கேஏஎல்எஸ் டிஸ்டிலரீஸ்
தமிழ்நாட்டைச் சேர்ந்த மதுபான நிறுவனம் கேஏஎல்எஸ் டிஸ்டில ரீஸ். 2019 ஆகஸ்டில் இந்த நிறு வனத்திற்குச் சொந்தமான இடங்க ளில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், கணக்கில் வராத ரூ.300 கோடி வருவாய் கண்டுபிடிக்கப் பட்டதாக அறிவித்தனர். அடுத்த ஆண் டில் ரூ.5 கோடியும், அதற்கடுத்த ஆண் டில் ரூ.3 கோடியும் இந்த நிறுவனம் பாஜகவிற்கு நிதியளித்தது. அத்துடன் இந்த நிறுவன உரிமையாளரின் மற்றொரு நிறுவனமான ரெங்கநாயகி ஏஜென்சி என்பதும் அளித்த ரூ.2 கோடி யும் சேர்த்து, மொத்தம் ரூ.10 கோடி இந்த நிறுவனத்திடமிருந்து வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது பாஜக.
கெவண்ட்டர் குழுமம்
கெவண்ட்டர் குழுமம் என்ற கொல் கத்தா நிறுவனம் அமலாக்கத் துறை சோதனைகளைச் சந்தித்த நிறு வனம். அக்குழுமத்தைச் சேர்ந்த கெவண்ட்டர் ஃபுட் பார்க், மதன்லால் லிட், எம்கேஜே எண்டர்ப்ரைசஸ் ஆகி யவை மொத்தமாக ரூ.346.9 கோடி யை தேர்தல் பத்திரங்களாக பாஜக வுக்கு அளித்திருக்கின்றன. இதில் எம்கேஜே எண்டர்ப்ரைசஸ் நிறுவனம் 2019 நிதியாண்டில் ஈட்டிய லாபம் ரூ. 5.03 கோடி. ஆனால், அந்த ஆண்டில் அது பாஜகவுக்கு அளித்திருக்கிற நிதி ரூ.14.4 கோடி! அந்த ஆண்டில் கெவண்டர் ஃபுட் பார்க் நிறுவனத்தின் லாபம் ரூ.12.4 கோடி மட்டும்தான். ஆனால், அந்த ஆண்டில் அது பாஜக வுக்கு அளித்திருக்கிற நன்கொடை ரூ.144.5 கோடி!
எஸ்என்ஜே டிஸ்டிலரீஸ்
தமிழ்நாட்டிலுள்ள எஸ்என்ஜே டிஸ்டிலரீஸ் நிறுவனத்தில், 2019 ஆகஸ்ட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அதற்கு நான்கு மாதங்கள் கழித்து இந்த நிறு வனம் ரூ.1.05 கோடியை பாஜகவிற்கு நன்கொடையாக அளித்தது. அடுத்த ஆண்டில் இந்த நிறுவனம் ரூ.6 கோடி பாஜகவுக்கு நிதியளித்தது. இவை யெல்லாம், தேர்தல் பத்திரங்களாக அன்றி, நேரடியாக நன்கொடையாக அளிக்கப்பட்டவை. ஆனாலும், சட்ட மன்றத் தேர்தல் நேரத்தில், இந்நிறு வனத்தில் மீண்டும் ரெய்டு நடத்தப் பட்டது. இந்நிறுவனம் மீண்டும் ரூ.5 கோடியை, ப்ரூடெண்ட் தேர்தல் அறக் கட்டளைக்கு வழங்கியது. அந்த அறக் கட்டளை மொத்த நிதியில் பெரும்பகுதி யை பாஜகவிற்கு வழங்கக்கூடியது. மொத்தத்தில், மீண்டும் மீண்டும் ரெய்டு நடத்தி, மிரட்டி வசூல் வேட்டை நடத்தி யிருக்கிறது பாஜக.
சிண்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
அகமதாபாத்தைச் சேர்ந்த நிறு வனம் சிண்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இந்நிறுவனத்தில் 2017 டிசம்பரில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி, ரூ.48 கோடி மதிப்பி லான சொத்துகள் பறிமுதல்; செய்யப் பட்டதாக அறிவிக்கின்றனர். 2019-20இல் இந்நிறுவனம் ரூ.1 கோடி நிதியை பாஜகவிற்கு அளிக்கிறது.
