tamilnadu

img

பஞ்சமி நிலத்தை ‘அரசு தரிசு நிலமாக’ மாற்றுவதா?

உசிலம்பட்டி அருகே குடியேறும் போராட்டம்

மதுரை, மே 29-  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா கருமாத்தூர் ஊராட்சி புல எண் : 229/2-இல் மூன்று ஏக்கர் நிலம்  பல ஆண்டுகளுக்கு முன் ஆதிதிரா விடர் மக்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக ஒதுக்கப்பட்ட “பஞ்சமி நிலமாக” இருந்துள்ளது. இதை ‘தீர்வு ஏற்பட்ட அரசு தரிசு நில மாக’ மாற்றியதை அறிந்து, அம் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் மூன்று ஏக்கர் பஞ்சமி நிலத்தை  நிலமற்ற ஏழை-எளிய ஆதிதிராவிடர் மக்களுக்கு பிரித்தளிக்க வேண்டு மெனவும் வலியுறுத்தி கருமாத்தூ ரில் விவசாயத் தொழிலாளர் சங்கம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நிலத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. திங்களன்று நடைபெற்ற இப்போ ராட்டத்தில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் மாநிலச்செய லாளர் எஸ்.சங்கர், மதுரை மாவட்டத் தலைவர்  ஜெ.காசி, மாவட்டச்செய லாளர் வி.உமாமகேஸ்வரன், துணைச் செயலாளர்  சொ.பாண்டி யன், டி.ஜெயமணி, ஏ.ஆர்.ரவி, பொருளாளர் எம். முனியாண்டி, கட்சியின் செல்லம்பட்டி ஒன்றியச் செயலாளர் வி.பி.முருகன்  உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் பேசிய எஸ்.சங்கர்,  “கருமாத்தூர் பகுதியில் ஆதி  திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த எழு வன், பெரியகருப்பன் ஆகியோ ருக்கு 1936-ஆம் ஆண்டு வழங்கப் பட்ட பஞ்சமி நிலம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி - மீனாட்சியம்மாள் தம்பதிக்கு 1969-ஆம் ஆண்டு விற்கப்பட்டுள்ளது. இது  எஸ்சி-எஸ்டி சட்டப்படி   விதிமீறலாகும். அவர்கள் அந்த நிலத்தை  1977-ஆம் ஆண்டு ஒரு தனியார் நிறு வனத்திற்கு விற்பனை செய்துள் ளார்கள்.  1995-ஆம் ஆண்டு அதிமுக அரசு நிர்வாகத்தின் போது, இந்த பஞ்சமி நிலத்தை அரசு நிலமாக வகை மாற்றம் செய்து பதிவு செய்துள்ளது. இதுவும் சட்டத்திற்குப் புறம்பானது. எனவே, அரசு கையகப்படுத்திய மூன்று ஏக்கர் பஞ்சமி நிலத்தை ஆதிதிராவிட மக்களுக்குத்தான் வழங்க வேண்டும்” என்றார்.

கே.ராஜேந்திரன் பேசுகையில், “கருமாத்தூர் பகுதியில் ஆதிதிரா விடர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட நிலம் சில தனியார் நிறுவனங்களுக்கு கைமாற்றப்பட்டுள்ளது. 2005-ஆம்  ஆண்டு உசிலம்பட்டி கோட்டாட்சியர் பஞ்சமி நிலத்தை “தீர்வு ஏற்பட்ட அரசு தரிசு நிலம்” என  மாற்றி உத்தரவிட்டுள்ளார். வகை மாற்றம்  செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை  ரத்து செய்து பஞ்சமி நிலத்தை வீடு இல்லாத ஏழை-எளிய ஆதி திராவிட  மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவாக பிரித்துவழங்கவேண்டும். ஆதிதிராவிடர்களுக்கு என ஒதுக்கப்பட்ட பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிந்தால் அதை மீட்கும் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து நடத்து கிறது. ஆதிதிராவிடர்களுக்கு என  ஒதுக்கீடு செய்யப்பட்ட  இடங்களை மீட்டு அவர்களுக்கே ஒதுக்கீடு செய்யவேண்டும்” என்றார்.  போராட்டத்தில் ஈடுபட்டவர் களுடன் காவல்துறை அதிகாரிகள், உசிலம்பட்டி வட்டாட்சியர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, “மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதி காரிகளிடம் ஆலோசனை செய்து ஒருவார காலத்திற்குள் இந்த நிலம் தகுதி உடையவர்களுக்கு வழங்கு வதற்கான ஏற்பாடுகள் செய்யப் படும்” என்றார். இதையடுத்து தற்கா லிகமாக போராட்டம் ஒத்திவைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டது.