் குரல் எழும்பட்டும்! காந்தி கீதம் இடம் பெறும் என்ற அறிவிப்பு வரும் வரை” என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில்,
"என்னோடிரும்
வெளிச்சம் மங்கி 
இருள் சூளும் போது 
என்னோடு இரும்"
என்ற காந்தியின் "Abide With Me" என்கிற விருப்ப கீதம் குடியரசுத் தின நாள் நிறைவு நிகழ்ச்சியில் இசைக்கப்படாது என ஒன்றிய அரசு முடிவு. 
காந்தியையே விரும்பாத அமைப்புகள் கையில் அதிகாரம் கிடைத்தால் காந்தியின் விருப்ப கீதத்தையா விட்டு வைப்பார்கள்! 
1950 இல் துவங்கி 72 ஆண்டுகள் இசைக்கப்பட்ட கீதம். 2020 இல் நீக்க முடிவு செய்யப்பட்டு கடும் எதிர்ப்பால் இடம் பெற்ற கீதம் இப்போது மீண்டும் கைவிடப்பட்டுள்ளது. "படை திரும்பும் இசை" (Beating the retreat) யாக இது குடியரசு தின நிறைவு விழாவில் இடம் பெற்று வந்துள்ளது.  இது 19 வது நூற்றாண்டில் ஸ்காட்லாந்து கவிஞர் ஹென்றி பிரான்சிஸ் எழுதி வில்லியம் ஹென்றி மாங்க் இசை அமைத்த கீதம். 
ஒவ்வொரு நாளும் ஒரு சர்ச்சை. குடியரசு தின விழாவில் தமிழ்நாடு விடுதலை வீரர் ஊர்திக்கு இடம் மறுப்பு, அடுத்து அமர் ஜீவன் ஜோதி அகற்றம், இப்போது "என்னோடு இரும்" கீதம் நீக்கம்... என்ன காரணம்?
ஒன்று மக்களின் கவனத்தை உண்மைப் பிரச்சினைகளில் இருந்து திருப்புதல்.
இரண்டாவது, இந்தியாவின் பன்முக பண்பாட்டை சிதைத்தல்.
மூன்றாவது,
மத நல்லிணக்கத்தை பேசிய ஆளுமைகளின் சிந்தனைகளை அழித்தல். 
"நீ ஆசி தந்தால் நான் 
கண்ணீர் வடிக்க மாட்டேன்"
என்பது அந்த கீதத்தின் ஒரு வரி. 
மக்கள் கருத்து துணை நின்றால் ஜனநாயகம் கண்ணீர் விடாது. 
கண்டனக் குரல் எழும்பட்டும்! 
காந்தி கீதம் இடம் பெறும் என்ற அறிவிப்பு வரும் வரை... இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.