கிறிஸ்டி
நாமக்கல்லைச் சேர்ந்த கிறிஸ்டி உணவு நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் சத்துணவுத் திட்டத்திற்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்கிற நிறுவனம். இது, 2017-18இல் பாஜகவிற்கு ரூ.1 கோடி நிதியளித்துள் ளது. அடுத்த ஆண்டில் நிதி எதுவும் அளிக்கவில்லை. 2018 ஜூலையில் இந்த நிறுவனத்தில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி, ரூ. 1,300 கோடிக்கும் அதிகமான கணக் கில் வராதவை கைப்பற்றப்பட்டதாக அறிவித்தனர். வருமானவரித் துறை யுடன் “உடன்பாட்டிற்கு வந்திருப்பதாக” சென்னை உயர் நீதிமன்றத்தில் 2020இல் இந்நிறுவனம் தெரிவித்தது. அடுத்த சில மாதங்களில் ரூ.1.96 கோடியும், அதற்கடுத்த ஆண்டில் ரூ. 3.82 கோடியும் பாஜகவிற்கு இந்த நிறு வனம் நிதியளித்தது.
ரெட்டி லேப்ஸ்
190க்கும் அதிகமான மருந்து களைத் தயாரிக்கிற நிறு வனம் ரெட்டி லேப்ஸ். இந்த நிறு வனம் 2022 ஜூலையில் ரூ.1 கோடி யும், அக்டோபரில் ரூ.2 கோடியும், நவம்பரில் ரூ.12 கோடியும் பாஜக வுக்கு தேர்தல் பத்திரங்களாக அளித்தி ருக்கிறது. நவம்பர் 2023இல் இந்நிறு வனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்த அந்த மாதத்திலேயே ரூ.10 கோடியை தேர்தல் பத்திரங்களாக பாஜகவுக்கு அளித்தது இந்த நிறு வனம்.
மேகாலயா சிமெண்ட்ஸ்
அசாமின் பெரும் தொழிலதிபர் கைலாஷ் சந்திர லோகியாவின் நிறுவனம் மேகாலயா சிமெண்ட்ஸ். மேகாலயாவில் இயங்குகிற இந்நிறு வனம் 2018-19இல் ரூ.1.38 கோடி நிதியை பாஜகவுக்கு வழங்குகிறது. மேகாலயாவில் இயங்குகிற ஸ்டார் சிமெண்ட்ஸ், அம்ரித் சிமெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, அவ்வாண்டில் ரூ.4.27 கோடி நிதி பாஜகவுக்குத் தரப்படுகிறது. அடுத்த ஆண்டில் மேகாலயா சிமெண்ட்ஸ் நிறுவனம் ரூ.1.5 கோடியும், அதற்க டுத்த ஆண்டில் ரூ.50 லட்சமும் பாஜக வுக்கு அளிக்கிறது. 2019 ஏப்ரலில் ஸ்டார் சிமெண்ட்ஸ் நிறுவனம் ரூ.50 லட்சத்தை பாஜகவுக்கு தேர்தல் பத்தி ரங்கள் மூலமாக அளிக்கிறது. இவ்வள வுக்குப் பின்னும், 2021 நவம்பரில், லோகியாவின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து சில மாதங்களில் மேலும் ரூ.1.5 கோடி யை பாஜகவுக்கு அளித்த மேகாலயா சிமெண்ட்ஸ் நிறுவனம், அடுத்த ஆண் டில் மேலும் ரூ.10 கோடி அளிக்கிறது.
நாகார்ஜுனா கன்ஸ்ட்ரக்ஷன்
வருமான வரித்துறைச் சோதனை களை எதிர்கொண்ட ஹைதரா பாத்தின் நாகார்ஜுனா கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி(என்சிசி) என்கிற நிறுவனம் ரூ.60 கோடியை பாஜகவிற்கு தேர்தல் பத்திரங்களாக அளித்திருக்கிறது.
யசோதா ஹாஸ்பிடல்ஸ்
யசோதா ஹாஸ்பிடல்ஸ் என்பது ஹைதராபாத்தைச் சேர்ந்த மிகப் பெரிய மருத்துவமனைக் குழுமம். இதன் உரிமையாளர்கள், தெலுங் கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவுக்கு நெருக்கமானவர்கள். அத னால் அவரது ஆட்சியில் இந்த குழு மத்துக்குச் சலுகைகள் அளிக்கப்பட்ட தாகப் புகார் எழுந்த நிலையில், இது 2019-20இல் பாஜகவிற்கு ரூ.2.5 லட்சம் நிதியளித்தது. ஆனால், டிசம்பர் 2020இல் இக்குழுமத்திற்குச் சொந்த மான இடங்களில் வருமான வரித் துறைச் சோதனைகள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டில் ரூ.10 கோடி நிதியாகவும், ரூ.2 கோடி தேர்தல் பத்திரங்களாகவும் இந்தக் குழு மம் பாஜகவிற்கு அளித்தது.
யுஎஸ்வி
யுஎஸ்வி என்பது ஒரு மருந்துப் பொருட்கள் தயாரிக்கிற நிறு வனம். இது மும்பையில் இருக்கிறது. 2017 செப்டெம்பரில் இந்த நிறு வனத்திற்குச் சொந்தமான 20 இடங்க ளில் வருமான வரித்துறைச் சோதனை கள் நடத்தப்பட்டன. இதன் மருந்து களை பரிந்துரைப்பதற்காக மருத்து வர்களுக்குக் கமிஷன் வழங்கப்பட்ட தாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அடுத்த மாதத்தில் இந்த நிறுவனம் ரூ.9 கோடியை பாஜகவிற்கு அளித் தது. 2022 நவம்பரில் மேலும் ரூ.10 கோடியை தேர்தல் பத்திரங்களாக இந்த நிறுவனம் பாஜகவிற்கு அளித் துள்ளது.
சோம் டிஸ்டிலரீஸ்
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சோம் டிஸ்டிலரீஸ் நிறுவனம் 2018-19இல் பாஜகவுக்கு ரூ.4.25 கோடி நன்கொடை அளித்தது. அடுத்த ஆண்டில் நன்கொடை எதுவும் அளிக்கவில்லை. இந்நிறு வனத்தின் உரிமையாளர்களை, 2020 ஜூலையில் ரூ.8 கோடி வரி ஏய்ப்பு என்று குற்றம் சாட்டி, ஜிஎஸ்டி புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கீழமை நீதி மன்றங்களில் இரு முறை பிணை மறுக்கப்பட்டபின், ஆகஸ்ட்டில் ஜபல்பூர் உயர்நீதிமன்றம் அவர் களுக்குப் பிணை அளித்தது. பிணை கிடைத்த 10ஆவது நாளில், பாஜகவுக்கு ரூ.1 கோடி நிதியளித்தது சோம் டிஸ்டிலரீஸ் நிறுவனம். அக்டோபர், டிசம்பரில் மேலும் ரூ.1 கோடி நிதியளித்தது இந்நிறுவனம். அடுத்த ஆண்டுக்கு, மே 2021இல் ரூ.2 கோடி நிதியளித்தது சோம் டிஸ்டிலரீஸ். ஆனால், 5 மாதங்கள் கழித்து, மத்திய அரசின் காம்பெட்டிஷன் கமிஷன் இந்நிறு வனத்தில் ரெய்டு நடத்தி, முறைகேடு கள் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டி யது. அதைத் தொடர்ந்து இந்நிறு வனம் பாஜகவுக்கு மேலும் ரூ.1 கோடி நிதியளித்தது. இவை அனைத்தும் தேர்தல் பத்திரங்களாக அல்லாத நன்கொடைகள். அடுத்த ஆண்டில் வருமான வரித்துறை சோதனை இந்நிறுவனத்தில் நடத்தப்பட்டது. 2023 ஜூலையில் ரூ.1 கோடியும், அக்டோபரில் மேலும் ரூ.2 கோடி யும், தேர்தல் பத்திரங்களாக இந்நிறு வனம் பாஜகவிற்கு நிதியளித்தது. கொடுக்கவில்லை என்றாலோ, கொடுத்தது போதாது என்றாலோ மிரட்டிக் கூடுதல் நிதி வாங்கப்பட்டி ருக்கிறது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.
ஐஆர்பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர்
ஐஆர்பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்ஸ் என்ற மும்பை யைச் சேர்ந்த நிறுவனம், 2013-14இல் பாஜகவிற்கு ரூ.2.3 கோடி நிதியளித்தது. அடுத்த ஆண்டில் (பாஜக ஆட்சிக்கு வந்ததும்!) இந்த நிறுவனத்தில் மத்திய புலனாய்வுத் துறை சோதனை நடத்தியது. அந்த ஆண்டில் இந்த நிறுவனம் பாஜக விற்கு அளித்த நன்கொடை ரூ.14 கோடியாக உயர்ந்தது. 2014 இலிருந்து 2023 வரையான காலத் தில் இந்த நிறுவனமும், இதன் துணை நிறுவனங்களான மாடர்ன் ரோட் மேக்கர்ஸ், ஐடியல் ரோட் பில்டர்ஸ் ஆகியவை பாஜகவிற்கு அளித்த நிதி மொத்தம் ரூ.84 கோடி. இவை யெல்லாம் தேர்தல் பத்திரங்கள் அல்லாத முறைகளில் வழங்கப்பட்ட நிதிகள். 2022 ஜனவரியில் ரூ.25 கோடியும், நவம்பரில் ரூ.15 கோடியும் தேர்தல் பத்திரங்களாக, மாடர்ன் ரோட் மேக்கர்ஸ் நிறுவனத்தால் பாஜக விற்கு வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் வெளியான சிஏஜி அறிக்கை, ஹாப்பூர்-மொராதாபாத் நெடுஞ்சாலைத் திட்டத்தை இந்த நிறுவனத்திற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வழங்கியதில் ஊழல் நடைபெற்றிருப்பதாகக் குற்றம் சாட்டி யுள்ளது. அதாவது, இந்த நிறு வனத்திற்கு 68 சதவீத குறைவான பிரி மியம் நிர்ணயிக்கப்பட்டதாக அந்த அறிக்கை கூறியுள்ளது. நிறுவனத்தின் அளவுக்கேற்ப கொடுக்காமல் குறைத்து நிதி கொடுக் கிறாயா என்று மிரட்டி, அதிக நிதி வசூ லித்து, பின் மேலும் அதிக நிதியளித்த தற்குக் கைம்மாறாக முறைகேடாக அரசுத் திட்டங்கள் வழங்கப்பட்டுள் ளன. அல்லது, அரசுத் திட்டங்களை வழங்குவதற்காகவே அதிக நிதி வசூ லிக்கப்பட்டுள்ளது.
ஐலேப்ஸ் டெக்னாலஜீஸ்
ஐலேப்ஸ் டெக்னாலஜீஸ் என்பது ஐதராபாத்தைச் சோந்த நிறுவனம். இந்நிறுவனத்திற்குத் தொடர்பு டைய டிவி9 என்ற தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்த ரவி பிரகாஷ் என்பவர் 2019இல் பதவி விலகினார். அப்படி விலகும்போது, தேசிய கம்பெனிகள் சட்டத் தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை மீறியது உட்பட முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகக் குற்றம் சாட்டி னார். அந்த மாதத்திலேயே இந்த நிறுவனம் பாஜகவிற்கு ரூ.5 கோடி நன்கொடை அளித்தது! நாக்பூரின் புகழ்பெற்ற உணவு நிறுவனம் ஹால்டிராம். இந்த நிறுவனத்தில் டிசம்பர் 2018இல் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், ரூ.150 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர். அடுத்த ஆண்டில் ரூ.31.11 லட்சத்தையும், அதற்கடுத்த ஆண்டில் ரூ.25 லட்சத்தையும் இந்த நிறுவனம் பாஜகவிற்கு அளிக்கிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான அயோத்ய ராமி ரெட்டியைத் தலைவராகக் கொண்ட ராம்கி குழுமத்தைச் சேர்ந்தது சென்னை கிரீன் உட்ஸ் என்ற நிறுவனம். பல்வேறு முறைகேடுகளைச் செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்த நிறுவனம், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சொத்துக் குவிப்பு வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 2021 ஜூலையில், ராம்கி குழுமத்துக்குச் சொந்தமான இடங்க ளில் வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டன. அடுத்த நிதியாண்டில், சென்னை கிரீன் உட்ஸ் நிறுவனம் பாஜகவிற்கு ரூ.1 கோடி நிதியளித்தது.
அக்ரோசெல் இண்டஸ்ட்ரீஸ்
அக்ரோசெல் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்திற்கு, குஜராத்தின் கட்ச் பகுதியில் 18 ஆயிரம் ஏக்கர் நிலம் முறைகேடாக ஒதுக்கப்பட்டதாக 2014இல் சிஏஜி அறிக்கை குற்றம் சாட்டியது. அந்த நிறுவனம் 2019-20இல் ரூ.95 லட்சம் என்று தொடங்கி, ரூ.5 லட்சம், ரூ.3 கோடி, ரூ.1.72 கோடி என்று அடுத்தடுத்த ஆண்டுகளில் பாஜகவிற்கு நிதியளித்திருக்கிறது. 2014 சிஏஜி அறிக்கைக்குப்பின் 5 ஆண்டுகள் கழித்து அந்த நிறுவனம் நிதியளிக்கத் தொடங்கியிருப்பதால், வேறு பலன்கள் அதன்பின் அளிக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்தா லும், விபரங்கள் கிடைக்கவில்லை. இதைப் போலவே ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், வாதவன் க்ளோபல் கேபிடல் போன்ற பல நிறுவனங்களும் இவ்வாறு, ரெய்டு போன்ற நடவடிக்கைகள் நடந்து பல ஆண்டுகளுக்குப் பின் பாஜகவிற்கு நன்கொடை அளித்திருக்கின்றன. பழைய கோப்புகளை தூசி தட்டி எடுத்து மீண்டும் நடவ டிக்கை எடுப்பதாக மிரட்டப்பட்டார்களா என்று தெரிய வில்லை.
எம்ஜிஎம் குழுமம்
சென்னையைச் சேர்ந்த எம்ஜிஎம் குழுமம் என்பது, மனுவேல் ஞான முத்து என்பவரால் தொடங்கப் பட்டது. அவருக்குப்பின் எம்ஜிஎம் மாறன் அதன் தலை வரானார். அந்நிறுவனத்தின்மீது ஏராளமான குற்றச்சாட்டு கள் உள்ளன. மத்திய அரசின் பல துறைகளும் சோதனை கள் நடத்தியுள்ளன. அவர் ஏராளமான நிதியை சட்டவிரோ தமாக சைப்ரஸ் நாட்டுக்குப் பரிமாற்றம் செய்து, அந்நாட் டின் குடியுரிமையையும் 2016இல் பெற்றார் என்று அம லாக்கத் துறை குற்றம் சாட்டியது. 2021 ஏப்ரலில் எம்ஜிஎம் குழுமத்திடமிருந்து ரூ.1 கோடியும், அதன் துணை நிறு வனமான சதர்ன் அக்ரோஃப்யூரேன் என்பதிடமிருந்து ரூ.40 லட்சமும் பாஜக பெற்றிருக்கிறது.
விசாகா இண்டஸ்ட்ரீஸ்
தெலுங்கானா காங்கிரசின் தலைவர்களில் ஒரு வராக இருந்தவர் விவேக் வெங்கடசாமி. இவர் 2019இல் காங்கிரசிலிருந்து விலகி, பாஜகவில் சேர்ந்தார். அதன்பின் இவருக்குச் சொந்தமான விசாகா இண்டஸ்ட்ரீஸ் குழுமம் 2020-21இல் ரூ.3 கோடியும், 2021-22இல் ரூ.3 கோடியும் பாஜகவுக்கு நிதியளித்தது. 2023 நவம்பரில் இவர் பாஜகவைவிட்டு விலகிவிட்டார். அடுத்த சில நாட்களில் இவருக்குச் சொந்தமான இடங்க ளில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. அதாவது பாஜக வைவிட்டு விலகியதுமே புனிதத் தன்மை போய்விடுகிறது!
எஸ்என் பவே
போலியான வங்கி உத்தரவாத ஆவணங்களைச் சமர்ப்பித்து ஒப்பந்தம் பெற்றதற்காக, மணிப்பூ ரைச் சேர்ந்த எஸ்என் பவே என்ற நிறுவனத்தை, தேசிய நெடுஞ்சாலை, உட்கட்டமைப்பு வளர்ச்சிக் கழகம் 5 ஆண்டுகளுக்குத் தடை செய்து 2016இல் உத்தரவிடு கிறது. ஆனால், 2019இல் பிரதம மந்திரி கிராமீன் சதக் யோஜனா திட்டத்தின்கீழ் சாலைகள் அமைக்க 8 ஒப் பந்தங்கள் இந்த நிறுவனத்திற்கு அளிக்கப்படுகின்றன. 2021-22இல் அந்த நிறுவனம் பாஜகவிற்கு ரூ.3.47 கோடி நிதியளிக்கிறது. அதாவது, இது போஸ்ட்பெய்ட் லஞ்சம்!
கன்ஷ்யாம் ஃபார்மசூட்டிகல்ஸ்
2020 கோவிட் பெருந்தொற்று நேரத்தில், அசாம் மாநில பாஜக அரசு, அதன் சுகாதாரத்துறை அமைச்சரான ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு நெருக்க மான சில குறிப்பிட்ட மருந்து நிறுவனங்களுக்கு, மருந்துப் பொருட்கள் விநியோக ஒப்பந்தங்களை அளித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அப்படியான நிறுவனங்களில் ஒன்று கன்ஷ்யாம் ஃபார்மசூட்டிகல்ஸ். அப்படிக் குறுக்கு வழியில் ஒப்பந்தங்களை பாஜக அரசிடமிருந்து பெற்ற இந்த நிறுவனம் அந்த ஆண்டிலேயே (2020-21) ரூ.75 லட்சமும், அடுத்த ஆண்டில் ரூ.1.25 கோடியும் பாஜகவுக்கு நிதியளித்தது.
திவான் ஹவுசிங்
திவான் ஹவுசிங் ஃபைனான்சியல் நிறுவனம் மக்க ளிடமிருந்து திரட்டிய ரூ.31 ஆயிரம் கோடி நிதியைக் கையாடல் செய்துவிட்டதாக, புலனாய்வு இணையத்தள மான கோப்ரா போஸ்ட், 2019இல் குற்றம் சாட்டியது. அத்து டன், தீவிரவாதச் செயல்களுக்கும் நிதியுதவி அளிப்பதாக வும் அது குற்றம் சாட்டியது. இந்த திவான் ஹவுசிங் நிறு வனம் வாதவன் குழுமத்தைச் சேர்ந்தது. அதே குழுமத்தின் மற்றொரு நிறுவனமான வாதவன் க்ளோபல் கேபிடல், இந்த கோப்ரா போஸ்ட் செய்தி வெளியான சில மாதங்க ளில் ரூ.10 கோடியை பாஜகவிற்கு அளித்திருக்கிறது. 2014-19 காலத்தில் இந்தக் குழுமம் பாஜகவிற்கு அளித்தி ருக்கிற மொத்த நிதி ரூ.29.5 கோடி!
ராம்கோ சிமெண்ட்ஸ்
தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிமெண்ட் நிறுவனங்க ளில் ஒன்று ராம்கோ சிமெண்ட்ஸ். 2020 டிசம்பரில், இந்த நிறுவனத்தின்மீது மத்திய அரசின் காம்பெட்டிஷன் கமிஷன் ரெய்ட் நடத்தியது. (எல்லா ரெய்டையும் அம லாக்கத்துறையும், சிபிஐயுமே நடத்தினா எப்படி? ஒரு மாறுதலுக்கு இருக்கட்டுமேன்னு...!) அடுத்த 3 மாதங்க ளுக்குள் ரூ.2 கோடியை ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் பாஜகவிற்கு அளித்தது. அடுத்த ஆண்டில் மேலும் ரூ.50 லட்சத்தை பாஜகவுக்கு அளித்த அந்த நிறுவனம், 2023 ஏப்ரலில் ரூ.5 கோடியும், நவம்பரில் ரூ.20 கோடியும் தேர்தல் பத்திரங்களாக பாஜகவுக்கு அளித்தது.
பிஜிஆர் மைனிங் இன்ஃப்ரா
பிஜிஆர் மைனிங் இன்ஃப்ரா என்பது, ஹைதரா பாத்தைச் சேர்ந்த சுரங்க நிறுவனம். இந்த நிறுவனம் என்டிபிசி அதிகாரிகளுக்கு, ஹவாலா பரிவர்த்தனைகள் மூலமாக லஞ்சம் அளித்ததாக, இதன் இயக்குனர் மீதும், அவரது நண்பர் மீதும் 2017இல் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. சிபிஐ வழக்கைக் காரணமாகச் சொல்லி, இந்த நிறுவனத்திற்கு ஜார்க்கண்ட்டிலும், சத்தீஸ்கரிலும் வழங்கப்பட்டிருந்த சுரங்க ஒப்பந்தங்களை 2019 ஜூலை யில் என்டிபிசி நிறுவனம் ரத்து செய்தது. அப்படி ரத்து செய்யப்பட்ட சில மாதங்களில், அதாவது 2019 அக்டோப ரில், பிஜிஆர் நிறுவனம் பாஜகவிற்கு ரூ.5 கோடி நிதி யளித்தது. ஒப்பந்தத்தை ரத்து செய்த அதே என்டிபிசி, கடந்த ஆண்டு பிப்ரவரியில், ரூ.20,400 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜார்க்கண்ட் சுரங்க ஒப்பந்தத்தை இந்த நிறுவனத்திற்கு வழங்கியது. இதுதான் அதுவரை வழங்கப்பட்டதிலேயே மிகப்பெரிய சுரங்க ஒப்பந்தம்!
அஸ்ட்ரால்
அகமதாபாத்தைச் சேர்ந்த குழாய் தயாரிக்கும் நிறுவனம் அஸ்ட்ரால். இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களில் 2021 நவம்பர் 24 அன்று வருமான வரித்துறைச் சோதனை நடத்தப்படுகிறது. அடுத்த இரு மாதங்களில், இந்த நிறுவனம் பாஜகவிற்கு ரூ.1 கோடி நிதியளித்தது.
ஹீரோ மோட்டோகார்ப்
ஹீரோ மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்கிற ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் 2022 மார்ச்சில் வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டன. அந்நிறுவனத்தின் அலுவலகங்கள் மட்டுமின்றி, அதன் உரிமையார்களின் வீடுகள் உட்பட சோதனை கள் நடத்தப்பட்டன. ரூ.1,000 கோடி அளவுக்கு போலி யான செலவுக் கணக்குகள் காட்டப்பட்டுள்ளதாகவும், ரூ.100 கோடி அளவுக்கான நிதி வேறு செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றங்கள் சாட்டப்பட்டன. ஆறு மாதங்கள் கழித்து, இந்த நிறுவனம் ரூ.20 கோடியை தேர்தல் பத்திரங்களாக பாஜகவுக்கு வழங்கி யது. பாஜகவுக்கு மட்டுமே அப்போது இது நிதியளித்தது. அதற்கு முன்பும், பின்பும் இந்த நிறுவனம் தேர்தல் பத்தி ரங்களை வாங்கியதே இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.
யுனைடெட் பாஸ்பரஸ்
யுனைட்டெட் பாஸ்பரஸ் என்ற நிறுவனம் 2019 அக்டோபரில் ரூ.10 கோடியை தேர்தல் பத்திரங்க ளாக பாஜகவுக்கு அளித்திருக்கிறது. ஆனால், 2020 ஜனவரியில் இந்நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டு, வரி ஏய்ப்பும், கணக்கு முறைகேடுகளும் நடைபெற்றிருப்பதாக அறிவிக்கப் படுகிறது. 2022 நவம்பரில் இந்த நிறுவனம் மேலும் ரூ.50 கோடி நிதியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு இந்நிறுவனம் அளித்தது.
ஹிண்டால்கோ
ஆதித்ய பிர்லா குழுமத்தின் ஹிண்டால்கோ நிறு வனத்தின் துணை நிறுவனமான உத்கல் அலு மினா 2022 டிசம்பரில் ரூ.35 கோடியை தேர்தல் பத்தி ரங்களாக பாஜகவுக்கு அளித்திருக்கிறது. அக்டோபர் 2023இல் மத்திய மாநில அரசுகளின் கூட்டு நிறுவன மான ஒடிசா மைனிங் கார்ப்பரேஷனின் நீண்டகால ஒப்பந்தம் ஹிண்டால்கோவுக்கு அளிக்கப்படுகிறது. அடுத்த மாதத்தில் மீண்டும் ரூ.40 கோடியை பாஜக விற்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக இந்த உத்கல் அலு மினா அளிக்கிறது. ஹிண்டால்கோ நிறுவனமே ரூ.60.5 கோடி அளித்தது, தேர்தல் பத்திரங்கள் அல்லாத நிதிகள் பட்டிய லில் இடம் பெற்றிருக்கிறது. இவை தவிர, ஆதித்ய பிர்லா குழுமத்தின் க்ராசிம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் ரூ.23 கோடியைத் தேர்தல் பத்திரங்களாக பாஜகவிற்கு அளித்திருக்கிறது.
ருங்டா சன்ஸ்
கொல்கத்தாவைச் சேர்ந்த ருங்டா சன்ஸ் என்ற நிறுவனத்தின் மூன்று அலகுகளில், 2023 டிசம்பரில் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளப்படுகிறது. 2024 ஜனவரி 11 அன்று, இந்த நிறுவனம் பாஜகவிற்கு ரூ.50 கோடியை தேர்தல் பத்திரங்களாக அளிக்கிறது.
சன் ஃபார்மா
மருந்துத் தயாரிப்பு நிறுவனமான சன் ஃபார்மா, 2019 ஏப்ரலில் ரூ.21.5 கோடியை பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்களாக வழங்குகிறது. ஆனால், மே மாதத்தில், அந்நிறுவனத்தில் சேவை வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக ஜிஎஸ்டி புலனாய்வுத்துறை குற்றம் சாட்டுகிறது. உடனடியாக மேலும் 7.10 கோடியை அந்த நிறுவனம் பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்களாக அளிக்கிறது.
டிவிஸ் லேப்ஸ்
ஹைதராபாத்தைச் சேர்ந்த டிவிஸ் லேப்ஸ் என்பது, மருந்து உட்பொருட்களைத் தயாரிக்கிற உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்று. இந்த நிறுவனத்தின்மீதும் வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டன. ரூ.30 கோடி நிதியை இந்த நிறுவனம் பாஜகவிற்கு தேர்தல் பத்திரங்களாக வழங்கியுள்ளது.
ஹால்டியா
ஹால்டியா எனர்ஜி என்ற மேற்கு வங்க நிறு வனத்தின்மீது மத்தியப் புலனாய்வுத்துறை சோதனைகளை மேற்கொண்டது. சோதனைக்கு முன் பாஜகவிற்கு ரூ.16 கோடி நிதியளித்திருந்த அந்த நிறு வனம், சோதனைக்குப்பின் ரூ.65 கோடியை பாஜக வுக்கு அளித்தது. இவை அனைத்தும் தேர்தல் பத்தி ரங்களாக அளிக்கப்பட்டன.
வெல்ஸ்பன்
துணி, குழாய்கள், எஃகு போன்ற துறைகளில் வணிகம் புரிகிற மும்பை நிறுவனம் வெல்ஸ்பன். இந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை ரெய்ட் 2017 ஜூலையில் நடத்தப்பட்டது. ஏப்ரல் 2019இலிருந்து, இதன் பல துணை நிறுவனங்களின் மூலமாகவும் மொத்தம் ரூ.42 கோடி தேர்தல் பத்திர நிதியை இது பாஜகவிற்கு அளித்திருக்கிறது.
“முதல் தவணை” ரூ.170 கோடி
2014 தேர்தலில் எந்த டிஎல்எஃப் குழுமத்தை ஊழல் என்று சொல்லி வாக்குக் கேட்டதோ, அதே குழுமத்திடமிருந்தும் ரூ.170 கோடியை தேர்தல் பத்திரங்களாக வசூலித்திருக்கிறது. பாஜக. அந்த நிறு வனம் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ரா வினுடையது என்பதைத்தான் பெரிய செய்தியாக்கி 2014இல் பரப்புரை மேற்கொண்டது பாஜக. ஆனால் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளுக்கு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. 2018இல் ஹரியானாவில் பாஜக ஆட்சி ஏற்பட்டதும் வத்ரா, 2008இல் ஹரியானாவின் காங்கிரஸ் முதல்வராக இருந்த புபீந்தர் சிங் ஹூடா ஆகியோரைக் கைது செய்தது. டிஎல்எஃப் நிறு வனங்களில் தேடுதலும் நடத்தப்பட்டு, வேறு சில நிலப் பரிவர்த்தனைகளிலும் ஊழல் நடந்திருப்பதாக அறி வித்தது. அடுத்த சில மாதங்களில் “முதல் தவணை” நிதியை டிஎல்எஃப் குழுமம் தேர்தல் பத்திரங்களாக பாஜகவிற்கு அளித்தது. தொடர்ந்து 2020, 21, 22 ஆண்டுகளிலும் சேர்த்து மொத்தம் ரூ.170 கோடி நிதியை அந்நிறுவனம் பாஜகவிற்கு அளித்தது. அதன்பின் 2023இல் இது தொடர்பான வழக்கு பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றத்தில் விசா ரணைக்கு வந்தபோது, டிஎல்எஃப்பின் பரிவர்த்தனை களில் எவ்வித விதி மீறலும் நடக்கவில்லை என்று பாஜக அரசு தெரிவித்துவிட்டது. இது நடந்தது 2023 ஏப்ரலில். அதன்பின் இந்தக் குழுமம் பாஜகவிற்கு நிதியளிக்கவில்லை. 2023 நவம்பரில் சூப்பர்டெக் குழு மம் என்ற நிறுவனத்தில் பணச்சலவை தொடர்பான தேடுதல் வேட்டையின்போது, குருகிராமில் உள்ள டிஎல்எஃப் நிறுவனத்திலும் அமலாக்கத்துறை தேடு தல் நடத்தியது என்பதும் குறிப்பிட வேண்டிய செய்தி.
ப்ரிபெய்டும் போஸ்ட்பெய்டும்
தேர்தல் பத்திரங்களை அதிகம் வாங்கிய இரண்டாவது நிறுவனமான ‘மேகா என்ஜினி யரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்’ நிறுவனம், அதன் துணை நிறுவனங்களான வெஸ்டர்ன் யுபி பவர் ட்ரான்ஸ்மிஷன்ஸ், எஸ்இபிசி பவர், எவி ட்ராஸ் ஆகியவை இணைந்து பாஜகவுக்கு மட்டும் ரூ.669 கோடியை வழங்கியிருக்கின்றன. பெரிய திட்டங்க ளுக்கான ஒப்பந்தங்களை பெற்ற ஒவ்வொரு முறை யும், அதற்குச் சற்று முன்னதாகவோ, பின்னதாகவோ மிகப்பெரிய தொகையை இந்நிறுவனம் தேர்தல் பத்தி ரங்கள் மூலம் வாங்கியிருக்கிறது. 2019 ஏப்ரலிலிருந்து அக்டோபர் வரையான காலத்தில், 5 தவணைகளில் ரூ.125 கோடி நிதியை மேகா என்ஜினியரிங் நிறுவனம் பாஜகவிற்கு அளித்துள்ளது. 2019 நவம்பரில் ரூ.4,358 கோடிக் கான போலாவரம் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை இந்நிறுவனம் கைப்பற்றியது. 2020 அக்டோபரில், ஜம்மு காஷ்மீரில் ஆசியாவின் மிகப்பெரிய சுரங்கச் சாலையை அமைக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தத்தைப் பெற்றது. 2021 ஏப்ரலிலிருந்து, 2023 ஜனவரி வரை யான காலத்தில் இந்த நிறுவனம் ரூ.194 கோடியை பாஜகவிற்கு அளித்துள்ளது. 2023 மார்ச்சில், மும்பையில் புல்லட் ரயில் நிலை யம் அமைக்க ரூ.3,681 கோடி ஒப்பந்தத்தை இந்நிறு வனம் பெற்றது. 2023 ஏப்ரலிலிருந்து நவம்பர் வரையான காலத்தில், மேகா என்ஜினியரிங் ரூ.265 கோடியும், வெஸ்டர்ன் யுபி பவர் ட்ரான்ஸ்மிஷன்ஸ் ரூ.80 கோடியும், எஸ்இபிசி ரூ.5 கோடியும் ஆக, ரூ.350 கோடி நிதி பாஜகவிற்கு அளித்துள்ளன. அரசின் திட்டங்களை அளிக்க லஞ்சம் வாங்கத் தேர்தல் பத்திரங்களை பாஜக பயன்படுத்திக்கொண்டது என்பதற்கான சில உதாரணங்கள்தான் இவை.